Tuesday, March 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 152

தீவிரமடைந்த இஸ்ரேல் ஈரான் மோதல்!

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

இன்று (13) காலை, இஸ்ரேல் தனது “எதிரியை முடக்கும் தாக்குதல்கள்” என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானின் பல்வேறு இராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 

இதில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. 

பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 

இந்த தாக்குதலின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இஸ்ரேல் இந்த தாக்குதலின் நோக்கம் ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதாகவும், தங்கள் மக்களுக்கு ஏற்படும் உயிரியல் அச்சுறுத்தலை நீக்குவதற்காகவும் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், இந்த தாக்குதல் முதல் கட்டமாகும் மற்றும் தேவைப்பட்டால் பல நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளார். 

இதேவேளை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார். 

இருப்பினும், மொஹமட் பாகெரியின் மரணம் தொடர்பாக ஈரான் அரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் முரண்பாட்டுடன் உள்ளன. ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை அளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

போன வாரம் “டூ” ஆனா இந்த வாரம்?

0

தொழில் அதிபர் எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் நன்றி தெரிவிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பின் டிரம்ப் அரசு புதிய செலவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை எதிர்க்கட்சியை காட்டிலும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். அருவருப்பானது என்றார்.

இதனால் கோபமடைந்த டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் மானியங்களை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், டிரம்ப் குறித்த தன் சமூக வலைதள பதிவுகளுக்கு எலான் மஸ்க் நேற்று வருத்தம் தெரிவித்தார். அதில் தான் எல்லை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரை எதற்கும் குறை கூறவில்லை. நான் சற்று ஏமாற்றமடைந்தேன், என்றார்.

இந்நிலையில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தொழில் அதிபர் எலான் மஸ்கின் அறிக்கையை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார், அதைப் பாராட்டுகிறார். அவருக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்க மக்களின் வணிகத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் மாறி, மாறி விமர்சனம் செய்து சண்டை போட்டு கொண்ட டிரம்ப், மஸ்க் ஆகிய இருவரும் இந்த வாரம் நண்பராக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.5 கோடிக்கு ஏலம் போன லபபு பொம்மை!

0

குழந்தைகளை ஈர்க்கும் பிரபல லபுபு (Labubu) பொம்மை நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ஹாங்காங்கில் பிறந்த கலைஞர் கேசிங் லங். இவர் எழுதிய, நோர்டிக் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, விசித்திரக் கதை படப் புத்தகத் தொடரான ​​தி மான்ஸ்டர்ஸின் நட்சத்திர கதாபாத்திரம் லபுபு. அகன்ற கண்கள், முயல் போன்ற காதுகளுடன், சிரிக்கும் பற்கள் என குழந்தைகளை வெகுவாக கவரும் இந்த பொம்மை மேற்கத்திய நாடுகளில் மிக பிரபலம்.

இந்நிலையில் ஏறக்குறைய 4 அடி உயரம் உள்ள லபுபு பொம்மையை Bloomberg நிறுவனம் ஏலமிட்டது. இதில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமும் பங்கேற்றனர். இறுதியில் இந்த பொம்மை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 324 டாலருக்கு ஏலம் போனது. இலங்கை மதிப்பு சுமார் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன இந்த லபுபு பொம்மை உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பொம்மை என்கிறது இந்த ஏலத்தை நடத்திய நிறுவனம்.

242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்!

0

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மதியம் 1.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது.

இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

Update 05.40

குறித்த விமானத்தில் 169 இந்தியர்களும், 53 பிரித்தானியர்களும், 7 போர்த்துக்கேய வர்களும், ஒரு கனேடிய பிரஜையும், விமானிகள் உட்பட 12 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர்.

மீற்புப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதுடன் இதுவரை சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அழைப்பில் யாரும் பேசவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, அவசர அழைப்பு விடுக்கப்பட்டதும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அது அமைதியாகஇருந்ததாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக விமான விபத்து நேரிட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் வானத்தில் பறக்கத் தொடங்கும் முன்பே, 825 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட உடனேயே, அதன் வழித்தடத்திலிருந்து தடம்புரண்டு, குடியிருப்புப் பகுதிக்கு அருகே வினாடிக்கு 475 அடி வேகத்தில் விழுந்துள்ளது.

