(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக கற்பிட்டி மக்களின் முழுமையான பங்களிப்புடன் பிரயிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் பல வருட முயற்சியின் ஊடாக புதிய ஜனாஸா வாகனம் ஒன்று இலவச சேவைக்காக தயார் செய்யப்பட்டுள்ளது
மேற்படி இலவச ஜனாஸா சேவை வாகனத்தின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (2025/11/22) பிற்பகல் 4 மணிக்கு மஸ்ஜிதுல் குபா ( காட்டு பாவா) பள்ளிவாசலில் ஜனாஸா சங்கத் தலைவர் ஏ.ஜே.எம் தாரிக் தலைமையில் நடைபெற உள்ளதாக செயலாளர் எம் எஸ் எம் அஸ்லம் அறிவித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் ஜனாஸா வாகனத்தின் சேவைகள் மூலம் முஸ்லீம் சமூகம் பல நன்மைகளை அடைந்துவரும் நிலையில், கல்பிட்டி பகுதியிலும் இவ்வாறான ஒரு ஜனாஸா வாகன சேவை ஆரம்பிக்கப்படுவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


