Tuesday, November 25, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசெம்மஞ்சள் நிறமாக மாறிய பாராளுமன்றம்!

செம்மஞ்சள் நிறமாக மாறிய பாராளுமன்றம்!

பாராளுமன்றத்திற்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது எவ்வகையிலோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான முன்மொழிவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் நேற்று (24) இடம்பெற்றன.

அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் செம்மஞ்சள் நிறம் அல்லது செம்மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை நேற்று (24) அணிந்து வந்திருந்தனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, மற்றும் எதிர்க்கட்சியின் கௌரவ முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கும் அடையாள இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் ஒன்றியத்தினால் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

16 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பால்நிலைசார் வன்முறைக்கு (GBV) எதிராக வருடாந்தம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடத்தப்படும் ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். இது பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் தொடங்கி மனித உரிமைகள் தினத்தன்று முடிவடைகிறது. உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அகற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அவர்களின் 16 நாட்கள் வேலைத்திட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருள், “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்பதை வலியுறுத்துகிறது.

இதனுடன் இணைந்ததாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒரு விசேட ஊடகச் சந்திப்பும் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், சட்டக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது ஒரு சாதகமான நிலைமையாகும் என்றும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதைச் சமூகமயமாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் குறிப்பிடுகையில்,

2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 315 மில்லியன் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தார். இலங்கையிலும் இது நிகழ்கிறது என்றும், குறிப்பாக டிஜிட்டல் வெளியில் அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, உயர்சபையான பாராளுமன்றத்திலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்காக நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவைக் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்கான முதலாவது முன்னுதாரணத்தை பாராளுமன்றம் என்றவையில் நாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசியலில் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி-இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல குறிப்பிடுகையில், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஐ.நா. பெண்கள் வேலைத்திட்டம் (UN women) நடத்திய அண்மைய ஆய்வில், பெண்கள், சிறுமிகள் உட்பட அனைத்து தனிநபர்களும் அடிக்கடி பல்வேறு வகையான இணையத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, போலிக் கணக்குகளை உருவாக்குவது 36.9% என்றும், ஆபாசமான தகவல்கள்/வீடியோக்களைப் பகிர்வது 36.9% என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், இந்த நிலைமையை மாற்றி ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்திற்கு (UNFPA) அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

செம்மஞ்சள் நிறமாக மாறிய பாராளுமன்றம்!

பாராளுமன்றத்திற்குள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது எவ்வகையிலோ துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான முன்மொழிவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் நேற்று (24) இடம்பெற்றன.

அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் செம்மஞ்சள் நிறம் அல்லது செம்மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை நேற்று (24) அணிந்து வந்திருந்தனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, மற்றும் எதிர்க்கட்சியின் கௌரவ முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கும் அடையாள இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் ஒன்றியத்தினால் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

16 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பால்நிலைசார் வன்முறைக்கு (GBV) எதிராக வருடாந்தம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடத்தப்படும் ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். இது பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் தொடங்கி மனித உரிமைகள் தினத்தன்று முடிவடைகிறது. உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அகற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அவர்களின் 16 நாட்கள் வேலைத்திட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருள், “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்பதை வலியுறுத்துகிறது.

இதனுடன் இணைந்ததாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒரு விசேட ஊடகச் சந்திப்பும் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், சட்டக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது ஒரு சாதகமான நிலைமையாகும் என்றும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதைச் சமூகமயமாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் குறிப்பிடுகையில்,

2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 315 மில்லியன் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தார். இலங்கையிலும் இது நிகழ்கிறது என்றும், குறிப்பாக டிஜிட்டல் வெளியில் அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, உயர்சபையான பாராளுமன்றத்திலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்காக நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவைக் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்கான முதலாவது முன்னுதாரணத்தை பாராளுமன்றம் என்றவையில் நாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசியலில் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி-இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல குறிப்பிடுகையில், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஐ.நா. பெண்கள் வேலைத்திட்டம் (UN women) நடத்திய அண்மைய ஆய்வில், பெண்கள், சிறுமிகள் உட்பட அனைத்து தனிநபர்களும் அடிக்கடி பல்வேறு வகையான இணையத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, போலிக் கணக்குகளை உருவாக்குவது 36.9% என்றும், ஆபாசமான தகவல்கள்/வீடியோக்களைப் பகிர்வது 36.9% என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும், இந்த நிலைமையை மாற்றி ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கட்சி பேதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்திற்கு (UNFPA) அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular