Thursday, September 18, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சி இன்று ஆரம்பம்!

ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சி இன்று ஆரம்பம்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சியான “Industry Expo 2025” இன்று ஆரம்பமாகிறது.

கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஏற்பாடு செய்துள்ள “Industry Expo 2025” இன்று (18) ஆரம்பமாகிறது.

அதன்படி, இதன் ஆரம்ப விழா இன்று காலை BMICH இல் கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

இலங்கை முழுவதிலுமிருந்து 25 தொழில்துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்களால் முன்வைக்கப்படும் 450 கண்காட்சி கூடங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால் வழங்கப்படும் புத்தாக்க வலயம் (Innovation Arena), பாடசாலை தொழில்முனைவோர் வட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி கூடங்கள், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சேவைக் கூடங்கள் (NERD) மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தொழில்களை ஆதரிக்கும் வங்கிகளால் ஒரே கூரையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட “One Stop Service” ஆகியவை அடங்கும்.

அதன்படி, இந்தக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular

ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சி இன்று ஆரம்பம்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சியான “Industry Expo 2025” இன்று ஆரம்பமாகிறது.

கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஏற்பாடு செய்துள்ள “Industry Expo 2025” இன்று (18) ஆரம்பமாகிறது.

அதன்படி, இதன் ஆரம்ப விழா இன்று காலை BMICH இல் கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், கைத்தாழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

இலங்கை முழுவதிலுமிருந்து 25 தொழில்துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்களால் முன்வைக்கப்படும் 450 கண்காட்சி கூடங்களைக் கொண்ட இந்த கண்காட்சியில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால் வழங்கப்படும் புத்தாக்க வலயம் (Innovation Arena), பாடசாலை தொழில்முனைவோர் வட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி கூடங்கள், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சேவைக் கூடங்கள் (NERD) மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தொழில்களை ஆதரிக்கும் வங்கிகளால் ஒரே கூரையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட “One Stop Service” ஆகியவை அடங்கும்.

அதன்படி, இந்தக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular