தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து நேற்று நள்ளிரவுடன் 6 மாதங்களாகின்றன.
அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது இராஜினாமாவுக்குக் காரணம்.
எதிர்காலத்தில் தனது பட்டதாரி சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி பதவி விலகினார்.
ஆனால், 6 மாதங்கள் கடந்தும், இதுவரை பட்டப்படிப்பு சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை.
ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் ஆனால் இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.