அக்கறையான் போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை
கிளிநொச்சி, அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்கந்தபுரம், ஈச்சங்குளம் பகுதியில் முற்பகை காரணமாக 24 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்த கௌரிராஜன் கஜன் என்ற ஒரு பிள்ளையின் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அக்கறையான் போலீசார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக அக்கறையான் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.