Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 154

உலகின் மனச்சாட்சியை நோக்கிய கேள்வி!

அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன.

இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக் .அவனது புகைப்படம்   காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது  செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும்  படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார்.

முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார்.

 “இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்’

உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் “மற்ற குழந்தைகளைப் போலஇருக்கவோநிற்கவோ முடியாது” என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார்.

“எனக்கு வேறு வழியில்லை. என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது.ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்

உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து  பிபிசியிடம்  பத்திரிகையாளர் அகமது அல்-அரினிஇவ்வாறு தெரிவித்தார்

“நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது” 

எலும்புகள்மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள்

“நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என்று அகமது கூறினார்.

காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள்  அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்’ என்று . அல்-அரினி பிபிசியிடம் கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார்.

‘இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.’

நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையேஎன தெரிவிக்கின்றார் அல்-அரினி

அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார்.

“காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.

சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: “குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன  என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்.”

அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது.

துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல.

“நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்” என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன்.

“காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்

சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார்.

நான் இங்கே சுற்றிசுற்றிவந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் தெரிவித்தார்.

நாளைய வெப்பநிலை குறித்து விஷேட அறிவிப்பு!

0

நாளை (30) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திரும்பப் பெறப்படவுள்ள வர்த்தமானி அறிவிப்பு!

0

வில்பத்து பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விடத்தல்தீவு வனப்பகுதி வலயத்தில் 168 ஹெக்டேர் நிலத்தை இறால் பண்ணையை பராமரிப்பதற்காக விடுவிப்பதற்காக முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் வனவிலங்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சரவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார். 

குறித்த வர்த்தமானி அறிவிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரை ராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, மீளாய்வு செய்த பிறகு வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, குறித்த வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். 

இருப்பினும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதாக அறிவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார். 

பிரதிவாதிகள் அதற்கேற்ப செயல்படத் தயாராக உள்ளனர் என்ற நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இணக்கம் வௌியிட்டார். 

பின்னர், அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி திரும்பப் அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீனாவில் கனமழைக்கு இதுவரை 34 பேர் பலி!

0

சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 80,000 பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.

மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர்.

தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேரை காணவில்லை. மியுன் மாகாண அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக மழை,வெள்ளத்திற்கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புபணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

நிறுவனத்தில் 30 நிமிடம் பிரேக் இதுக்கா?

ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30 நிமிடம் பிரேக் வழங்குகிறது. மேலும் சுயஇன்பத்துக்காக தனி அறையை ஏற்படுத்தி வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லஞ்ச் பிரேக் இருப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். சில தனியார் நிறுவனங்களில் டீ பிரேக் கூட அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள அலுவலகத்தில் 30 நிமிடம் பிரேக் வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். இந்த வினோத ‛பிரேக்’கை வழங்கி உள்ள நிறுவனத்தின் பெயர் எரிகா லஸ்ட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனராக எரிகா லஸ்ட் இருக்கிறார்.

இந்நிலையில் தான் கொரேனாா பரவலுக்கு பிறகு ஊழியர்கள் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக எரிகா லஸ்ட் உணர்ந்தார். ஏனென்றால் மனஅழுத்தத்தால் அவரும் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் மனஅழுத்தம் நேரடியாக அவர்களின் பணியை பாதித்தது.

இதனால் எரிகா லஸ்ட் ஊழியர்களின் மனஅழுத்தத்தை குறைத்து, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினர். அதன் ஒருபகுதியாக தினமும் பணியின்போது ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள 30 நிமிடம் ‛பிரேக்’ வழங்கி வருகிறார்.

மேலும் ‛சுயஇன்பம்’ செய்து கொள்ள பணியாளர்களுக்கு தனியாக அறை ஒன்றையும் அவர் ஒதுக்கி வழங்கி உள்ளார். அந்த அறையை சுயஇன்ப நிலையம் என்று ஊழியர்கள் அழைக்கின்றனர். இதன்மூலம் ஊழியர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு பணியை உற்சாகத்துடன் செய்வதாக அவர் கூறியுள்ளார். முதலில் இந்த சுயஇன்ப ‛பிரேக்கை’ அவர் சோதனை முயற்சியாக கொண்டு வந்தார். அவரது இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளார்.

5 புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் நியமனம்!

0

ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐந்து புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர் ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நியமனங்களுக்குக் கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக செல்வி சுமதுரிகா சஷிகலா பிரேமவர்தன அவர்களின் நியமனத்திற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், பிரேசில் கூட்டாட்சிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. சி.ஏ.சமிந்த இனோகா கொலன்னே அவர்களின் நியமனத்திற்கும், மாலைதீவுக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திரு. மொஹமட் ரிஸ்வி ஹசன் அவர்களை நியமிப்பதற்கும், துருக்கிக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திரு. எல்.ஆர்.எம்.என்.பி.ஜீ.பீ கதுருகமுவ அவர்களை நியமிப்பதற்கும், நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராக திருமதி. றுவன்தி தெல்பிட்டியவை நியமிப்பதற்கும், தென்கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக திரு. மாரிமுத்து பத்மநாதன் அவர்களை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. அயேஷா ஜினசேனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர்களான குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, (கலாநிதி) உபாலி பண்ணிலகே, சரோஜா சாவித்திரி போல்ராஜ், கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை!

0

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய போட்டிக்கு தெரிவான பு/எருக்கலம்பிட்டி பாடசாலை!

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை வெற்றிபெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான வடமேல் மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டி அண்மையில் குருநாகலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான பாடசாலைகள் குறித்த போட்டியில் பங்குபற்றி இருந்தன.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த மாகாண மட்ட சமுக விஞ்ஞான போட்டியில், புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

தரம் 6 பிரிவில் இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவன் M.A அப்துல் உமர் முதலாமிடம் பெற்றுக்கொண்டதுடன், தரம் 8 பிரிவில் M.K.M. சயான் முதலாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை தரம் 7 பிரிவில் இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவன் M.I.M. ராஹில் இரண்டாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அந்த வகையில் குறித்த சமுக விஞ்ஞான போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை சார்பாக இரண்டு பேர் முதலாமிடம் பெற்றுருக்கொண்டதுடன், ஒருவர் இரண்டாமிடத்தை பெற்று தேசியமாட்ட போட்டிக்கு தெரிவாகி, பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும் நேர்பெயரை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இப்போட்டியில் 4 மாணவர்கள் கலந்துகொண்டு மூன்று மாணவர்கள் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.

இம் மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலையும், பாடசாலை சமூகமும், ஊர் மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தேசிய மட்ட போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

மாகாண சபைத் தேர்தல்களை உடனே நடத்தவும்!

0

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு பெஃப்ரல் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள, அந்த அமைப்பு இறுதியாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றதுடன், அதன் பின்னர் 11 வருடங்களாக எந்தவொரு மாகாணசபை தேர்தலும் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் ஊடாக மாகாண சபை தேர்தல் முறைமை திருத்தப்பட்டமையும், அது தொடர்பான சட்ட ஏற்பாடு மற்றும் எல்லை நிர்ணய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமையும், மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், எனினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் தேவையான சட்ட மற்றும் நிர்வாக செயல்முறைகளை முன்னெடுக்க தவறியுள்ளன.

தற்போதைய அரசாங்கம் இந்த தேர்தல் தாமதத்துக்கு பொறுப்பல்ல என்ற போதிலும் தேர்தலை நடத்துவதிலுள்ள தடையை நீக்கி, தேர்தலை நடத்த வழிவகுப்பது அதன் பொறுப்பாகும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தத்துக்காக தற்போது, இரண்டு தனிநபர் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அது குறித்து ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை முறைமை தொடர்பில் அல்லது மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அது குறித்து விரைவில் கலந்துரையாடி தீர்க்க முடியும்.

உடனடியாக தேர்தலை நடத்துவதற்காக பழைய முறைமையில் தேர்தலை நடத்த, குறுங்கால சட்டதிருத்தமொன்று பொருத்தமானது என பெஃப்ரல் அமைப்பு பரிந்துரைக்கிறது.

அத்துடன், பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த குறுங்கால திருத்தமொன்று கொண்டுவரப்படுமாயின், பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, வேட்புமனுவில் 25% ஒதுக்கீட்டையும் அதில் உள்ளடக்க வேண்டும் எனவும் பெஃப்ரல் அமைப்பு கோரியுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி கைது!

0

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (28) முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்தனர்.

அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.