நீதவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
காலி நீதவான் ஐ.என்.என். குமார கமகே, கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன, கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண, பலபிட்டிய நீதவானாகவும், ஆர்.டி. ஜனக, கொழும்பு மேலதிக நீதவானாகவும் மாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 நீதவான்கள், மேலதிக நீதவான்கள் மேலதிக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.