Wednesday, November 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 147

யாழுக்கு விரைந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

0

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு விசேட மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டார்.

இவ்விசேட மேற்பார்வையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் ஊர்காவற்துறை ஆதார பைத்தியசாலை, வேலனை பிரதேச வைத்தியசாலை, வேலனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் மாங்குளம் ஆதார வைத்தியசாலை, ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள ஆளணி மற்றும் பௌதீக வளங்களில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அப்பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில், நடுத்தர மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களைப் பாதிக்கும் தொற்று மற்றும் தொற்றா நோய்க் கட்டுப்பாடு, சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் தற்போதைய போசனை மட்டம், எதிர்கால போஷாக்கு திட்டங்கள், திரிபோஷா கிடைத்தல், கள உத்தாயோகத்தர்களின் போக்குவரத்து சிக்கல் மற்றும் சகல ஊழியர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பணியாளர் குழுவிற்கு ஏற்படும் நடைமுறை சிக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதுடன் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அதே சந்தர்ப்பத்தில் தீர்வு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரணிலின் பாதையிலே அரசாங்கம் செல்கிறது!

0

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமூக செலவீனங்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தலையில் எல்லையற்ற சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.

மக்கள் ஆணையை முற்றுமுழுதாக அரசாங்கம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வரலாற்று ரீதியான மற்றுமொரு தவறு நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிப்பதாக சுட்டிக்காட்டினார்.

2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவோம் எனப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அதற்காகத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவது என்றால் பொருளாதார வளர்ச்சி உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

1975 ஆண்டு முதல் இதுவரை ஐ.எம்.எப் 75 நாடுகளில் செயற்படுத்திய திட்டங்களில் 59 சதவீதமானவை 2 ஆம் 3 ஆம் 4 ஆம் கடன்மறுசீரமைப்புக்கு செல்ல நேரிட்டதாகக் கூறினார்.

இது பாரதூரமான அழிவாக அமையும் என்றும் இதனை யாரும் வெளியில் சொல்வதில்லை எனவும் தெரிவித்தார்.

Click here to join our whatsApp group

பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடனை திருப்பிச் செலுத்தவும் முயற்சிக்கும் அரசாங்கம் எவ்வாறு அரச வருமானத்தை அதிகரிப்பது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவில்லை எனக் கூறினார்.

இது தொடர்பில் தற்போது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்கள் வெறுமனே கற்பனை விடயங்களாகவே தம்மால் பாரக்க முடியும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

எனவே அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேநேரம் மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர் கடந்த நாட்களில் வழங்கப்படாமல் இருக்கும் அந்த தொகையை வழங்குமாறு வலியுறுத்தினார்.

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ ஆரம்பம்!

0

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட நீர் மின் சேமிப்பு திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மொத்தம் 600 மெகாவோட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின் கட்டமைப்பிற்குள் வழங்கும்.

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் இலக்கை அடைவதில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் இணைக்கும் பாரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நாட்டின் பயணத்தில் எரிவாயு வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் என்ற இலக்கை அடையும் என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.  

அதேபோல் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு திட்டத்தின் நிதி வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு குறைந்த விலையை உறுதி செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நீண்டகால நிதியைப் பெறுவதே இதன் நோக்கம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த திட்டத்தின் ஊடாக எரிசக்தி சுதந்திரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உறிஞ்சுவதற்கான அமைப்பு ஆதரவு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join our whatsApp group

மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் ரணில்?

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றம் செல்வார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவருடன் இணைந்துகொள்ள உள்ளதாக தெற்கு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில், அவரின் பாருமன்ற பிரவேசம் ஒரு அரசியல் சூறாவளியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் எந்த வகையிலும் பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

சிலவத்துறை குறித்து ஆதங்கம் வெளியிட்ட ஹக்கீம்!

0

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள்.

ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்..

