Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 137

வடக்கில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம்!

0

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்ப்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் தினம் 12.03.2025 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக திறந்துவைக்கப்பட்டது.

குறித்த ஆய்வு கூடத்தை பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.

இதில் விஞ்ஞான ஆய்வு கூடம், மாணவர்களின் நவீன கல்வி செயற்பாட்டுக்காக கணினிமையம் மற்றும் நூலகம் அடங்கலாக நவீன புதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு வளைய கல்வி பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

கிளிநொச்சியில் சுற்றுலா மையம்!

0

கிளிநொச்சி குளப் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று ஆளுநர் அவர்களால் திறந்து வைப்பு!

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு இன்று 12.03.2025 குறித்த சுற்றுலா மையம் திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுலா மையத்தை சமய நிகழ்வுகளுடன் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முகமாக, கிளிநொச்சி குளத்தினுள் விசைப் படகு, துடுப்பு படகு சவாரி ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரம்பரிய உணவுகள், இயற்கை குளிர்பானங்கள் என்பனவும், சிறுவர்களுக்கு எற்ற விளையாட்டுகள் என இவ் சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், வைத்தியர்கள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

எஸ்.எச்.எம். நியாஸுக்கு புதிய பதவி!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதியாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம்.நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான கடிதம் புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த எஸ்.எச்எம்.நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால உறுப்பினராகவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் அரசியலில் தடம் பதித்துள்ளார்.

அதேவேளை பாராளுமன்றத் தேர்தல்களிலும் பல முறை வேட்பாளராக போட்டியிட்டுள்ள எஸ்.எச்.எம்.நியாஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், மாவட்டத்தில் சகல சமூகத்தினருக்காகவும் செயலாற்றிவரும் ஒருவர் என்பதினால் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டமைக்கு கட்சியின் தலைமைத்துவத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவர்களுக்கும், கட்சியின் அங்கத்தவர்களும், கட்சியின் போராளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்!

0

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுட்டிருந்தனர்.

இதனை அடுத்து சந்தேகநபர் இன்று புதன்கிழமை (12)  கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும்  மற்றும்  சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்பரிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு!

0

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். 

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று (11) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது. 

பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் அண்மையில் புத்தாக்க போட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்களிப்பு செயற்பாடு இடம்பெற்றிருந்தது. 

மாணவனினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் இலங்கையின் முதல் முறையாக ஒரு தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தமை இதுவே முதல் தடவையாகும். 

இலங்கை தேர்தல் முறையில் கடதாசி பாவனை இல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு குறித்த மாணவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொறிமுறை முதன் முறையாக மாணவர் பாராளுமன்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இந்த ஆரம்ப நிகழ்வில் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் த. முகுந்தன், பாடசாலை அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் முன்னிலையில் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு வாக்களிப்பும் இடம்பெற்றிருந்தது. 

இதன் பின்னர் குறுகிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும். 

புத்தளம் பிரதேச சபை வேட்பாளராக லரீப் காசிம்!

0

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் பொத்துவில்லு வட்டாரத்தின் புத்தளம் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் கடந்த ஞாயிறு (09.03.2025) இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி வட்டாரக் கிளை தலைவர் திரு ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், வேட்பாளருக்காக சுமார் 8 பேர் வரை விண்ணப்பித்திருந்ததுடன், புத்தளம் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்யும் ஆலோசனை மிகவும் காரசாரமாக இடம்பெற்றது.

வேட்பாளருக்காக விண்ணப்பித்திருந்த 8 பேரில் 5 பேர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம், ஜனாப் தாஜுதீன் மற்றும் ஜனாப் ரஸ்மின் ஆகிய மூவருக்கிடையில் கடும் போட்டி நிலவியதுடன், இறுதி முடிவுகள் எட்டப்படாமல் எஞ்சியிருந்தனர்.

கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சபையோரின் அனுமதியுடன், எஞ்சியிருந்த மூன்று பேருக்குமான பொதுமக்கள் வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்றது.

இதில் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் வாக்களித்ததுடன், அதிகப்படியான பொதுமக்களின் வாக்குகளினால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை 2018ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தளம் பிரதேச சபை தேர்தலில் ஜனாப் லரீப் காசிம் தோல்வியடைந்திருந்ததுடன், அவரோடு போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பா.உ Dr. அர்ச்சுனாவுக்கு உலமா சபை கண்டனம்!

0

2025.03.08 ஆம் தேதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. ராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கின்றது.

மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறான மத சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொது மன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

Dr. அர்ச்சுனா உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில் தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம் தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.

அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

கிளிநொச்சியில் கடையடைப்பு!

0

கிளிநொச்சி சேவை சந்தையினர் இன்றைய தினம் 11.03.2025 கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டம் ஒண்றினை முன்னெடுத்துள்ளனர்.

நீண்டகாலமாக தற்காலிக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டித் தருவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதையிட்டு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போது உலக வங்கியின் அனுசரணையில் 40 மில்லியன் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமையானது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும் என கிளிநொச்சி சேவை சந்தையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சி சேவை சந்தையினர் தமக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது;

  1. 04.06.2024 அன்று வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் வர்த்தகர் அபிவிருத்திச் சங்க மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட தற்காலிக கடைகளை A9 வீதியையும், கனகபுர வீதியையும் பார்க்கக் கூடியவாறு வழங்குதல் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. ஏற்கனவே அரச திணைக்களத்தால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் கிளி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு கட்டடங்களைக் கட்டி வாழ்வாதார கடைகளாக வழங்குவதாகவே உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்ததும் இவ்விடயத்தில் வர்த்தகர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
  3. பொதுவாக கிளிநொச்சி சேவைச்சந்தையின் பிரதான மரக்கறி வாணிபம், மீன் வாணிபம், புலால் வாணிபம், பழ வாணிபம் போன்றவற்றுக்கு இடையூறாக சேவைச்சந்தையினை அண்மித்த பகுதிகளில் மேற்படி வியாபாரங்களை மேற்கொள்ள கரைச்சி பிரதேச சபை அனுமதித்துள்ளமையால் சேவைச்சந்தை வர்த்தகர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.
  4. அம்பாள்குளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் மொத்த வியாபாரம் எனப் பெயரிடப்பட்டு தற்போது அங்கு காலை 5.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருதலும் அங்கு வரிநடைமுறை பின்பற்றப்படாமையால் சேவைச்சந்தைக்கு உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் வருகை தரும் வீதம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
  5. கிளிநொச்சி சேவைச்சந்தையின் மரக்கறி, வெற்றிலை. மீன். பழ வாணிபம் அனைத்து வாணிபங்களுக்கும் 4% சதவீத வரி அறவீட்டால் உற்பத்தியாளர்களின் வருகையும், சந்தைப்படுத்தும் வாய்ப்பும் குறைந்துள்ளது.
  6. கிளிநொச்சி சேவைச்சந்தையை அண்மித்த பகுதியில் நடைபெறும் நடைபாதை வியாபாரங்களால் சேவைச்சந்தை முற்றுமுழுதாக செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  7. கரைச்சி பிரதேச சபையால் நிரந்தர கட்டடங்களுக்கான முறையற்ற திட்டமிட்ட இடவாடகை அதிகரிப்பும் சேவைச்சந்தை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
  8. சேவைச்சந்தையின் வர்த்தகர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய நேரம் முழு வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தவர்கள் கவனையீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இன்றைய தினம்11.03.2025 இதற்கான உரிய தீர்வு வழங்கப்பபடாவிட்டால் தொடர் போராட்டத்தை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தமக்கான உரிய தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விஷேட கூட்டம்!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று(10) ஒலுவிலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை, பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயர் பீட உறுப்பினர்கள், மத்திய குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

0

தேர்தல் காலங்களில் மாத்திரம் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (10-03-2025) கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியபின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொருட்டு சமத்துவ கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் இன்று பகல் ஒரு மணிக்கு மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏழு கட்சிகள் அங்கம் வகிப்பதுடன், தமிழ் மக்கள் ஒற்றுமை பற்றியும், தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவர்களது அபிலாசைகளின் அடிப்படையில் இது ஒரு தேர்தல் கூட்டாக அல்லாமல் தொடர்ந்தும் பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்