கால் நூற்றாண்டைக் கடந்தும் தமிழ் திரையுலகின் ‘எவர்கிரீன் குவீன்’ ஆக முடிசூடா அரசியாக வலம் வரும் த்ரிஷா, இன்றைக்கும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே திகழ்கின்றார். சினிமா உலகில் எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும், த்ரிஷா பிடித்த அந்த உச்ச இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால், இந்த வெள்ளித்திரை தேவதையின் திரைப்பயணத்தின் பின்னணியில் யாரும் அறியாத ஒரு ஆச்சரியத்தக்க ஜோசியக் கணிப்பு ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், 1999-இல் பிரசாந்த் – சிம்ரன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘ஜோடி’ திரைப்படத்தின் மூலம்தான் த்ரிஷா முதன்முதலில் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது வெறும் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த குட்டிப் பெண் த்ரிஷா, ஏதோ ஒரு ஆர்வத்திலும் அனுபவத்திற்காகவுமே அந்தப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில வினாடிகள் வந்து சென்றார். ஆரம்பத்தில் சினிமா மீது துளியும் ஆர்வமில்லாமல் இருந்தவரை, காலம் மெல்ல மெல்ல மிஸ் சென்னை பட்டத்தை வெல்ல வைத்து, ‘லேசா லேசா’ மற்றும் ‘மௌனம் பேசியதே’ மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இங்குதான் அந்தப் பிரம்மாண்ட திருப்பம் அரங்கேறியது! ‘ஜோடி’ படப்பிடிப்பு தளத்திலேயே த்ரிஷாவின் ஜாதகத்தைக் கணித்த இயக்குநர் பிரவீன் காந்தி, அன்றே அவரது தாயாரிடம் ஒரு அதிர்ச்சி தகவலைக் கூறியிருக்கின்றார். “த்ரிஷா சினிமாவில் சாதாரண ஆளாக வரமாட்டார். நீண்ட காலம் திரையுலகை ஆள்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஒரு மாநிலத்தின் ‘முதலமைச்சர்’ ஆகும் யோகமும் இவருக்கு இருக்கிறது” எனக் கணித்துக் கூறியதாக பிரவீன் காந்தி தற்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே மதுரையில் த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து ரசிகர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரவீன் காந்தியின் இந்த ஜோசியக் கணிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றது. குறிப்பாக, தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதியேற்றுள்ள இந்தச் சூழலில், விஜய் ரசிகர்கள் பிரவீன் காந்தியின் இந்தக் கருத்துக்கு இணையத்தில் பலவிதமான சுவாரஸ்யமான கருத்துக்களைப் பதிவிட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளனர். த்ரிஷாவின் இந்த ராஜயோகக் கணிப்பு நிஜமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


