நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (15) கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிரின்சஸ் ரோஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 26 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
