Thursday, November 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 197

ஐரோப்பாவில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி

0

ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ நாட்டில் நடைபெற்று வரும் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் 26 நாள்களாக மெத்தையிலேயே படுத்துள்ளனர்.

மாண்டெனெக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில் ‘சோம்பேறி குடிமகன்’ போட்டி கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 21 பேர் இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

சுமார் 26 நாள்கள் 463 மணிநேரம் கடந்துள்ள நிலையில், தற்போது 7 பேர் விடாமுயற்சியுடன் போட்டியில் நீடித்து வருகின்றனர்.

இந்த போட்டியை பொறுத்தவரை 24 மணிநேரமும் மெத்தையிலேயே படுத்திருக்க வேண்டும். உட்காரவோ, நிற்கவோ அனுமதி இல்லை. தவறுதலாக படுக்கையில் இருந்து எழுந்தால்கூட உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

8 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி உணவு உண்பதெல்லாம் படுத்துக் கொண்டுதான். படுத்துக் கொண்டே செல்போன் மற்றும் லேப்டாப் உபயோகிக்கவும், புத்தகங்கள் படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கடைசி வரை படுத்து வெற்றி பெறுபவருக்கு ‘சோம்பேறி குடிமகன்’ என்ற விருதுடன் ரூ.88,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும், படுக்கையில் உள்ள போட்டியாளர்களின் உடல்நிலையும் தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

கடந்தாண்டு நடைபெற்ற இந்த போட்டி 117 மணிநேரத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இந்தாண்டு இன்னும் 7 பேர் வெற்றிக்காக போராடி கொண்டுள்ளனர்.

மணிப்பூர் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் பலி

0

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நான்கு மாதங்களில் நிகழ்ந்த வன்முறை விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறை வெளியிட்ட தகவலில்,

மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 175 பேர் பலியாகியுள்ளனர். 1108 பேர் காயமடைந்தனர். 32 பேர் காணாமல் போயுள்ளனர்.

4,786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அதில் 386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட 386 மதக் கட்டங்களில் 254 தேவாலயங்கள் மற்றும் 132 கோயில்கள் ஆகும்.

காணாமல் போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 பல்வேறு வகையான வெடிபொருள்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பலத்த எதிர்ப்பு

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிமின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது பகுதியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு நாள் நிகழ்வுகள் சாய்ந்தமருதில் நாளை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்று தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் தவறிவிட்டதாக தெரிவித்து சாய்ந்தமருது பகுதி மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமரர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23 வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளுராட்சி மன்ற பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள், பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் பலருக்கும் எதிராக போராட்டகாரர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

சாய்ந்தமருது காவல்துறையினர் வீதி போக்குவரத்தை சீர்செய்ததுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோஷமெழுப்பிய போராட்டகாரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.

குறிப்புகள் எதுவும் இல்லை
குறிப்புகள் எதுவும் இல்லை

குறிப்புகள் எதுவும் இல்லை
குறிப்புகள் எதுவும் இல்லை
குறிப்புகள் எதுவும் இல்லை

லிபியாவில் அணை உடைந்து 20,000 போ் உயிரிழப்பு?

0

லிபியாவில் அணை உடைந்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 20,000 போ் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 5,100-ஐக் கடந்துள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்குப் பிராந்திய அரசின் பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் அபு கிவூத் கூறியதாவது:

வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்து, அதிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரையும், அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்தியதரைக் கடலுக்குள் அடித்துச் சென்றது.

ஏற்கெனவே பாதிப்புப் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தக் கடலில் இருந்து தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன என்றாா் அவா்.

ஏற்கெனவே, அணை உடைப்புக்குப் பிறகு 10,000 போ் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாயமான அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அல்-பய்தா மருத்துவ மையத்தின் இயக்குநா் அப்துல் ரஹீம் மாஸிக் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியவில்லை; இதன் காரணமாக பாதிப்பு விவரங்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறினா்.

மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ள வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்குப் பகுதியை அந்தக் கடலில் உருவான சக்திவாய்ந்த ‘டேனியல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகக் கடுமையாகத் தாக்கியது.

இதனால் பெய்த கனமழையில், அந்தப் பகுதியில் மலையிலிருந்து பாயும் வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப் பெரிய சப்தத்துடன் வெடித்து உடைந்தது.

அதையடுத்து, அந்த அணையிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் பாய்ந்த அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருள்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச் சென்றது.

வெள்ளத்தில் மூழ்கி உயரிழந்த சுமாா் 5,100 பேரது சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சுமாா் 90,000 போ் வசித்து டொ்ணா நகர மக்கள், இந்த பேரிடருக்குப் பிறகு 2 நாள்களாக அரசின் உதவியின்றி தனித்து விடப்பட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சூழலில், வெள்ள பாதிப்புப் பகுதிகளுக்கு கிழக்குப் பிராந்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமைதான் வந்தடைந்தனா்.

உள்ளூா் மீட்புக் குழுவினருடன் கிழக்குப் பிராந்திய அரசுப் படைகள், அரசுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கட்டட இடிபாடுகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

லிபியாவில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாஃபியின் ஆட்சியை நேட்டோவின் ஆதரவுடன் கிளா்ச்சியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு கவிழ்ந்தனா்.

அதன் பிறகு பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதிக் கொண்ட அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் திரிபாலியைத் தலைநகராகக் கொண்ட ஓா் அரசும், அதற்குப் போட்டியாக கிழக்கே மற்றோா் அரசும் நடைபெற்று வருகின்றன.

அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் குழப்பம் காரணமாக, நாட்டின் உள்கட்டமைப்பை பராமரிக்க முடியாமல் போனதால்தான் வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

சிங்கப்பூர் அதிபராக தர்மன் இன்று பதவியேற்பு!