17 வினாடிகள் ஓடும் அந்த விடியோ, விமானம் எவ்வாறு விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்த போது, வானில் கரும்புகை மேலெழும்பிய காட்சிகளும் வெளியாகியிருக்கிறது.

விமானத்தை இயக்கிய விமானி சுமித் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்றும், துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணித்தவர்களின் 7 குழந்தைகள் என்றும், அதில் 2 கைக்குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 130 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 40 மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாணவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது.

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த அனர்த்தம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டுறவு தெளிவூட்டல்!

நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல் என்ற தொனிப்பொருளில் வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ரீதியான கூட்டுறவு தலைவர்கள், முகாமையாளர்கள் மற்றும் கிராம மட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு கூட்டுறவு செயல் திறன் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ,மாகாண கூட்டுறவு ஆணையாளர் ,ஐந்து மாவட்டங்களின் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள்,கூட்டுறவு துறைசார் சார் உத்தியோகத்தர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் ,கூட்டுறவுத்துறைசார்ந்தோர்,கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வெளியாகியது விலங்குகள் கணக்கெடுப்பு!

0

கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

தொடர்புடைய அறிக்கையின்படி, விலங்குகள் தொடர்பிலான கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை கீழே காணலாம்

குரங்குகள் – 5.17 மில்லியன் 

மந்திகள் – 1.74 மில்லியன் 

மயில்கள் – 4.24 மில்லியன் 

அணில்கள் – 2.66 மில்லியன்

நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஏ.எஸ் சண்டிக தெரிவித்துள்ளார். 

இதேவேளை இந்த கணக்கெடுப்பிற்காக 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் சாதித்த இலங்கை இராணுவ வீரர்கள்!

0

தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ RSP ctf-ndu psc IG அவர்கள் 2025 ஜூன் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.

இலங்கை இராணுவ தடகள அணியின் ஐந்து பெண் மற்றும் ஆறு ஆண்கள் அடங்கிய தடகள வீரர்கள் அவர்களின் பாராட்டத்தக்க சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். சாதனையாளர்களில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பெண் சிப்பாய் எம்.எச்.ஜே உத்தரா 2 வது (தொ) ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் மகளிர் 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றனர். 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.எம்.ஆர் விஜேசூரிய 10,000 மீட்டர் ஓட்டத்தில் 6 வது இடத்தைப் பிடித்து புதிய தேசிய சாதனை படைத்தார். 2 வது (தொண்டர்) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எச்கேகே குமாரகே 400 மீட்டர் ஓட்டத்திலும் 4×400 மீட்டர் அஞ்சலோட்த்திலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இராணுவத்திற்கு பெருமை சேர்த்தார்.

விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தேசத்தின் முன்மாதிரியான பிரதிநிதித்துவத்திற்காக பாராட்டு தெரிவித்த இராணுவத் தளபதி அவர்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, இராணுவத் தளபதி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசுகள் மற்றும் நிதி ஊக்கத்தொகைகளை வழங்கினார், உலக அரங்கில் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபட அவர்களை ஊக்குவித்தார். அவர்களின் எதிர்கால போட்டிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ தடகளக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ USP Hdmc psc, இலங்கை இராணுவ விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சீ.ஆர் கன்னங்கர, RSP ndc ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

பொலன்னறுவையில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு!

0

பொலன்னறுவை மாவட்டத்தில் பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை.

நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிரிடப்படாத நிலங்களில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் பயிரிடுவதற்கான உத்தேச வேலைத் திட்டத்தின் கீழ் மெதிரிகிரிய அக்பர் பிரதேசத்தில் செய்கை பண்ணப்படாத இடங்களில் பயிரிடுவதற்காக தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது.

அவ்வாறே கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தில் சோளம் உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயத் திணைக்களம் உட்பட அரச தரப்பின் தலையீட்டுடன் இத்திட்டம் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றால் இரண்டு மரணங்கள்!

0

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார். 

“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம். இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கு வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்”

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

0

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பான நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊடகப் பேச்சாளர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, நாடு முழுவதும் சிறைச்சாலை ஆணையாளர்கள் பதவிகளில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.