மன்னார், சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளையும், அவர்களது உடைமைகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை(20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜானதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரஸ்தாப, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்த சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பாரிய நிலப்பிரதேசம் யுத்தம் நிகழ்ந்து வந்த1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பழைய சிலாவத்துறை கிராமம் பெரும்பாலும் அரசாங்கத்தினால் கடற்படைக்கு கையகப்படுத்தப்பட்டு, இன்னும் தொடர்ந்து பல்லாண்டுகளாக நாங்கள் விடுத்து வருகின்ற வேண்டுகோள்களை முற்றாகப் புறக்கணித்து அரசாங்கத்தினால் கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருவதனால், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட இந்தப் பாரிய நிலப்பரப்பு எதிர்கால சந்ததிகளுக்கு இல்லாமல் போகக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானோர் பின்னர் மீளக் குடியேறியுள்ள போதிலும் , அவர்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளை விவசாயச் செய்கை பண்ணவோ, அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவோ, அங்கு முன்னர் போன்று வழமையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதுள்ளனர். வேலி கட்டியும், அரண் அமைத்தும் மிகப் பெறுமதி வாய்ந்த இந்த நிலப்பரப்பை தொடர்ந்தும் அரசாங்கம் கடற் படை முகாமாக விஸ்தரித்திருப்பது அநீதியானது.

இந்தப் பாரதூரமான விஷயத்தைப் பற்றி நாங்கள் முறையிடுகின்ற நான்காவது ஜனாதிபதியாக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே இதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக, உரிய சிலாபத்துறை கடற்படை முகாமிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பையும், அங்கு வசித்து வந்தவர்களுக்குரிய உடைமைகளையும் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விடுமாறு உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றார்”.

அதனைத் தொடர்ந்து, இவ்வாறே திருகோணமலையிலும் மாபல் பீச், வெள்ளை மணல், குடாக் கரை கடலோரம் மிகவும் வனப்புமிக்கவை. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை உல்லாச பயணிகளை ஈர்க்கும் விதத்தில் பயனுள்ளதாக முதலீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதற்கு முடியாமல் இருப்பதாகவும், அத்துடன், பிரதேச மக்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைககள் பாதிக்கப்படுவதாகவும் மு.கா தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு பொதுமக்கள் செல்வது கட்டுப்படுத்தப்படுத்தப்படுவது பற்றி கூறியபோது, அது தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். தகர்க்கப்பட்ட பள்ளிவாசலின் அமைவிடம் உட்பட்ட கருமலையூற்று (Deadsman Cove) கடலோரப் பிரதேசத்தின் நிலைமையையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த பிரச்சினைகள் பற்றியும் உரிய கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அனர்த்த முகாமைத்துவ சபை கடந்த மூன்று வருடங்களாக கூட்டப்படாமல் இருப்பது பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கொண்டு வந்தபோது, அதற்குரிய புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டு, அதன் பின்னர் அதனை மீண்டும் இயங்க வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள்ளார்.

M.N.M. யசீர் அரபாத் (BA) ஓட்டமாவடி

கிளிநொச்சியில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டம்!

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு தொடர்கின்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலய முன்றல் நோக்கி தீச்சட்டி ஏந்தியவாறு பேரணியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என கோரியும் அல்லது அவர்கள் எங்கே என சிங்கள பேரினவாத அரசிடம் பலமுறை கேட்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. எனவே நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி 2017-பெப்ரவரி 20 ம் திகதி கிளிநெச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டமானது வடகிழக்கு என விரிவுபடுத்தப்பட்டது

2017 பெப்பரவரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டு வருடமாக அதாவது இன்றுடன் 2920 நாட்களைக் கடந்து தொடர்கின்றது. 2009 மே 18 ல் முள்ளிவாய்க்காலில் போர் மொளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன.

இன்றும் இனப் படுகொலை தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஆனால் இலங்கையில் ஜனாதிபதிகளும் ஆட்சியாளர்களும் மாறினாலும் இனப் படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை கிட்டவில்லை.

நேரடியாக படையினர்களிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான நீதி இது வரை கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் 2017 தொடக்கம் இன்று வரையும் உள் நாட்டில் பல போராட்டங்களை நடத்தினோம். இலங்கை அரசின் நீதித் துறையில் நம்பிக்கையில்லை என்ற ஒரு காரணத்தினால் நாம் சர்வதேச நீதி விசாரணை வேன்டும் என பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றோம்.

