Thursday, August 6, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகண்டியின் பிரபல பாடசாலையில் மாணவன் போதைப் பொருட்களுடன் கைது!

கண்டியின் பிரபல பாடசாலையில் மாணவன் போதைப் பொருட்களுடன் கைது!

கன்னொருவையில் கைதான ஏ/எல் மாணவன்: பேரதிர்ச்சியில் கண்டி!

கண்டியின் கல்விச் சமூகத்தையே உலுக்கியுள்ள அதிர்ச்சிச் செய்தி ஒன்று பேராதனை, கன்னொருவை பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய வயதில், பேராபத்தை கையில் ஏந்தியபடி உலா வந்த மாணவன் ஒருவனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பிரபல ஆண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வலையில் சிக்கியுள்ளான். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையில், அம்மாணவனின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராதனை கெந்தகடுவ பகுதியைச் சேர்ந்த இந்த மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு அதிகாரிகளையே திகைக்க வைத்துள்ளது. 5 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கன்னொருவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நுட்பமான சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இத்தகைய போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் அதிகரிக்கும் பின்னணியில், பெற்றோர்களும் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Shaahy Products - ABC Malt

Official Instagram

Most Popular

கண்டியின் பிரபல பாடசாலையில் மாணவன் போதைப் பொருட்களுடன் கைது!

கன்னொருவையில் கைதான ஏ/எல் மாணவன்: பேரதிர்ச்சியில் கண்டி!

கண்டியின் கல்விச் சமூகத்தையே உலுக்கியுள்ள அதிர்ச்சிச் செய்தி ஒன்று பேராதனை, கன்னொருவை பகுதியிலிருந்து வெளியாகியுள்ளது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய வயதில், பேராபத்தை கையில் ஏந்தியபடி உலா வந்த மாணவன் ஒருவனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

பிரபல ஆண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி வலையில் சிக்கியுள்ளான். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையில், அம்மாணவனின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராதனை கெந்தகடுவ பகுதியைச் சேர்ந்த இந்த மாணவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு அதிகாரிகளையே திகைக்க வைத்துள்ளது. 5 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கன்னொருவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நுட்பமான சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இத்தகைய போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறதா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் அதிகரிக்கும் பின்னணியில், பெற்றோர்களும் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular