Monday, November 3, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 211

EWARDS அமைப்பினரால் மனிதநேய உதவி

0

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்யப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி EWARDS அமைப்பினரால் நாகவில்லில் வசிக்கும் சுமார் 20 பயனாளிகளுக்கு சுமார் 8000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் கிடைப்பதட்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

முஸ்லீம் ஹன்ட்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி அல்ஹாஜ் மிஹ்லார் அவர்களின் அன்பளிப்பில் குறித்த உளர் உணவுப்பொதிகள் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இஸ்லாமிக் எயிட் நிறுவனத்தினால் நோன்புப்பெருநாளை எதிர்பார்த்து காத்திருந்த, வறுமை கோட்டில் வாழும் இம்மக்களுக்கு இவ்வாறான மனிதநேய உதவிகள் கிடைக்கபெற்றமையால் உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததுடன், அவர்களுக்காக துஆ பிரார்த்தனையும் செய்தமை குறிப்பிடத்தக்கது.

85 பேரை பலிகொண்ட ஏமன் கோரச் சம்பவம்

0

ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. மன்சூர் ஹைதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அலி அப்துல்லா சாலே அதிபராக இருந்து வருகிறார். 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது.

உள்நாட்டுப் போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐ.நா அமைப்புகள் அங்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ஏமன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலையில் இருக்கின்றனர்.

இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் சனாவில் தனியார் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சியின்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயன்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற்பகல் வேளையில் பல இடங்களில் மழை பெய்யும்

0

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலையிலும் ஒருசில மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்  கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண் சொட்டு மருந்துக்கு தடை

0
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்டதன் பின்னர், பாதிப்புக்கள் ஏற்பட்டதாக கூறப்படும் ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒளடத்தின் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சொட்டு மருந்து 2021ம் ஆண்டு முதல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாக எமதுச் செய்தி சேவை மேற்கொண்ட ஆராய்வில் தெரியவந்துள்ளது.

அந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய நோயாளர்கள் சிலர் பல்வேறுப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசெலோன் என்ற கண் சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 4 வருடம்

0
சர்வதேசத்தில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வத்திக்கான் முதல் சர்வதேசம் வரையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2019 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை வேளையில், கிறிஸ்தவ மக்கள் வழமையான உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளுக்காக, தேவாலயங்களில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது, காலை 8.45 அளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

அதேநேரம், கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

500 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமல்லாமல், சர்வதேசத்திலும், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கையின் நன்மதிப்பை கடுமையாக பாதிக்கும் சம்பவமாகவும் மாறியது.

எனினும், இன்றுவரை இந்தத் தாக்குதல்களுக்கு மூல காரணம் யார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

உள்நாட்டில், கத்தோலிக்க சபை, இந்த விடயத்தில் நீதி கோரி, சர்வதேசத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும், அரசாங்கம், விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக பதிலளித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றங்கள், 200 வருடங்களாக நிலமற்று இருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் உட்பட பிரச்சினைகளுக்கு, தீர்வுகள் காணப்படாத நிலைமையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திலும் தொடர்கிறது.

இந்த விடயம், உள்நாட்டு விசாரணையில் இருந்து, கைமீறி, சர்வதேசத்திற்கு சென்றிருந்தாலும் கூட, இலங்கையின் பூகோள அரசியல் அடிப்படையில், எவ்வாறான தீர்வு கிடைக்கப்போகின்றது? என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக தொடர்ந்தும் உள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீக்கப்படுகிறது இறக்குமதி கட்டுப்பாடு

0
இறக்குமதி  தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும்  உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தில் நிறைவேற்று சபை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி அளித்துள்ளது.

இலங்கை தமது கடன்களை மறுசீரமைத்துக்கொள்ளும் இயலுமை உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கை வங்குரோத்து நாடாக இனி கருத்தப்படாது.

எனவே, கொடுக்கல் வாங்கல்களை சாதாரணமாக மேற்கொள்ளலாம். எனவ, அந்நிய செலாவணி அதிகரிப்புக்கேற்ப, இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும். இதன்முதற்கட்டமாக அத்தியாவசிய பொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிக்காக ஒத்துழைத்த, நாடுகள், நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதானிகளுக்கு ஜனாதிபதி தனதுரையில் நன்றி தெரிவித்தார்.

மேலும், இது குறித்த முழுமையான உரையொன்றை நாளை நாடாளுமன்ற ஆற்றவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, உடன்படிக்கையையும் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 7 முக்கிய அம்சங்கள்

0

சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத நீண்ட கால கடன் திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. இதில் 7 முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டது.

  • சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று உள்ளுராட்சி தேர்தல் செயற்பாடுகளில் தலையிடவில்லை என்றும் இலங்கையில் தேர்தல்களை ஒத்திவைக்க சிபாரிசு செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. மற்றும் “ஒரு நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடாது”
  • இந்தக் கடனின் முதல் தவணை இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படும் என்று IMF தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆரம்ப கொடுப்பனவாக உடனடியாக வழங்கப்படும்.
  • ஐ.எம்.எஃப்., கொடுப்பனவை ரூபாயாக மாற்றலாம் என்றும், அரசாங்கக் கடன்கள் மற்றும் இதர செலவினங்களைத் திருப்பிச் செலுத்த நிதியைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது.
  • கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு IMF இலக்குகளை அடைய ஏப்ரல் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை இலங்கை முன்வைக்க வேண்டும்.
  • ஊழலுக்கு எதிரான மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது EFF-ஆதரவு வேலைத்திட்டத்தின் அடிப்படை அம்சமாகும் என்பதை சர்வதேச நாணய நிதியம் எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், சர்வதேச நாணய நிதியத்தின்படி, தற்போதுள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான ஒரு திட்டம் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
  • IMF ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கு நட்பான வகையில் வரி வருவாய் வளர்ச்சியைப் பின்தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். EFF திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வரி சீர்திருத்தங்கள், மூத்த மிஷன் தலைவரின் கூற்றுப்படி, குறிப்பாக அதிக வருமானம் உள்ளவர்கள் அதிக பங்களிப்பை வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இயற்கையில் முற்போக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMF நித்திக்கடன் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தி

0
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் கடன் வழங்குபவர்களுடனும் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடுதியாக குறையும் விமான டிக்கடின் விலைகள்

0

இலங்கையில் இயங்கும் பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலின் போது, ​​துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான டிக்கெட்டுகளின் விலையை 20 வீதத்தால் குறைத்துள்ளதாக அறிவித்தார். அமெரிக்க டாலரின் மதிப்பு.

எதிர்காலத்தில் விமான டிக்கெட் விலைகளை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாகவும் கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், எதிர்காலத்தில் ஏழு புதிய பயணிகள் விமான நிறுவனங்கள் தீவில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டனம்

0

நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்க வேண்டாம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்களுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகளை திறைசேரி செயலாளரும் சட்டமா அதிபரும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில்,கடந்த 3 ஆம் திகதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஆளும் கட்சியினர் சவாலுக்கு உட்படுத்தியதையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவுக்கமைய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோருகின்றனர்.

இதனை சுட்டிக்காட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி நிக் வினெல் கேசி (Nick Vineall KC) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டத்தின் ஆட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசுகள் இணங்க வேண்டும் என்ற கொள்கையும் அதுவேயாகும்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களை நாடாளுமன்றக் குழுவின் முன் விசாரிப்பது சரியானதா என்பதை இலங்கையின் நாடாளுமன்றம் ‘மிகக் கவனமாக’ மறுபரிசீலனை செய்யும் என்பதை தமது சங்கம் நம்புவதாக அவர் கூறினார்.

அதே போன்று நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாததை ஊக்குவிப்பது சரியானதா என்பதையும் இலங்கை அரசாங்கம் மிகக் கவனமாக பரிசீலிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.