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பினோம். நேரடியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவிலும் நேரடியாக சென்று ஆவனங்களை ஆதாரத்துடன் கையளித்தோம். ஆனால் இது வரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. 2015 ஆட்சியில் இருந்த நல்லாட்சி காலம் என சொல்லப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2019 ல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ, 2022 இல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வரையான சகல அரசாங்கங்களும் எம்மை ஏமாற்றி உள்ளன.

தேசிய மக்கள் சக்தி மூலம் தற்போதய புதிய ஜனாதிபதியாக கடந்த 2024 செப்ரெம்பர் பதவியேற்ற அனுர குமார திசநாயக்க 2024 நவம்பர் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு நல்லென்னமும் அவர்களின் செயலில் தென்படவில்லை. மாறாக புலனாய்வாளர்களை ஏவி விட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரை கண்காணிப்பதுடன் அவர்களை சுதந்திரமாக தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள விடாமல் நீதிமன்ற தடை உத்தரவுகளை கொடுத்து ஐனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி தடுக்கும் அடாவடிச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய பெற்றோர்கள் இதுவரை 300க்கும் மேற்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையறியாது வேதனையுடன் உயிர் இழந்த பரிதாபங்கள் வடகிழக்கில் நடந்துள்ளன. எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உண்மைகளையும் இலங்கை அரசு புரியவில்லை. அதேபோல் சர்வதேசமும் புரிய வில்லை என்பதையே கடந்த எட்டு வருங்களாக நாங்கள் கண்ட உண்மை.

அரசுகள் மாறும் போது எல்லா சர்வதேச இராஜதந்திரிகளும் நாடுகளின் தலைவர்களும் ஏன் ஐநா சபைகளும் கூட இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு செயலாக கால அவகாசங்களை வழங்கி, கால நீடிப்பை செய்து வருவதை நாம் எட்டு வருடங்களாக அவதானித்து வந்துள்ளோம் என்ற உண்மையை கவலையுடனும் கண்ணீருடனும் மனவேதனையடனும் இந்த எட்டு ஆண்டு நிறைவில் பதிவு செய்கின்றோம்” என சங்க தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்தார்.

எனவே இந்த உண்மைகளை உணர்ந்து இனியும் எம்மை ஏமாற்றாமல் எங்கள் உணர்வுகளை மதித்து சர்வதேச நீதி கிடைக்க ஆவன செய்யுமாறும் சர்வதேசத்திடம் வேண்டுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஊடகவியலாளர் ஆனந்தன்

மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்!

0

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல் வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர் அறுந்த நிலையில் குறித்த மின்சாரம் முதியவரை தாக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சுமார் 86 வயதுடைய முதியவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட செய்தியாளர் ஆனந்தன்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் ஹக்கீம் சந்திப்பு!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த (18) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, லாஹூர் பிராந்திய கௌரவ கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில் தற்போது இலங்கை வந்துள்ள வர்த்தகத் தூது குழுவினர் வருகை தந்து, வர்த்தக துறையில் இங்கு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உல்லாசப் பயணத்துறை தொழிலாண்மை என்பவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றனர்.

நீதிமன்ற கொலையாளி குறித்து வெளியான செய்தி!

0

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், அவர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது. 

இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது. 

சந்தேக நபர் சுமார் 6 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். 

அதன்படி, நீதிமன்றிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல உண்மைகளை பொலிஸாரால் வெளிக்கொணர முடிந்துள்ளது. 

இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார். 

அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார். 

அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண்ணும் நீதிமன்றில் இருந்து தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வௌியாகியுள்ளன.

நாட்டை உளுக்கிய கொலை சம்பவம்!

0

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி கல்கிஸ்ஸை வட்டரப்பெல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார். 

துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணும் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார். 

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’  வழக்கு விசாரணைக்காக சுமார் 12 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் அழைத்துவரப்பட்டிருந்தார். 

நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்படாததை அறிந்திருந்த சந்தேக நபர்கள் சட்டத்தரணி வேடத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் நீதிமன்றதிற்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.