Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 125

இலங்கைக்கு வரவுள்ள கொரியாவின் பாரிய முதலீடு!

0

கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியான் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே நேற்று (2ஆம் தேதி) கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பிரபல கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய அமைச்சர் ஹந்துன்நெத்தி அழைப்பு விடுத்ததுடன், கைத்தொழில் அமைச்சகம் அந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

கொரியாவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் கார்ப்பரேட் வங்கி முறையை (கூட்டுறவு வங்கி முறை) பாராட்டிய அமைச்சர் சுனில் ஹந்துன்நேதி, விவசாயம் மற்றும் உற்பத்தித் தொழில்களை ஒருங்கிணைத்து இலங்கையில் அத்தகைய கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரிய குடியரசின் ஆதரவைக் கோரினார்.

இதற்கு மிகவும் சாதகமாக பதிலளித்த கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியான் லீ, தனது நாட்டில் செயல்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கி முறை கொரிய பொருளாதாரம் அதன் தற்போதைய உயர் நிலையை எட்டுவதற்கு விதிவிலக்கான ஆதரவை வழங்கியுள்ளது என்றும், இலங்கையிலும் அத்தகைய வங்கி முறையை நிறுவ தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறினார்.

கொரியக் குடியரசின் மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைத்து வருவதில் அவர் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இலங்கையில் அந்தத் துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து அந்த தயாரிப்புகளை தெற்காசிய சந்தைக்கு அனுப்பும் வாய்ப்பு குறித்து கவனத்தை ஈர்த்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணை செயல்பாட்டுத் தலைவர் யூன்ஜி காங் மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ரசிது மரகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாம்பியன் ஆன தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி!

0

SLCL மாகாண லீக்கின் முதல் சீசனை தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி வெற்றிகொண்டது.

SLCL மாகாண லீக்கின் முதல் சீசனின் இறுதிப் போட்டி அண்மையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் தம்பபன்னியின் ஸ்கார்பியோஸ் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லயன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணியின் கேப்டன் கிங்கினி கமகே முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தி லயன்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதன்படி, தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை முகமது ஹாலன் பெற்றுக்கொண்டதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை சரித் திசாநாயக்க பெற்றார்.

சரித் திசாநாயக்கவுக்கு ஆட்ட நாயகன் விருதும், இறுதிப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதும், இறுதிப் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் உருவாகியுள்ள புதிய பிரச்சினை!

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வட மாகாண ஆளுநரை இன்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடிய போதே வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளன. மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

இதேவேளை, மனநல பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான, தங்க வைப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என்று வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக அஷ்ரப்!

0

பிரதமர் அலுவலகத்திற்கு மேலதிக செயலாளர் பதவிக்கு நியமித்தல்.

பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராகப் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.பீ.எம்.அஷ்ரப் அவர்களை வெற்றிடமாகவுள்ள மேலதிக செயலாளர் பதவிக்கு நிமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்!

0

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதை கருத்திற்கொண்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மியான்மர் நில நடுக்கம் – 2700ஐ கடந்த உயிரிழப்பு!

0

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 63 வயது மூதாட்டி ஒருவர் 72 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கையும் 2,700 ஆக அதிகரித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2,00-0க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்நிலையில், மியான்மரின் நய்பிடாவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி, 91 மணி நேரத்திற்கு பின், 63 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக்குழு உயிருடன் மீட்டது. இதற்கிடையே, இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 2,719 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ உதவிகளும் மியான்மர் மக்களுக்கு உடனடி தேவையாக உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நுவரெலியாவில் ஆரம்பமான வசந்த விழா!

0

நுவரெலியா வசந்த விழா நேற்று (01) காலை அழகான கலாச்சார அம்சங்கள் மற்றும் பாடசாலை இசைக்குழுக்கள் உட்பட பல அம்சங்களுடன் தொடங்கியது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்னால் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது, இதில் மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நுவரெலியா மாநகர சபையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வசந்த விழா ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும், இதில் குதிரைப் பந்தயம், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம், மலர் கண்காட்சி, பட்டம் விடும் போட்டி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாநகர ஆணையாளர் எச்.எம். பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

0

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஓய்வு பற்றி மனம் திறந்த கிங் கோலி!

0

வரும் 2027 உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்

இந்திய அணி ‘சீனியர்’ வீரர் கோலி 36. கடந்த 2024ல் உலக கோப்பை வென்ற பின், ‘டி-20’ அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 2026ல் இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இவர் பங்கேற்க மாட்டார்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், அதிக சதம் அடித்த வீரரான கோலி (51), 302 போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 2013, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடருடன், ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவார் என நம்பப்பட்டது.

இதுகுறித்து கோலி கூறுகையில்,” தற்போதைக்கு ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை. அடுத்த இலக்கு என்ன என்றால், அதுவும் தெரியாது. ஒருவேளை மீண்டும் உலக கோப்பை வெல்ல முயற்சி செய்வேன்,” என்றார்.

இதனால், வரும் 2027ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெறலாம். 2027ல் இந்தியா சாதித்தால், இருமுறை (2011, 2027) ஒருநாள் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் ஆகலாம். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் கோலி தொடர்ந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

14 ஆண்டுக்கு முன்…

கடந்த 2011, ஏப்ரல் 2ல் மும்பை, வான்கடே மைதானத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் பைனல் நடந்தது. இந்தியா, இலங்கை மோதின. இலங்கையின் (274/6) இலக்கை ‘சேஸ்’ செய்தது இந்தியா. சேவக் (0), சச்சின் (18) ஏமாற்ற, காம்பிர் (97) கைகொடுத்தார். கோலி 35 ரன் எடுத்தார். யுவராஜ் (21), தோனி (91) அசத்தினர். கடைசியில் குலசேகரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, 1983க்குப் பின் இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்தார். தற்போது 14 ஆண்டு ஆன போதும் இந்தியா மீண்டும் சாதிக்க முடியவில்லை.

புத்தளத்தில் சிக்கிய சட்ட விரோத பொருட்கள்!

0

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்துநேற்று முன்தினம் (மார்ச் 30) புத்தளம் பகுதியில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அந்த வீட்டில் விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 21 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.