ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடு குளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் அமைக்கப்பட்ட இரணைமடு குளம் மற்றும் இரணைமடு குள ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை பார்வையிட்டு அவற்றின் மூலம் விவசாயிகள் பெறும் பயன்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
குறித்த விஜயத்தின் போது வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் பிரிவு) என்.சுதாகரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.கருணாநிதி, கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் கே.பிரகாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் இரணைமடு குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர், திருவையாறு ஏற்று நீர்ப்பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