0

சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்கிறார்.

சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தா்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்கவுள்ளார்.

வியட்நாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் பலி

0

வியட்நாமின் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள 9 அடுக்கு கட்டட குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தனர். அவர்கள் தீயில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் 150க்கும் மேற்பட்டோரை மீட்க போராடி வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகலான சந்து பகுதி என்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மீட்புப் படையினருக்கு சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த தீபத்தில் தீ காயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் 4 குழந்தைகள் உள்பட 56 பேர் மருத்துவமனையில் பலியாகினர். மேலும் 37 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான 56 பேரில் 39 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான வியட்நாம் செய்தி புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

அவசர கால வழி இல்லாத கட்டடத்தின் பார்க்கிங் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு வியட்நாமின் பின் டுயோங் மாகாணத்தில் உள்ள கரோக்கி பார்லரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம் – சுந்தர் பிச்சை

0

செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும்பாலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த 1998ல் செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் கூகுள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதையடுத்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் வாழ்நாளில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும். கணினியில் இருந்து ஸ்மார்ட்ஃபோனுக்கு மாறிய தொழில்நுட்பத்தைவிட, ஏன் இணையத்தைவிட இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். தொழில்நுட்பத்தின் மறுசீரமைப்பு மற்றும் மனித புத்திக் கூர்மையின் நம்பமுடியாத விஷயமாக இது இருக்கும்.

மனிதனின் நுண்ணறிவு மற்றும் நினைவாற்றலின் அளவை மீறுவதற்கு மூளை போன்ற பல நெட்ஒர்க்குகளை உருவாக்க ‘இயந்திர கற்றல்’ என்பது கணினிக்கு பல்வேறு தரவுகளை வழங்குகிறது. இது அனைத்துத் துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்துகிறது.

தேடுதல் மூலமாக கூகுள் பணம் ஈட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம்.

தற்போது இரு முறைகளில் தேடல் நிகழ்கிறது. ஒரு கேள்விக்கு விடை தேடும்போது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் நேரடி விடை கிடைக்கும், இல்லையெனில் அதுகுறித்த அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிலைக் கண்டறிந்து காண்பிக்கும்.

இருப்பினும், பல செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் சாட் ஜிபிடி(ChatGPT) இதனை ஒரே படிநிலையாகக் குறைக்கிறது. வேறு இணையதளங்களுக்கு எதுவும் செல்லாமல் உடனடியாக பதில் அளித்து தேடல் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. இது மனிதனின் வேலைகள் பலவற்றை தேவையற்றதாக மாற்றும்.

உதாரணமாக மனிதர்களின் உதவியின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், சட்டம் என பல துறைகளில் துல்லியமாக செயல்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளை காலர் தொழிலாளர்கள் மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள், காவலாளிகள் என நீல காலர் தொழிலாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே செயற்கை நுண்ணறிவின் முதல் நிறுவனமாக கூகுள் இருக்க வேண்டும் என்று நான் தலைமை பொறுப்பை ஏற்றதுமே கூறினேன். கூகுள் நிறுவனம் கடந்த 2000 ஆண்டுகளில் இருந்து இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து அதனை முதன்மையாக பயன்படுத்தியும் வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் நாங்கள் முதன்மையானவர்கள். இதன் மூலமாக கூகுள் பல புதுமைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பெயரை உரிமை கோருமா பாக்கிஸ்தான்?

0

ஏற்கனவே இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவதற்கு உள்நாட்டில் பல்வேறு எதிர்க்கருத்துகள் எழுந்துள்ள நிலையில், பாரதம் என பெயரை மாற்றினால், இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான், இந்துஸ் மாகாணம் என்று அடையாளப்படுத்தும் விதமாக இந்தியா என்ற பெயரை உரிமை கோருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பதிவை ஆதரிப்போர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மத்திய அரசிடமிருந்து, இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் என்ற அளவுக்கு விவாதங்கள் சென்றுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அரசாங்கத்திலா?

0

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மை வெளிவராமல், நியாயமான, விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் சம்பந்தப்பட்டவர்கள் அரசில் இருப்பதால் தானா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை நம் நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

அந்தக் கொடூரத் தாக்குதலால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தக் காட்டுமிராண்டித்தனமான – கொடூரமான வன்முறைத் தாக்குதலை அன்றும், இன்றும், நாளையும் நாமும் முழு மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தற்போது நமது நாட்டில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நியாயமான தேசிய விசாரணை நடைபெறவில்லை என்பதைப் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த நம் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தற்போதைய அரசு கூட நியாயமான விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து தான் நிறுவப்பட்டது. இன்று தேசிய மட்டத்திலான விசாரணை முன்னெடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக உருவான அரசு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது மறைக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதவாத மற்றும் இனவாத தாக்குதல்களை நாம் மறக்க முடியாது.

இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய அரசுக்கு முதுகெலும்பில்லை என்றாலும் சர்வதேச சமூகம் இந்த உண்மையை வெளிப்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை.

இது தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்றும் பேசப்படுகின்றது. இது திருடனின் தாயாரிடம் மை பார்ப்பது போன்றாகும்.

இந்த இரத்த வெறி கொண்ட அரசால் உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என்பதால் நியாயமான சர்வதேச விசாரணை அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்“ என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியால் உயிரிழந்த மற்றுமொரு குழந்தை

0
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த செய்தி வெலிகம – நலவன பகுதியில் பதிவாகியுள்ளது.

குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி நான்கு மாதத்திற்கான தடுப்பூசி, வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் குறித்த குழந்தைக்கு செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்றில் விவாதிக்கப்படுகின்றது.