Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் வானிலை அமைப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள விசேட வானிலை முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடைவிடாது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.

இதற்கு இணையாக நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் வானிலை தீவிரமடையவுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நீடிக்கும்.

மழை ஒருபுறமிருக்க, நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகமும் சடுதியாக அதிகரிக்கவுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இடியுடன் கூடிய மழை தீவிரமடையும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய அதிவேகக் காற்று மற்றும் மிக ஆபத்தான மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் வானிலை அமைப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள விசேட வானிலை முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடைவிடாது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.

இதற்கு இணையாக நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் வானிலை தீவிரமடையவுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நீடிக்கும்.

மழை ஒருபுறமிருக்க, நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகமும் சடுதியாக அதிகரிக்கவுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இடியுடன் கூடிய மழை தீவிரமடையும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய அதிவேகக் காற்று மற்றும் மிக ஆபத்தான மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular