இலங்கை பொதுஜன பெரமுனவின் புதிய அரசியல் திட்டமான “மகிந்த காற்றில் நாமலின் வாசனை” எனும் அதிரடியான அரசியல் உதயம் விரைவில் தொடங்கப்படும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு மஹிந்த தலைமையிலான அரசு தோல்வியடைந்த பின்னர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் “மகிந்த காற்று” தொடங்கியது போலவே, “மகிந்த காற்றில் நாமலின் வாசனை” எனும் அதிரடியான அரசியல் உதயம் இருக்கும் என இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதேவேளை விரைவில் அரசியல் சூறாவளி ஒன்று உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.