Thursday, March 12, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 242

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மு.ஜ ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 7,000 மில்லியன் ரூபாவை பணத்திற்காக, பல்வேறு கொடுப்பனவுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 11,000 மில்லியன் ரூபாவைத் தாண்டிய மீதியை பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பறிபோகுமா பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

0

அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய சுதந்திர முன்னியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

அதில், பிரதிவாதிகளாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற பொது செயலாளர், ருஹுனு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உபவேந்தர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

உபாலி பன்னிலகே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது, ​​அவர் ருஹுனு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பேராசிரியராக பணியாற்றியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சேவையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பின் 91வது பிரிவின் கீழ் சட்டத்திற்கு முரணானது எனவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு தகுதியற்றதாகும் எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்படி, அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தல், பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக ரிட் ஆணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்  கோரியுள்ளார்.

துறைகளை காட்டிக் கொடுத்த அரசாங்கம்!

0

இந்திய ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்த ரோஹண விஜேவீரவின் கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் தலைவரது ஆட்சியில் இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் அந்நாட்டிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான சதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் வலு மின் தொகுப்பை நிறுவ இணக்கம் காணப்பட்டதாக இரு தலைவர்களதும் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தின் ஊடாக எரிபொருள் மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு பரிமாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மேலதிக மின்சாரம் காணப்படுவதால் அதனை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பாகும் என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இன்று மின்சாரம் தேவைக்கதிகமானதாக இருந்தாலும் நாடு அபிவிருத்தியடையும் போதும் அதனைப் பயன்படுத்த முடியும்.

அத்தோடு அவசர நிலைமைகளின் போது இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்து கொள்வதற்கும் இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் அவசர நிலைமையின் போது அதானியிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்தது. பின்னர் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், முழு நாடும் இருளடைந்தது.

இலங்கையிலும் தற்போது வலுசக்தி துறையுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர். இது மிகவும் பாரதூரமானதாகும். எதிர்காலத்தில் மின்சாரத்துக்காக இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்குவதற்கான நடவடிக்கைகளே இதன் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

அரசியல், கலாசார, வலுசக்தி மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்புவதாக இந்தியா குறிப்பிடுகிறது. மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு என்ற ஒரு விடயமும் அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக எரிபொருளுக்காகவும் நாம் முழுமையாக இந்தியாவை தங்கியிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். தற்போது இந்தியா, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்று அதனை சுத்திகரித்து லங்கா ஐ.ஓ.சி.க்கு வழங்குகிறது. இதன் ஊடாக ஐ.ஓ.சி.க்கு பாரிய இலாபம் கிடைக்கின்றது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட இந்த குழாய் திட்டம் ஒருபோதும் இலங்கையின் எரிபொருள் துறைக்கு பாதுகாப்பானதாக அமையப்போவதில்லை. அது மாத்திரமின்றி தோல்வியடைந்த வலுசக்தி துறையை தோற்றுவிப்பதாகவும் இத்திட்டம் அமையும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கிய விடயங்களையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான ஆட்சி முறை இலங்கையில் ஏற்படாவிட்டால், அதில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு இந்த குழாய் திட்டங்களைப் பயன்படுத்தக் கூடும். மாலைத்தீவில் இந்தியாவை விட சீனாவுக்கு சாதகமான ஆட்சி ஏற்பட்டமையால் இந்திய சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டுக்கு செல்வது கூட தடுக்கப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் இலங்கைக்கு கற்றுக் கொடுத்த ரோஹண விஜேவீரவின் நாமத்தைப் பயன்படுத்துபவர்களின் ஆட்சியின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பாரிய பேரிடராகும். இலங்கையின் வலுசக்தி துறையில் தலையிடுவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனக் கூறியவர்கள், இன்று இந்தியாவுக்கு சென்று வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையை காட்டிக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை எட்கா ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்திய தொழிலாளர்கள் இலங்கையின் தொழில் சந்தைகளுக்குள் கட்டுப்பாடின்றி பிரவேசிக்க முடியும்.

தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் எவ்வாறு கடவுச்சீட்டு இன்றி டில்லிக்கு சென்று தொழிலில் ஈடுபட முடியுமோ, அதேபோன்று இலங்கைக்குள்ளும் பிரவேசிக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

எட்கா தொடர்பில் பேச வேண்டிய தேவை கூட இல்லை. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால் அதற்கு இணங்க வேண்டியேற்படும். அவ்வாறு இணங்கினால் இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் இலங்கைக்கு மனித வளங்கள் இறக்குமதியாகும். இது பாரதூரமானதாகும்.

பொது மக்கள் இது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான தொழில் வாய்ப்புக்களை பறிப்பதற்கான ஆரம்பமே இதுவாகும். இதற்கு எதிராக நாம் குரல்கொடுப்போம் என்றார்.

சீன அரசுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர!

0

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது ஒத்துழைப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதி சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் (Qin Boyong) ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (18) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார்.

அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும், பல்வேறு காரணங்களுக்காக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சமுத்திர ஆய்வு பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் உப தலைவர் இதன்போது கூறினார்.

அத்தோடு, ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதுடன்,எதிர்வரும் காலங்களில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஷ்வி சாலி, சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மா யூசியாங் (Ma Youxiang) ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இன்றைய வானிலை மாற்றங்கள், முக்கிய அறிவிப்பு!

0

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 2 நாட்களில் வடமேற்குத் திசையில் வடக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய தினத்திற்கான (டிசம்பர் 19ஆம் திகதி) வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அம்பலமானது எம்.பிக்களின் பெயர்ப்பட்டியல்!

0

2005-2024 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (17) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

இந்நாட்டின் வறுமைக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட நலன்புரி நடவடிக்கைகளுக்காக இந்த நிதியத்தின் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நம் நாட்டில் குழந்தைகளுக்கு உதவக்கூடிய ஒரு நிதியம் உள்ளது. ஜனாதிபதியின் நிதியச் சட்டம். அதில் எப்படி உதவுவது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.”

1 வறுமை ஒழிப்புக்காக
2 கல்வி அல்லது அறிவை வளர்க்க
3 மதத்தை வளர்ப்பதற்காக
4 நாட்டுக்கு சேவை செய்தவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு
5 ஜனாதிபதி அல்லது சபை எடுக்கும் முடிவுகளுக்கு அமைய நன்மைக்காக

“2005-2024 ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட பணம் தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன.”

பி. ஹெரிசன்
பியசேன கமகே
சுமேதா ஜயசேன
மனோஜ் சிறிசேன
பி தயாரத்ன
எஸ்சி முத்துக்குமாரன
வாசுதேவ நாணயக்கார
எஸ்.பி நாவின்ன

“இந்த நபர்களின் பெயர்கள் நேரடியாக உள்ளன. இன்னும் பல பெயர்கள் உள்ளன …  

“தயாசிறி பத்மகுமார ஜயசேகரவாக இருக்க வேண்டும்.”
பியால் நிஷாந்த டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
இசுர தேவப்பிரிய

 ” இன்னும் இருக்கிறார்கள்…”

ஜகத்குமார –  10 இலட்சம் ரூபாய்
கே.பி.எஸ் குமாரசிறி –  953,430 ரூபாய்
ஜயலத் ஜயவர்தன – 10 இலட்சம் ரூபாய்
நாமல் குணவர்தன – 10 இலட்சம் ரூபாய்
தர்மதாச பண்டா – 10 இலட்சம் ரூபாய்
விதுர விக்கிரமநாயக்க – 15 இலட்சம் ரூபாய்
விமலவீர திஸாநாயக்க – 30 இலட்சம் ரூபாய்
லக்கி ஜெயவர்த்தனே –  16.2 இலட்சம் ரூபாய்
பி சந்திரசேகரன் – 14 இலட்சம் ரூபாய்
ஜோன் அமரதுங்க – 40 இலட்சம் ரூபாய்
ஜோசப் மைக்கல் பெரேரா – 27 இலட்சம் ரூபாய்
டி.பி.ஏக்கநாயக்க – 48 இலட்சம் ரூபாய்
டபிள்யூ.எம்.எஸ்.பொன்சேகா (சரத் பொன்சேகா அல்ல) –  55 இலட்சம் ரூபாய்
ஜயந்த வீரசிங்க – 90 இலட்சம் ரூபாய்
எலிக் அலுவிஹாரே – 22 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் அலுவிஹாரே – 8.6 இலட்சம் ரூபாய்
ராஜித சேனாரத்ன – 100 இலட்சம்  ரூபாய்
கெஹலிய ரம்புக்வெல்ல – 110 இலட்சம் ரூபாய்
எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன – 112 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் சொய்சா – 188 இலட்சம் ரூபாய்
தி மு ஜயரத்ன – 300 இலட்சம் ரூபாய்

11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும்!

0

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று(17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 08ஆம் திகதி வரை எழுத்துமூலமான கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், மாகாண மட்டத்தில் 9 அமர்வுகள் மூலம் வாய்மொழி கருத்துகள் பெறப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு தொடர்பான எழுத்துபூர்வ யோசனைகளை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். 

076 427 10 30 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தபால் மூலமாகவும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும். 

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி நடைமுறைப்படுத்த மின்சார சபை தற்போது முன்மொழிந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் குறித்து அதிர்ச்சி தகவல்!

0

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பொதுமக்களின் பணம் செலவிடப்படுவதாகவும், அந்த தொகை 1448 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

“இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 228 ஆயுதப் படை வீரர்களும் பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 4 இராணுவ அதிகாரிகளையும் 60 பொலிஸ் அதிகாரிகளையும் மெய்ப்பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 188 ஆயுதப் படை வீரர்களையும், 22 பொலிஸாரையும் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 மற்றும் 60 இராணுவ வீரர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும், திருமதி ஹேமா பிரேமதாசவிற்கு 10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..”

இதன்போது, ​​அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பதினொன்றரை மாதங்களில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 1448 மில்லியன் ரூபாவை செலவிட்டது தொடர்பான உண்மைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 3 நிறுவனங்களின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் ஜனாதிபதி அலுவலகம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த பதினொன்றரை மாதங்களில் ஆயுதப்படைக்கு மட்டும் 328 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 55 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி 11 மாதங்களில் 710 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆயுதப் படையைச் சேர்ந்த 6 மில்லியன், பொலிஸில் இருந்து 185 மில்லியன் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் 16 மில்லியன் என மொத்தமாக 207 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக ஆயுதப்படையினர் 258 மில்லியன் ரூபாவும், பொலிஸார் 39 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகம் 10 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 307 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, முப்படையினருக்கு 19 மில்லியன் ரூபாவும், பொலிஸாருக்கு 60 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 3 மில்லியன் ரூபாவும், இந்த மூன்று மாதங்களுக்கு 82 மில்லியன் ரூபா.

சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படைகளின் செலவை முப்படைகளும் ஏற்கவில்லை. பொலிஸாருக்கு 99 மில்லியன், ஜனாதிபதி அலுவலகத்திற்கு 12 மில்லியன் மற்றும் மொத்த செலவு 112 மில்லியன் ரூபா.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கான செலவை முப்படைகளும் ஏற்கவில்லை. பொலிஸ் 30 மில்லியன், ஜனாதிபதி அலுவலகம் 03 மில்லியன், மொத்த தொகை 32 மில்லியன்.

இதற்கிணங்க, சபாநாயகர் அவர்களே, இந்த பதினொன்றரை மாதங்களுக்குள் மக்களின் பணமான 1448 மில்லியன் ரூபாவை அரசாங்கம் இந்த ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் செலவுகளுக்காக செலவிட்டுள்ளது. இது மிகவும் கடினமான சூழ்நிலை.”

பொதுமக்களின் கருத்துக்கள் நாளைமுதல்!

0

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனவரி 08 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பான கருத்துக்களை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6வது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு 03 என்ற முகவரி அல்லது info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொது மக்கள் அனுப்பலாம்

அத்துடன் 076 42 710 30 என்ற வட்ஸ்அப் எண்ணிலும் நீங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கலாம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்கு வருகை தந்தோ அல்லது மாகாண மட்டத்தினால் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்றோ கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிய வருடத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என மின்சார சபை பரிந்துரைத்திருந்தது.

இதன்படி, குறித்த யோசனையை ஆணைக்குழுவால் மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கருத்துக்களுக்காக முன்மொழிவு அடங்கிய வரைவு காட்சிப்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 03 அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க  நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.