Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 255

ஈரானின் தலைமையில் இஸ்ரேலுக்கு பேராபத்து!

0

ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் (Israel) கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ், ஜிஹாத் அமைப்புகள் மற்றும் ஈரான் (Iran) ஒன்றிணைந்து இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள தமது ஆதரவாளர்களை சந்தித்து இஸ்ரேலை தாக்குவதற்கான சிறந்த வழி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, ஈராக் ஆயுதக் குழுக்களின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஹிஸ்புல்லா, ஹூதி, இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளும் கலந்துரையாடலில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் படி, சிரியாவில் (Sryia) இருந்து ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் சிரிய பாலைவனங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கப் படையினர் தலையிடாவிட்டால், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ரணிலுக்கு?

0

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என நாளைத் தீர்மானிக்கவுள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம், அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சித் தலைவர் ரவுஃப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது யாருக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களுடன் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் அரசாங்கத்தின் ஜனாதிபதியுடன் பெரும்பான்மை கட்சிகளின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தமது ஆதரவுகளை வெளிப்படுததியுள்ள நிலையில் சிறுபான்மை கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் வெளிவாராமல் இருப்பது கேள்விக்குரியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு கட்சியின் உறுப்பினர்கள் கட்டுப்படுவார்களா? இல்லையா? என்று பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.

நாகவில்லு பாடசாலையில் முப்பெரும் விழா-2024

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாளயத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் ஜனாப் எஸ்.எம். ஹுசைமத் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இன்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பாடசாலைக்கான உள்ளக வீதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு வைபவமும் இன்றைய நிகழ்வில் இடம்பெற்றது.

சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று இப்பாடசாலைக்கு கண்டிப்பாக தேவை என பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களிடம் ஈ நியூஸ் பெஸ்ட் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்ததின் மூலமாக குறித்த ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றை பாடசாலைக்கு தருவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு’’ எனும் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் உபகரணங்கள் பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஈ நியூஸ் பெஸ்ட் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இதேவேளை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் பாடசாலைக்கு மிக விரைவில் வழங்கப்படும் என பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜவ்ஸி, இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி, ஊடகசெயலாளர் எம்.எம்.நௌபர், பாடசாலை அபிவித்தி சங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது – பதரிய ஜனாதிபதி

0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின்  அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.

இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியா தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர் என்று ஈரானிய புரட்சிப் படைகள் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 இலட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்த 116 உறுப்பினர்கள்!

0

பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (31) இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

“நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீற முடியாது. தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2022 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். அந்த ஆதரவு இல்லாவிட்டால் இன்று நாடு இந்த நிலையை அடைந்திருக்காது. எனவே அந்த தீர்மானத்தை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த இடத்தில் உள்ளனர். ஆனால் மக்களுக்காக இணைந்து பயணிக்க வேண்டும். சம்பிரதாய அரசியல் இனி செல்லுபடியாகாது. ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு வழியில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பியதர்ஷன யாப்பா, இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆஷு மாரசிங்க, முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மாகாண அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியிடம் படையெடுத்த மொட்டு எம்.பிக்கள்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நூற்று ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe) வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (vajira abeywardena) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் நேற்று (29) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

இவ்வாறு சென்றவர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பால் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்?

0

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு தாம் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பெஃப்ரல் அமைப்பு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

குறித்த திட்டங்களைத் தடுக்கும் வகையில் பெஃப்ரல் அமைப்பு செயற்படுவதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்குமாறே உயர்நீதிமன்றிடம் தங்களால் கோரப்பட்டுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளைப் பின்பற்றப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளதாக பெஃப்ரல் அமைப்புகுறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனம் திறந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0

நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம் முதல் தம்முடன் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு நெருக்கடியில் இருந்தபோதும் எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போதும் என் மீதும் எனது திட்டத்தின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தீர்கள்.

சவால்களைச் சமாளிக்க முடியாததாகத் தோன்றிய சந்தர்ப்பத்தில் உங்களது அர்ப்பணிப்புக்கள் அளப்பரியன.

இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களை வரவேற்கிறோம்.

நேர்மறையான சிந்தனைகளைப் பகுத்தறிந்து கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக இணைவதன் முக்கியத்துவத்தை நீங்கள் தற்போது புரிந்துள்ளீர்கள்.

ஒன்றாக இணைவதால், நாம் இன்னும் சாதிக்க முடியும்.

அதேநேரம் செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடரும் என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த பயணம் எளிதானதல்ல ஆனால் ஒன்றாக இணைவதன் மூலம் நிலைபேற்றை அடையலாம்.

அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்பார்ப்புடனான இலங்கையை உருவாக்குவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார்.”உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது.நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மீண்டும் கட்சியில் இணைந்த ஆப்தீன் எஹியா!

0

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தராசுக் கூட்டணியில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா மீண்டும் மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளத்தின் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும், கட்சியின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவும் இப்பயணத்தில் இணைந்து கொண்டதாக ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

இதன்போது, முன்னாள் வட மேல்மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான M.T.M. தாஹிர், புத்தளம் முன்னாள் நகரபிதா A.O. அலிகான், மௌலவி பஸால் இஸ்மாயீல், சகோதரர் முயீன், ஆசிரியர் முஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.