Saturday, March 14, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 213

அமைச்சர் பிமலின் அதிரடி ஆக்ஷன்!

0

அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி தொடருந்து நிலையத்துக்கான களவிஜயத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரகலய போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியல் தங்களது இல்லங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான இழப்புகளுக்காக 25 இலட்சம் ரூபாவினையே உயர்ந்த பட்ச இழப்பீடாக வழங்க முடியும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 முதல் 10 இலட்சம் ரூபாய் வரையிலே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் தாக்குதலுக்கு உள்ளான வீடுகளுக்கு அதிகபட்சமாக 16 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

எனினும், கெஹெலிய ரம்புக்வெல்ல 900 இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளார். அந்த நிதியில் கிளிநொச்சியில் ஒரு கிராமத்தை அபிவிருத்தி செய்திருக்க முடியும்.

Click here to join our whatsApp group

இத்தகைய சேதங்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதுடன் இந்த இழப்பீடுகள் முற்று முழுதாக கையூட்டலாகவே வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முதலிடத்தில் நம்ம நாட்டு சீகிரியா!

0

Booking.com வலைத்தளத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முதலிடத்தில் உள்ளது. 

360 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Booking.com என்ற வலைத்தளம், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்படும் சேவையைப் பாராட்டி, உலகின் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்றாக சீகிரியா பெயரிடப்பட்டுள்ளது. 

Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.

Click here to join our whatsApp group

நாட்டில் திடீரென உண்டான நெருக்கடி!

0

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாகவில்லு பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு ஒரு தொகை விருந்தினர் இருக்கைகள் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தினரால் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினரின் பூரண அனுசரணையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான 10 விருந்தினர் இருக்கைகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையில் நீண்ட கால தேவையாக இருந்துவந்த விருந்தினர் இருக்கைகள், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து குறித்த கதிரைகள் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

விகாரையை இடித்தே ஆகவேண்டும்!

0

மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது இனவாதக் கருத்தல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளது. மக்களின் காணி அவர்களுக்கே உரியது. ஆனால் இன்று அது மறுக்கப்படுவதாக தெரிகின்றது.

நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு  எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல.

அதனால் குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

ஆனாலும் அது இதுவரை நிறைவேறாத நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல முரணான கருத்துக்கள் கூறப்பட்டு திசை திருப்பும் முயற்சியொன்று உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் காட்டப்பட்டது.

அதேநேரம் இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டும் இருக்கின்றது.

அதனால் நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு, இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாக கருதி இடிக்கப்படுவது அவசியம். 

அத்தோடு விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்டவிரோதமாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்சார் தரப்பினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர்.

அந்த வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்திற்கு எமது  ஆதரவை  நாம் வழங்கவுள்ளோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

எரிந்து சாம்பலாகும் ஹசீனாவின் சாம்ராஜ்யம்!

0

டாக்கா, வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் நீடித்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அரசுக்கு எதிராக கடும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இணையதளம் வாயிலாக ஷேக் ஹசீனா தன் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 5ம் தேதி இரவு உரையாற்றினார். அப்போது, இடைக்கால அரசுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

அன்றிரவு முதல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

டாக்காவில் உள்ள வங்கதேச நிறுவனரும், முன்னாள் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீடு முன் குவிந்த ஆயிரக்கணக்கான மாணவர் அமைப்பினர், அவரின் பூர்வீக வீட்டை சூறையாடி எரித்தனர்; புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கினர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நீடித்தன. டாக்காவின் பனானியில் உள்ள அவாமி லீக் ஆட்சிக் குழு உறுப்பினர் ஷேக் சலீம் வீட்டிற்கு சென்ற போராட்டக்காரர்கள், அவரது வீட்டை தீ வைத்து எரித்தனர்.

நோகாலியின் கம்பனிகஞ்ச் பகுதியில் உள்ள அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலர் ஒபைதுல் குவாடரின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அருகில் இருந்த அவரது சகோதரர் அப்துல் மிர்சாவின் இரண்டு மாடி கட்டடமும் சூறையாடப்பட்டது. அங்கிருந்த முன்னாள் மேயர் ஷஹாதத் மிர்சாவின் வீடும் இந்த சம்பவத்தின் போது தீக்கிரையானது.

ராஜ்ஷாஹி மாவட்டம் சக்சிங்கா மொஹாலியில் இருந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ்ரியார் ஆலமின் மூன்று மாடி கட்டடத்துக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

பாகா, சார்காட், பாப்னா உட்பட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்த அவாமி லீக் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. தீ எரிப்பு சம்பவங்களின் போது, அந்தந்த வீடுகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

குமிலா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற சுவரில் வரையப்பட்டிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சுவரோவியம் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.

நரசிங்கடியில் இருந்த அவாமி லீக் கட்சி அலுவலகமும் இடித்து தள்ளப்பட்டது.

பாகர்ஹாட்டில், முக்திஜோத்தா வளாகம், நகராட்சி பூங்கா, ஷாஹீத் மினார், மோங்லா பரிஷத் வளாகம், மோங்லா குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் முஜிபுர் ரஹ்மானின் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “பாசிசத்தின் அடையாளமாக திகழும் ஷேக் ஹசீனா தொடர்பான எந்த விஷயத்தையும் தடயமின்றி தகர்ப்பதே எங்கள் நோக்கம்,” என, தெரிவித்தனர்.

Click here to join our whatsApp group

போதைக்காக சித்தியிடம் கை வைத்த மகன்!

0

போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட  திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, 

திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 03 ஆம் திகதி தங்க நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் அடிப்படையில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த, முறைப்பாட்டாளரின் அக்காவின் மகனே திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  

மேலும் சந்தேகநபரிடமிருந்து, திருடப்பட்ட நகையில் ஒரு தொகுதியும், ஒரு தொகை பணம் மற்றும்  2 கிராம் 400 மில்லி கிராம்  ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் திருட்டுக்கு உடந்தையாக செயற்ப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

திருட்டில் ஈடுபட்டவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களை கொள்வனவு செய்யவே திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Click here to join our whatsApp group

சரமாரியாக தாக்கப்பட்ட SLMC எம்.பி!

0

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர்  தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் காயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்  முகம்மது சாலி நழீம் எமது செய்திளாரிடம் தெரிவிக்கையில்,

அரசியல் பிரச்சினை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தைக்கும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில்  கலீல் என்பர் தாக்குதல் நடத்தினார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து காலையில் கொழும்பில் இருந்து வந்த தாம் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி  ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள்ள சென்ற போது, பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன், பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தாக்க முற்பட்டபோது பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர் என்றார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் முரண்பட்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Click here to join our whatsApp group

நாகவில்லு பாடசாலையில் பரிசளிப்பு விழா!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு S.M. ஹுசைமத் தலைமையில் நேற்று (06.02.2025) பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இதன்போது 2024 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த 9 மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் திரு S.M. ஹுசைமத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன், பாடசாலையின் அனுசரணையுடன் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.

மேலும் மாணவர்களின் குறித்த வெற்றிக்காக பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மேலதிக வகுப்புகள் மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்களினால் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவித்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

என்னது 1800 கோடி வசூலா??

0


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‘புஷ்பா-2’. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை செய்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 400 கோடி வசூல் செய்த நிலையில் இந்த புஷ்பா-2 படமோ உலக அளவில் 1800 கோடி வசூல் செய்து இந்திய அளவில் 2024ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக முதலிடம் பிடித்தது.

அதையடுத்து இப்படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடப்பட்ட போதும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததோடு, தற்போது ஓடிடி தளத்திலும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் மூலம் புஷ்பா-2 படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ரசிகர்களை கவர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று அப்படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.