Friday, May 15, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவவுனியா மாவட்டத்தில் 150 புதிய வீடுகள் நிர்மாணிப்பு!

வவுனியா மாவட்டத்தில் 150 புதிய வீடுகள் நிர்மாணிப்பு!

வவுனியா மாவட்டத்தில் புதிய வீடுகள் 150 கட்டப்படுகிறது – ஒதுக்கீட்டு நிதி ரூபாய் 150 மில்லியன்

“தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் அரசு ஆரம்பித்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் 150 கட்டப்படுகின்றன.

இதற்காக ரூபாய் 150 மில்லியன் செலவிடப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் வீடில்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் 150க்கு இவ்வருடம் புதிய வீடுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த குடும்பங்கள் 05 ற்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கற்குழி, அவுசதப்பிட்டிய, கலுகுன்னம்மடுவ, கூமான்குளம் மற்றும் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ரூபாய் 10 இலட்சம் வரை செலவிட்டுள்ளது. புதிய வீடுகள் திறந்து வைக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வவுனியா மாவட்டத்தில் 150 புதிய வீடுகள் நிர்மாணிப்பு!

வவுனியா மாவட்டத்தில் புதிய வீடுகள் 150 கட்டப்படுகிறது – ஒதுக்கீட்டு நிதி ரூபாய் 150 மில்லியன்

“தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் அரசு ஆரம்பித்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் 150 கட்டப்படுகின்றன.

இதற்காக ரூபாய் 150 மில்லியன் செலவிடப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் வீடில்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் 150க்கு இவ்வருடம் புதிய வீடுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த குடும்பங்கள் 05 ற்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கற்குழி, அவுசதப்பிட்டிய, கலுகுன்னம்மடுவ, கூமான்குளம் மற்றும் நெடுங்குளம் ஆகிய கிராமங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ரூபாய் 10 இலட்சம் வரை செலவிட்டுள்ளது. புதிய வீடுகள் திறந்து வைக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் என். கமலதாசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular