Saturday, July 19, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 145

கண் சொட்டு மருந்துக்கு தடை

0
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்டதன் பின்னர், பாதிப்புக்கள் ஏற்பட்டதாக கூறப்படும் ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒளடத்தின் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சொட்டு மருந்து 2021ம் ஆண்டு முதல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாக எமதுச் செய்தி சேவை மேற்கொண்ட ஆராய்வில் தெரியவந்துள்ளது.

அந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய நோயாளர்கள் சிலர் பல்வேறுப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசெலோன் என்ற கண் சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 4 வருடம்

0
சர்வதேசத்தில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வத்திக்கான் முதல் சர்வதேசம் வரையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2019 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை வேளையில், கிறிஸ்தவ மக்கள் வழமையான உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளுக்காக, தேவாலயங்களில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது, காலை 8.45 அளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

அதேநேரம், கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

500 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமல்லாமல், சர்வதேசத்திலும், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கையின் நன்மதிப்பை கடுமையாக பாதிக்கும் சம்பவமாகவும் மாறியது.

எனினும், இன்றுவரை இந்தத் தாக்குதல்களுக்கு மூல காரணம் யார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

உள்நாட்டில், கத்தோலிக்க சபை, இந்த விடயத்தில் நீதி கோரி, சர்வதேசத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும், அரசாங்கம், விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக பதிலளித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றங்கள், 200 வருடங்களாக நிலமற்று இருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் உட்பட பிரச்சினைகளுக்கு, தீர்வுகள் காணப்படாத நிலைமையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திலும் தொடர்கிறது.

இந்த விடயம், உள்நாட்டு விசாரணையில் இருந்து, கைமீறி, சர்வதேசத்திற்கு சென்றிருந்தாலும் கூட, இலங்கையின் பூகோள அரசியல் அடிப்படையில், எவ்வாறான தீர்வு கிடைக்கப்போகின்றது? என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக தொடர்ந்தும் உள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீக்கப்படுகிறது இறக்குமதி கட்டுப்பாடு

0
இறக்குமதி  தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும்  உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்று சபை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்துள்ளது.

இலங்கை தமது கடன்களை மறுசீரமைத்துக்கொள்ளும் இயலுமை உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கை வங்குரோத்து நாடாக இனி கருத்தப்படாது.

எனவே, கொடுக்கல் வாங்கல்களை சாதாரணமாக மேற்கொள்ளலாம். எனவ, அந்நிய செலாவணி அதிகரிப்புக்கேற்ப, இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும். இதன்முதற்கட்டமாக அத்தியாவசிய பொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிக்காக ஒத்துழைத்த, நாடுகள், நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதானிகளுக்கு ஜனாதிபதி தனதுரையில் நன்றி தெரிவித்தார்.

மேலும், இது குறித்த முழுமையான உரையொன்றை நாளை நாடாளுமன்ற ஆற்றவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, உடன்படிக்கையையும் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 7 முக்கிய அம்சங்கள்

0

சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத நீண்ட கால கடன் திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. இதில் 7 முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டது.

  • சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று உள்ளுராட்சி தேர்தல் செயற்பாடுகளில் தலையிடவில்லை என்றும் இலங்கையில் தேர்தல்களை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. மற்றும் “ஒரு நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடாது”
  • இந்தக் கடனின் முதல் தவணை இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும் என்று IMF தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆரம்ப கொடுப்பனவாக உடனடியாக வழங்கப்படும்.
  • ஐ.எம்.எஃப்., கொடுப்பனவை ரூபாயாக மாற்றலாம் என்றும், அரசாங்கக் கடன்கள் மற்றும் இதர செலவினங்களைத் திருப்பிச் செலுத்த நிதியைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது.
  • கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு IMF இலக்குகளை அடைய ஏப்ரல் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை இலங்கை முன்வைக்க வேண்டும்.
  • ஊழலுக்கு எதிரான மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது EFF-ஆதரவு வேலைத்திட்டத்தின் அடிப்படை அம்சமாகும் என்பதை சர்வதேச நாணய நிதியம் எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், சர்வதேச நாணய நிதியத்தின்படி, தற்போதுள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான ஒரு திட்டம் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
  • IMF ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கு நட்பான வகையில் வரி வருவாய் வளர்ச்சியைப் பின்தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். EFF திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வரி சீர்திருத்தங்கள், மூத்த மிஷன் தலைவரின் கூற்றுப்படி, குறிப்பாக அதிக வருமானம் உள்ளவர்கள் அதிக பங்களிப்பை வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இயற்கையில் முற்போக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMF நித்திக்கடன் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தி

0
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் கடன் வழங்குபவர்களுடனும் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடுதியாக குறையும் விமான டிக்கடின் விலைகள்

0

இலங்கையில் இயங்கும் பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலின் போது, ​​துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான டிக்கெட்டுகளின் விலையை 20 வீதத்தால் குறைத்துள்ளதாக அறிவித்தார். அமெரிக்க டாலரின் மதிப்பு.

எதிர்காலத்தில் விமான டிக்கெட் விலைகளை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாகவும் கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், எதிர்காலத்தில் ஏழு புதிய பயணிகள் விமான நிறுவனங்கள் தீவில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டனம்

0

நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்க வேண்டாம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்களுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகளை திறைசேரி செயலாளரும் சட்டமா அதிபரும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில்,கடந்த 3 ஆம் திகதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஆளும் கட்சியினர் சவாலுக்கு உட்படுத்தியதையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவுக்கமைய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோருகின்றனர்.

இதனை சுட்டிக்காட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி நிக் வினெல் கேசி (Nick Vineall KC) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசுகள் இணங்க வேண்டும் என்ற கொள்கையும் அதுவேயாகும்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களை நாடாளுமன்றக் குழுவின் முன் விசாரிப்பது சரியானதா என்பதை இலங்கையின் நாடாளுமன்றம் ‘மிகக் கவனமாக’ மறுபரிசீலனை செய்யும் என்பதை தமது சங்கம் நம்புவதாக அவர் கூறினார்.

அதே போன்று நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாததை ஊக்குவிப்பது சரியானதா என்பதையும் இலங்கை அரசாங்கம் மிகக் கவனமாக பரிசீலிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ரோமேன்ஸ் செய்யலாம்

0

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வதும் கட்டித்தழுவுவது தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச வலியுறுத்தினார்.

அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்துக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டித்தழுவியபடி நின்றிருந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதை தொடர்ந்தும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் துணைவேந்தர் கூறியுள்ளார்.

“எமது நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநிலையுடன் இணக்கமான குழுவாக பணியாற்ற அவர்களை அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் கட்டித்தழுவுவது தடைசெய்யப்படவில்லை, எனினும் பல்கலைக்கழகத்துக்கு பார்வையாளர்களாக வருகை தரும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்விச் சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதவாறு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் வரம்புகளை அறிந்து செயற்பட வேண்டும் என்றும் துணைவேந்தர் மேலும் கூறினார்.

பார்சிலோனா, றியல் மட்றிட் போட்டி இன்று

0

ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டுள்ள ஸ்பெய்னின் பார்சிலோனா கழகம் இன்று லா லீகா போட்டியில் தனது பரமை வைரியான றியல் மட்றிட் கழகத்துடன் இன்று  மோதுகிறது.

மட்றிட் நகரில் உள்ளூர் நேரப்படி இன்றிரவு 9.00 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி திங்கள் அதிகாலை 1.30 மணிக்கு) இப்போட்டி ஆரம்பமாகும்.

இவ்விரு கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் பொதுவாக ‘எல் கிளசிக்கோ’ என அழைக்கப்படுகின்றன. முழுக் கால்பந்தாட்ட உலகினதும் கவனத்தை ‘எல் கிளசிக்கோ’ ஈர்ப்பது வழக்கம்.

ஆனால், இப்போட்டியைவிட பார்சிலோனா கழகம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளே செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. றியல் மட்ரிட்டும் பார்சிலோனாவுக்கு எதிரான சட்டநடவடிக்கையில் பங்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்பானிய கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் குழுவின் முன்னாள் உப தலைவர் ஜோஸ் மரியா என்ரிகுவெஸ் நெக்ரேய்ராவுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு பல வருடங்களாக மில்லியன் கணக்கான யூரோ பணத்தை பார்சிலோனா கழகம் வழங்கியமை தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜோஸ் மரியா என்ரிகுவெஸ் நெக்ரேய்ராவுக்குச் சொந்தமான ‘டா ஸ்னில் 95’ எனும் நிறுவனத்துக்கு  2001 முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 7.3 மில்லியன் யூரோ பணத்தை பார்சிலோனா வழங்கியுள்ளதாக ஸ்பானிய வழக்குத்தொடுநர்கள், நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மத்தியஸ்தர் குழுவே ஸ்பானிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான நடுவர்களைத் தெரிவு செய்கிறது.

தவறு எதனையும் தான் செய்யவில்லை எனவும்,  தொழிற்சார் மத்தியஸ்தர் பணி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிக்கைகளுக்காகவே இப்பணம் வழங்கப்பட்டதாகவும் பார்சிலோனா கழகம் தெரிவித்துள்ளது.

ஆனால், போட்டிகளில் மத்தியஸ்தர்களிடமிருந்து தனக்குச் சாதகமான தீர்மானங்களைப் பெறும் நோக்குடன் இப்பணம் வழங்கப்பட்டதாக ஸ்பானிய வழக்குத் தொடுநர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பார்சிலோனா கழகத்தின் முன்னாள் தலைவர்களான சான்ட்ரோ ரொசெல், ஜோசப் மரியா பார்டேமே, மத்தியஸ்தர் சங்கத்தின் உப தலைவர் நேக்ரேய்ரா உட்பட பலருக்கு எதிராக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

பார்சிலோனா கழகத்தின் முன்னாள் தலைவர்கள் ரொசெல், பார்டோமியு ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளதாக  வழக்குத்தொடுநர்கள் கூறுகின்றனர். பணத்துக்கு மாற்றீடாக, பார்சிலோனாவின் போட்டிகளின்போது, அக்கழகத்துக்கு சாதகமாக மத்தியதர்களின் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவ்விருவரும் நெக்ரேய்ராவுடன் இரகசிய, வாய்மூல உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தனர் என வழக்குத்தொடுநர்கள் கூறுகின்றனர்.

எனினும் உண்மையிலேயே பார்சிலோனாவுக்கு ஆதரவாக பக்கச்சார்பான தீர்மானங்கள் மத்தியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெய்னின் லா லீகா போட்டிகளில் 26 தடவைகளும் கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய சம்பியன் கிண்ணப் போட்டிகளில் 5 தடவைகளும் சம்பியனான பார்சிலோனா மீதான இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இக்குற்றச்சாட்டுகள் வெளிவர ஆரம்பித்த பின்னர் பார்சிலோனா விளையாடிய போட்டிகளின்போது பார்சிலோனாவுக்கு எதிராக ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

அதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரைவான உள்ளக விசாரணைக்கு பார்சிலோனா கழகம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் ஜோன் லபோர்ட்டா தெரிவித்துள்ளார்.

“இக்குற்றச்சாட்டு பிரச்சாரங்கள் பார்சிலோனாவின் நலன்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கானவை. ‘பார்கா’ ஒருபோதும் மத்தியஸ்தர்களை வாங்குவதில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும்,  “மத்தியஸ்தர் சங்கத்தின் உப தலைவருக்கு பார்சிலோனாவின் கொடுப்பனவுகள் அசாதாரணமானவை. எமது கால்பந்தாட்டத்தின் புகழ் கேள்விக்குறியாகியுள்ளது, நான் வெட்கப்படுகிறேன்” என லா லீகா தலைவர் ஜாவியர் டேபாஸ் விமர்சித்துள்ளார்.

பார்சிலோனாவின் பரமை வைரியான ரியல் மட்றிட் கழகமும், பார்சிலோனாவுக்கு எதிரான விசாரணை செயன்முறைகளில் ஒரு ‘பாதிக்கப்பட்ட தரப்பாக’ இணைந்துகொள்வதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்புகளை நீதிபதி அழைக்கும்போது றியல் மட்றிட் ஆஜராகும் என அக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே பார்சிலோனா, றியல் மட்றிட் கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

தற்போதைய ‘லா லீகா’ தொடரில் இவ்விரு கழகங்களும் தலா 25 போட்டிகளில் விளையாடியுள்ளன.

தற்போது பார்சிலோனா 65 புள்ளிகளுடன்  முதலிடத்திலும், நடப்புச் சம்பியனான ரியல் மட்றிட் 56 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் உள்ளன.

முடிவுக்கு வந்துவிட்டது டொலர் நெருக்கடி

0

டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க தேவையான துறைகளுக்கு செலவிடுவதற்கு போதுமான  அளவு டொலர் எம் வசம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாளை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியளிக்கும் என கருதப்படும் இலங்கைக்கான நிதி உதவி கிடைத்த பின்னர் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் இதன் காரணமாக மேலும் நிதியும் முதலீடும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.