Sunday, June 28, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 260

நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!

0

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 1 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரவுள்ளது.

சஜித் தலைமையில் அதிரடியாக கூடிய கூட்டம்!

0

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று (17) காலை பாராளுமன்றத்தில் கூடினர்.

இந்த விசேட கூட்டத்தில் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் தேர்தல் மேடையில் வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றியுள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உந்துதல் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், ​​மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், இராசமாணிக்கம் சாணக்கியன், கயந்த கருணாதிலக்க, ரோஹித அபேகுணவர்தன, அனுராதா ஜயரத்ன,

எஸ். ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, வி. இராதாகிருஷ்ணன், பத்மநாதன் சத்தியலிங்கம், ஜே.சி.அலவத்துவல, சாமர சம்பத் தசநாயக்க, ரவி கருணாநாயக்க, டி.வி சானக்க, காதர் மஸ்தான், முஹமது இஸ்மாயில் முத்து முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Click here to join our whatsApp group

மாணவர் உதவித்தொகைக்காக 4600 மில்லியன் நிதி!

0

மாணவர் உதவித்தொகைக்காக 4600 மில்லியன் நிதி ஒதுக்கீடு

தரம் 05 புலமைப்பரிசில் உதவித்தொகை 750 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரை அதிகரிப்பு.

விளையாட்டு பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உணவுக் கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து இருந்து 10000 ரூபா வரை அதிகரிப்பு.

தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 4000 ரூபாவிலிருந்து இருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பு.

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து இருந்து 7500 ரூபா வரை அதிகரிப்பு.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை 4000 ரூபாவிலிருந்து இருந்து 6500 ரூபா வரை அதிகரிப்பு.

Click here to join our whatsApp group

எருக்கலம்பிட்டியில் கட்டிட திறப்பு விழா!

0

எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் பூரண ஆசாரணையில் இயங்கிவரும் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 16.02.2025 மன்னார் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து எனும் தொனிப்பொருளுக்கு அமைய, சிறார்களின் கல்விக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில், எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் (சுங்கத் திணைக்கள பிரதி அத்தியட்சகர்) தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் குறித்த பாலர் பாடசாலை, சகல வசதிகளுடன்கூடிய, தேசிய தரத்திலான முன்மாதிரி பாலர் பாடசாலையாக உருவாகவேண்டும் என்ற அடிப்படையில், எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் அவர்களின் குடும்பத்தில் மரணித்த மர்ஹூம்களின் நினைவாக, குறித்த முன்பள்ளியின் நான்காவது வகுப்பறைக்கான புதிய கட்டிடம், தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் மற்றும் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் ஆகியோர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

சுமார் நூற்றுக்கும் அதிகமான சிறார்கள் கல்விகற்று வரும் இப்பாலர் பாடசாலையில், விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டு உபகரணங்களும், கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு இன்றைய நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் நிலையான தர்மத்தின் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் இருநூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் எதிர்கால திட்டம், கல்லூரியின் அபிவிருத்திக்கான மூலோபாயங்கள் குறித்த விஷேட கலந்துரையாடலிலும் பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் கலந்து சிறப்பித்தார்.

A.Baur & Co.(Pvt.) Ltd. நிறுவனத்தின் இறக்குமதி முகாமையாளர் திரு. ரவிச்சந்திரன் குறித்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்டதுடன், 75 மாணவர்களுக்கான சுமார் 50 லட்சம் பெறுமதியுடைய தளபாட உபகரணங்களையும் வழங்கிவைத்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் சின்னஞ் சிறார்களின் மேடை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன், வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களின் விஷேட வழிகாட்டல் சொற்பொழிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குறித்த நிகழ்வில் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், ஷஹாப்தீன் குடும்பத்தினர்கள், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் அதிபர், முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

வெளியேறிய தேசிய அமைப்பாளர்!

0

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விலகியுள்ளார்.

இரு தரப்பினரும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். 

இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

சட்டத்தரணி சுமந்திரனுக்கு புதிய பதவி!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (16) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரை காப்பாற்றிய குதிரைக்கு சிலை!

0

ஆற்றில் விழுந்தவரை காப்பாற்றிய பைலாங் என்ற குதிரைக்கு, சீன அரசு சார்பில் ஆற்றின் கரையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான்டாவோ நகரில் பைலாங் என்று பெயரிடப்பட்ட குதிரையும், அதன் உரிமையாளர் யிலிபாயும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றுக்குள் தவறி விழுவதை கண்டனர்.

ஆற்றங்கரையில் நின்றிருந்த அந்த நபரின் மகள் உதவிக்காகக் கூச்சலிட்டாள். உடனே சற்றும் தயக்கமின்றி, பைலாங்கில் சவாரி செய்த யிலிபாய், குதிரையை ஆற்றில் வழிநடத்தினார். ஆபத்து இருந்தபோதிலும், பைலாங் 40 மீட்டருக்கு மேல் தண்ணீரில் நீந்தியது.

யிலிபாய் ஒரு கையில் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் நீரில் மூழ்கிய நபரை இழுத்து காப்பாற்றினார். இந்த வியத்தகு மீட்பு சம்பவம், ஒரு வைரல் வீடியோவில் பதிவாகி இருந்தது.

துணிச்சலான மீட்பு சம்பவம் நடந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, பைலாங் கடுமையாக நோய்வாய்ப்பட்டது. கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்ட குதிரைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களை தீவிர முயற்சி மேற்கொண்டனர். முயற்சிகள் செய்த போதும், குதிரை பிப்ரவரி 11 அன்று இறந்தது.

