Tuesday, April 28, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News'Rebuilding SriLanka' சட்டபூர்வமானதா? - ஹர்ஷ கேள்வி!

‘Rebuilding SriLanka’ சட்டபூர்வமானதா? – ஹர்ஷ கேள்வி!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” ‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த நிதி “பாதுகாப்பாக” இருப்பதாகக் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறானதொரு நிதி இதுவரை சட்டப்பூர்வமாக நிறுவப்படவே இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின்படி அத்தகைய நிதி நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிதியங்களைத் தவிர ஏனைய பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இந்த ‘நிதியம்’ நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக உருவாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2026 ஏப்ரல் 24 ஆம் திகதிய நிலவரப்படி, சுமார் 9,583 மில்லியன் ரூபாய் இதில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த நிதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களையே வழங்கி வருவதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை பாராளுமன்றத்தின் ஊடாக அத்தகைய நிதி நிறுவப்படாத நிலையில், “பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறப்படும் நிதி எது? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிதியம் தொடர்பாக அதிகாரிகள் “பணியாற்றிக் கொண்டிருப்பதாக” (working on it) கூறுவதிலிருந்தே, இது இன்னும் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.

இல்லாத ஒரு நிதியைப் பற்றிப் பேசுவதை விடுத்து, நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

‘Rebuilding SriLanka’ சட்டபூர்வமானதா? – ஹர்ஷ கேள்வி!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” ‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த நிதி “பாதுகாப்பாக” இருப்பதாகக் தெரிவித்துள்ள கருத்தானது முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறானதொரு நிதி இதுவரை சட்டப்பூர்வமாக நிறுவப்படவே இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்த இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின்படி அத்தகைய நிதி நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டரீதியான நிதியங்களைத் தவிர ஏனைய பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இந்த ‘நிதியம்’ நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக உருவாக்கப்படவில்லை என ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்த நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2026 ஏப்ரல் 24 ஆம் திகதிய நிலவரப்படி, சுமார் 9,583 மில்லியன் ரூபாய் இதில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த நிதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான பதில்களையே வழங்கி வருவதாக ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை பாராளுமன்றத்தின் ஊடாக அத்தகைய நிதி நிறுவப்படாத நிலையில், “பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறப்படும் நிதி எது? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிதியம் தொடர்பாக அதிகாரிகள் “பணியாற்றிக் கொண்டிருப்பதாக” (working on it) கூறுவதிலிருந்தே, இது இன்னும் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என அவர் தெரிவித்தார்.

இல்லாத ஒரு நிதியைப் பற்றிப் பேசுவதை விடுத்து, நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular