கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டண அறவீடு தொடர்பாக
கொழும்பு மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டபடி, எரிபொருள் நிலையங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கு வந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவீடு 18.03.2026 முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கம் (ஒற்றை/இரட்டை) ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதால், எரிபொருள் நிலையங்களுக்கு அருகிலுள்ள வாகன வரிசைகள் குறைவடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.
எனவே, கொழும்பு மாநகர சபை, நிதி மீதான நிலைக்குழுவில், வாகன நிறுத்துமிடங்களின் முகாமைத்துவ கட்டணம் அறவீட்டை 23.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் வழக்கம் போல் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


