Saturday, September 27, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகாலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை!

காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை!

காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறு பகுதிக்கு மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் மேற்பார்வையில் சுமார் 75.63 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் பகுதியில் ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்பகுதியை பகுதியை குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், தமித் சந்திரசேகர (UNDP திட்ட பணிப்பாளர்), மாவட்ட மேலதிக அரசாங் அகதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் அஜிதா பிரதீபன், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.கருணாநிதி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த விவசாய சமூக பண்ணை மூலம் குறித்த பகுதியின் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வருடம் முழுவதும் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் குறித்த பகுதியின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் எனவும், இது சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular

காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை!

காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறு பகுதிக்கு மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் மேற்பார்வையில் சுமார் 75.63 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் பகுதியில் ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்பகுதியை பகுதியை குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், தமித் சந்திரசேகர (UNDP திட்ட பணிப்பாளர்), மாவட்ட மேலதிக அரசாங் அகதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் அஜிதா பிரதீபன், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.கருணாநிதி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த விவசாய சமூக பண்ணை மூலம் குறித்த பகுதியின் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வருடம் முழுவதும் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் குறித்த பகுதியின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் எனவும், இது சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular