Monday, February 16, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsக.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பத்திலோ அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டாலோ, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அதற்கமைய, 117 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக மேலும் 4 புதிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: 

011 366 8020 

011 366 8100 

011 366 8013 

011 366 8010 

பரீட்சை ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னிருந்து, பரீட்சை முடிந்து இரண்டு நாட்கள் வரை, அதாவது வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் வரை பாதுகாப்புப் பிரிவினர், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பத்திலோ அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டாலோ, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அதற்கமைய, 117 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக மேலும் 4 புதிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: 

011 366 8020 

011 366 8100 

011 366 8013 

011 366 8010 

பரீட்சை ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னிருந்து, பரீட்சை முடிந்து இரண்டு நாட்கள் வரை, அதாவது வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் வரை பாதுகாப்புப் பிரிவினர், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular