Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 136

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

0

புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3.00 மீற்றர் வரை உயரக்கூடும். 

எனவே அப்பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடற்பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகரித்த கிரிக்கெட் முறைப்பாடுகள்!

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவு (SISU) 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் கிரிக்கெட் தொடர்பானவை மிக அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளது. 

கிரிக்கெட் தொடர்பாக ஆட்ட நிர்ணயம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவை முக்கியமாக 2024 இல் நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீக் மற்றும் லெஜண்ட்ஸ் கிண்ணப் போட்டிகளுடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது. 

2024 ஆம் ஆண்டில் SISU மொத்தம் 27 முறைப்பாடுகளைப் பெற்றது. இதில் கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மேசைப்பந்து, கபடி, மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் அடங்கும். 

இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 6 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.


SISU, 2019 ஆம் ஆண்டு 24 ஆம் எண் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்தின் பிரிவு 21 இன் கீழ் நிறுவப்பட்டது. 

இப்பிரிவு, விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிப்பது, போட்டிகளை கண்காணிப்பது, விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு விரிவுரைகள் நடத்துவது, சர்வதேச விளையாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவது, மற்றும் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத கையாளுதல், சட்டவிரோத பந்தயம் போன்றவற்றில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய பணிகளை மேற்கொள்கிறது. 

தற்போது, SISU பணிப்பாளர் இல்லாமல் செயல்படுவதாகவும், இதனால் சில குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்பிரிவு சுயாதீனமானதாக இருப்பதால், பதில் பணிப்பாளரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உயர் அதிகாரி ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.

ஈராக் மார்க்கெட் தீ விபத்தில் 50 பேர் பலி!

0

கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரில் உள்ள ஐந்து மாடி கட்டிட ஷாப்பிங் மால் இரவில் தீப்பிடித்து எரிந்தது, இதில் முதலில் ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு உணவகத்தில் தீ பற்றியது. தீ விபத்து ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களில் பலர் மாலில் ஷாப்பிங் செய்தும், உணவருந்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய தீப்பிழம்புகள் தொலைதூரம் வரையில் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இத்தகைய தீவிபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக ஈராக்கின் பஸிட் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அதில் ஒரு உடல் மிகவும் மோசமாக எரிந்ததால் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் ஆரம்ப விசாரணை முடிவுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஎன்ஏ தெரிவித்துள்ளது. ஐஎன்ஏ இன் படி, கட்டிடம் மற்றும் மாலின் உரிமையாளர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் சிக்கிய 13 லட்சம் போதை மாத்திரைகள்!

0

கடந்த 2025 ஜூலை 14 ஆம் திகதி கல்பிட்டி வெல்லமுண்டலம் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் முந்நூற்று நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பது (1,349,640) போதை மாத்திரைகளை ஏற்றிச் சென்ற மூன்று டிங்கி படகுகளுடன் ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.

கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உச்சமுனை கடற்படை பிரிவின் சிறப்பு கப்பல் படை ரோந்து குழுவினரால் கல்பிட்டி, வெல்லமுண்டலம் கடல் பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்படி கடல் பகுதியில் பயணித்த மூன்று (03) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

குறிப்பிட்ட டிங்கி படகிற்குள் பதினெட்டு (18) பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒபோதை மாத்திரைகளுடன் இவ்வாறு ஐந்து (05) சந்தேக நபர்களும் மூன்று (03) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ஹேன, வன்னிமுண்டலம் மற்றும் சின்னக்குடுரிப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

மெழுகு அருங்காட்சியகம் திறந்துவைப்பு!

0

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. 

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

எஹெலேபொல வளவின் ஒரு பகுதியாக இருக்கும் மலைநாட்டு இராஜ்ஜியத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள் மற்றும் கலைகள் இங்கு மெழுகைப் பயன்படுத்தி மீளுருவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் மாத்திரமன்றி பண்டைய உணவகமும் நிறுவப்பட்டுள்ளன. 

வணக்கத்திற்குரிய வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர சங்கராஜ தேரர், வணக்கத்திற்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர், மன்னர் விமலதர்மசூரிய, குசுமாசன தேவி, மொனரவில கெப்பட்டிபொல, தேவேந்திர முலாச்சாரி, ஆளுநர் ராபர்ட் பிரவுன்ரிக், எஹெலேபொல மகாதிகாரம், குமாரிஹாமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட வரலாற்றில் முக்கியமான 35 நபர்களின் உயிரோட்டமான மெழுகு உருவங்கள் இங்கு மீளுருவாக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் பெருமையையும் கண்ணியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கண்டிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகமானது மலைநாட்டு இராஜ்ஜியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்றை தற்போதைய தலைமுறையினருக்கு துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடிய இடமாக இருக்கும். 

கம்பளையில் வசிக்கும் அதுல ஹேரத் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளதோடு ஸ்ரீ தலதா மாளிகையின் எஹெலேபொல வளவு அருங்காட்சியக விசேட திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

சியம் மகா பீடத்தின் மல்வது அனுநாயக்க தேரர்களான வணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர், வணக்கத்துக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரிய அனுநாயக்க தேரர்களான வணக்கத்துக்குரிய வெந்டருவே உபாலி தேரர், வணக்கத்துக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால்காந்த, ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மஜ்மா நகர் தொடர்பில் பா.உ ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை!

0

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..!