யிலிபாய் கூறியதாவது:பைலாங் புத்திசாலி. நான் அதற்கு ஒரு சவுக்கை சுண்டியதுமே ​​அது தண்ணீருக்குள் தைரியமாக செல்லத் தொடங்கியது. நீரில் மூழ்கும் மனிதனை நான் இழுப்பதைப் பார்த்த பிறகு, அது திரும்பி நீந்தியது. என் குதிரையும் நானும் ஒரு குடும்பம் போல. நான் அதை நம்பினேன், அதுவும் என்னை நம்பியது.

பைலாங்கின் மரபை மதிக்கும் வகையிலும், அதன் துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக, சியான்டாவோ நகர நிர்வாகம், ஆற்றின் அருகே ஒரு சிலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click here to join our whatsApp group

ஆயுர்வேத அறுவை சிகிச்சை வழங்கும் மூன்றாவது மருத்துவமனை!

0

பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த சிகிச்சை சேவைகளை ஒரே மருத்துவமனையில் வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கவும், இந்த திட்டத்தை பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையிலிருந்து ஆரம்பிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

ஒரே மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் புதிய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தை பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் உள்ள பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் தற்போதைய சிகிச்சை சேவைகளை ஆய்வு செய்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையில் ஆயுர்வேத அறுவை சிகிச்சையை வழங்கும் மூன்றாவது மருத்துவமனையாக வரலாற்றை உருவாக்கி இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

மேற்கத்திய மருத்துவ முறைகள் மற்றும் உள்ளூர் சிகிச்சை முறைகள் மூலம் மக்களுக்கு சிறந்த, பாதுகாப்பான மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நம்பிக்கையுடன் இந்த புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாகவும், இது உள்ளூர் மருத்துவ சிகிச்சை சேவைகளுக்கு மதிப்பு மற்றும் சிறப்பை வழங்க உதவும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பல்லேகலே ஆயுர்வேத மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, மருந்து அரைக்கும் பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு, பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு மற்றும் கட்டண வார்டுகளை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். மத்திய மாகாணத்திற்கு சிறந்த சேவையை வழங்கும் இந்த ஆயுர்வேத மருத்துவமனையை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மருத்துவமனையாக மாற்ற முடியும் என்றும், மருத்துவமனை வழங்கும் சிகிச்சை சேவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களிடையே ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும், அதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்கவும் முடியும் என்றும் அமைச்சர் இந்த நிகழ்வில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டில் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை உள்வாங்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இதனால் கடற்கரை, ஹோட்டல் அல்லது கலாச்சார அல்லது மத தளங்களுக்குச் செல்வதற்கு மட்டும் சுற்றுலாப் பயணிகளை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டில் சுற்றுலாப் பயணிகளை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும் அமைப்பை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கவும், மலிவு விலையிலும் சிறந்த தரத்திலும் தனியார் சிகிச்சையை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவமனை ஊழியர்களிடம் உரையாற்றிய அமைச்சர், ஆயுர்வேதத் துறையின் முன்னேற்றத்திற்காக பல நிறுவனங்கள் நியமிக்கப்பட்டதாகவும், இந்த நிறுவனங்களுக்கு சுதேச மருத்துவ முறைகளை மேம்படுத்துதல், ஆயுர்வேத சிகிச்சை சேவைகள், மருந்து உற்பத்தி மற்றும் மருந்துகளின் இறக்குமதி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தொடங்குவதன் மூலம், உலகளாவிய அறிவை பாரம்பரிய அறிவுடன் இணைத்து, அறிவியல் ஆய்வு மூலம் அதைப் பராமரிக்கும் ஒரு மேம்பட்ட சுதேச மருத்துவ முறையை நிறுவுவதும், சில விதிமுறைகளுக்குள் முறையான முறையில் சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் உயர்தர மற்றும் நெறிமுறை சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இங்கு, சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை ஊழியர்களுடன் அமைச்சர் நீண்ட நேரம் விவாதித்தார், மேலும் அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை மருத்துவமனைக்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அனைத்து ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவுகளையும் கொண்ட பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனை, கடந்த காலத்தில் ஒரு எஸ்டேட் மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது, மேலும் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு தினமும் வருகிறார்கள்.

இந்த மருத்துவமனை 120க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டது, இதில் 08 பஞ்சகர்மா சிகிச்சை பிரிவுகள் மற்றும் வார்டு வளாகங்கள் மற்றும் 11 கட்டண வார்டு அறைகள் உள்ளன. தினமும் 400-500 பேர் வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

Click here to join our whatsApp group

மத்திய மாகாணத்திற்குத் தேவையான மருந்து உற்பத்தி இந்த மருத்துவமனையின் மருந்து உற்பத்தி நிலையத்திற்குள் மேற்கொள்ளப்படுவதும் தனித்துவமானது. வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்காக இந்த மருத்துவமனைக்குள் வெளிநோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளான எண்ணெய் மசாஜ், நீராவி மசாஜ், பல்ஸ் மசாஜ் போன்றவற்றை வழங்குகிறது.

இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணத்திலும் கலந்துரையாடலிலும் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ். அபேகோன், மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையர் டபிள்யூ.டி.சி. விக்ரமதிலகா, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மத்திய மாகாண சுகாதார செயலாளர் ஜகத் அதிகாரி, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ருக்மல் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விபத்துக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர்!

0

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்று சாவகச்சேரி நோக்கி திருப்பிய வேளை பின்னால் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர், சாரதி மூவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கிளிநொச்சியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தாத்தாவுக்கு எமனாக மாறிய பேரன்!

0

எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

நேற்று (14) அதிகாலை எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் ஆவார். 

உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் ஒரு பிள்ளை இருந்ததாகவும், அவரும் அவர்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த வீட்டின் உரிமை தொடர்பில் அவர் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதன்போது உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டதாகவும், இதன்போது தரையில் விழுந்து காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Click here to join our whatsApp group