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், கந்தசாமி பிரபு ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி கலந்துகொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தார். அதனடிப்படையில்,

ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை தாங்குதலால் உயிரிழப்பு உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பிரதேசத்திற்கு யானை வேலி அமைக்கப்பட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான நிதியினை விரைவாக ஒதுக்கீடு செய்து இத் தேவையை பூர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார்.

அதேபோல், ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள், மர அலைகள் என்பனவற்றால் சூழல் மாசடைவு, அதிக சத்தம் போன்ற பல காரணங்களால் இத்தொழிற்சாலைகளை ஓட்டமாவடி பத்திரிகை தொழிற்சாலை காணிகளுக்கு மாற்றுவதற்கு எழுபது ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அதிகார சபை காணியை அமைச்சு வழங்குமாக இருந்தால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதிமொழி வழங்கினார்.

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அதிரடி உத்தரவு!

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன. அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன. வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களை இன்னும் ஒரு மாத காலத்தினுள் வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (15.07.2025) நடைபெற்றது.

ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை இன்று புதன்கிழமையுடன் (16.07.2025) அவர்களை விடுவித்து புதிய நிலையங்களில் பொறுப்பேற்க பணிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அவர்கள் புதிய நிலையங்களில் அறிக்கையிடவில்லையாயின் நிறுவன நடைமுறைகளுக்கு அமைவான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறும் பணித்தார்.

மேலும், பாடசாலைகளில் நடைபெறும் தவணைப் பரீட்சைக்கான கட்டணங்களை மாணவர்களிடமிருந்து அறவிடுவதில்லை எனவும், அதற்குரிய நிதி மாகாண சபையால் வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் தெரிவித்தார். பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கு கொடுப்பனவு வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கியுள்ள நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது. கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் முன்னிலையில் இருந்தாலும், சாதாரண தரப் பரீட்சையில் முன்னேற்றத்தைக் காண்பிக்க முடியாமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு புறக்காரணிகளால் அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்றும், மாணவர்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல் அவசியம் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம், ஆசிரியர்களிடமிருந்து உணர்வுபூர்மான கற்பித்தல் செயற்பாடுகள் இன்னமும் அதிகமாகத் தேவை எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம், கலாசார அலுவல்கள் பிரிவு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு!

வறண்ட மண்டல விவசாயம் குறித்த 11வது சர்வதேச மாநாடு (11வது ICDA-2025) யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் பிரதம விருந்தினராக

யாழ் பல்கலைக்கழ துணைவேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரதம பேச்சாளராக மஞ்சுளா குலரத்னா (லிங்கன் பல்கலைக்கழகம்-நியூசிலாந்து, யுகா சசாகி யமகட்டா பல்கலைக்கழகம்-யப்பான்) பங்குபற்றியதுடன், இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் ஹிமால் ஏ. சுரவீர அவர்களும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எல்லா நாடுகளும் இஸ்ரேல் உறவை துண்டிக்க வேண்டும்!

0

இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலை பாலஸ்தீனியர்களிற்கு எதிரான இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாடும் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனா உறவுகளை இடைநிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள பிரான்செஸ்கா அல்பெனிஸ் தனியார் துறையினரும் இஸ்ரேலுடனான உறவுகளைதுண்டிப்பதை உலகநாடுகள் உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பொருளாதாரம் தற்போது இனப்படுகொலையாக மாறியுள்ள ஆக்கிரமிப்பை தக்கவைப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அரசாங்கங்களும் தனிநபர்களும் என்ன செய்தார்கள் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்  நாங்கள் அச்சத்தினால் பயத்தினால் பின்வாங்கினோமா அல்லது மனித கண்ணியத்தை பாதுகாக்க எழுந்தோமா என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும்.

நீண்ட காலமாக சர்வதேச சட்டம் விருப்பத்தேர்வாகக் கருதப்படுகிறது – பலவீனமானவர்களாகக் கருதப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது சக்திவாய்ந்தவர்களாகச் செயல்படுபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. இந்த இரட்டைத் தரம் சட்ட ஒழுங்கின் அடித்தளத்தையே அரித்துவிட்டது. அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்.

இங்கு பொகோட்டாவில் பல நாடுகள் மௌனத்தை கலைத்துஇ போதுபோதும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் போதும்இவெற்றுவார்த்தைகள் போதும்இவிதிவிலக்குவாதம் போதும்இஉடந்தையாகயிருத்தல் போதும்இஎன தெரிவிப்பதன் மூலம் சட்டப்பாதைக்கு திரும்புவதற்கான வழி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் அமைதியைப் பின்தொடர்வதில் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது – அனைவருக்கும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது சிலருக்கு வெறும் சலுகைகளை அல்ல மற்றவர்களை அழிப்பதன் இழப்பில்.என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சாசனம் மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் கருவிகள் அனைவரின் திசைகாட்டியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகை!

0

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார். 

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, முன்னர் அறிவித்த 32% தீர்வை வரியை 19% ஆக குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். 

இந்தோனேசியா – அமெரிக்க வலுசக்தி மற்றும் விவசாய உற்பத்திகளுடன், பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான போயிங் ஜெட் விமானங்களையும் கொள்வனவு செய்ய இணக்கம் ஏற்பட்டதை அடுத்து டிரம்ப் இந்த சலுகையை வழங்கியுள்ளார்.