Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 284

வடமேல் மாகாண பட்டதாரிகளுகு ஓர் நற்செய்தி

0

வடமேல் மாகாண பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடமேல் மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட அரச தொழில் நியமனங்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம்பெறத் தவறியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்தச் சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயது எல்லையை முப்பத்தி ஐந்தில் இருந்து நாற்பது வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு தான் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடமேல் மாகாண பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்

இந்தச் சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சிந்தக மாயாதுன்னே எம்.பி., வடமேல் மாகாண பிரதம அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தலைமையில் பீல்ட் மார்ஷலின் நூல் வெளியீடு

0

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.

இதன்போது புத்தகத்தின் முதல் பிரதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனையடுத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.

இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார்.

யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார். யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது. அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர். அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது.

உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்.

அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார். அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கம் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் தெரிவை கொண்டு நாம் பயனடைந்தோம். அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. அவரால் நாட்டுக்கு இனியும் சேவையாற்ற முடியும். அவரின் சேவைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். “Old soldiers never die they fade away.In this instance he wont fade away either, so he is still there.” என்ற வகையில் எதிர்காலத்தில் அவரிடத்திலிருந்து பெறக்கூடிய சேவையை பெற்றுக்கொள்ள நாட்டுக்கு சந்தர்ப்பம் கிட்டுமென நான் நம்புகிறேன்.

தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார். அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்.” என்றும் தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

“படையினரின் அர்ப்பணிப்பின் பலனாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பெருமளவானவர்கள் அங்கவீனமடைந்தனர். அதற்கான கௌரவத்தை அனைத்து இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கும் தெரிவிக்கிறேன். நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே அவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதேபோல் நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்தினர்.

யுத்தத்தை நிறைவு செய்ய அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென பலரும் கூறினர். நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற வேளையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் கவலையுடனேயே இருந்தனர். இருப்பினும் நாம் முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். இராணுவ வீரர்களின் இரத்தம், வியர்வை சிந்தப்படமால் அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்யப்படாதிருந்தால் யுத்தத்தை வெற்றிகொண்டிருக்க முடியாது. யுத்தத்தின் பின்னர் இந்நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருந்தனரா என்பது கேள்விக்குரியாகும்.” என்றும் தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் தலைமையிலான ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும், தூதுவர்கள், முன்னாள் இராணுவ தளபதிகள், அனோமா பொன்சேகா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ஜே.வி.பி கட்சிதான்

0

ஜே.வி.பி கட்சியின் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு எமது கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டவர்கள் மக்களை சுடுவதற்கு நான் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியில் தலைவர் கருத்து வெளியிட்ட போது ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு மக்களை அச்சுறுத்துவதாகச் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் வழங்கும் வகையில் இன்று (28) மட்டக்களப்பில் இடம்பெற்ற வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்கு தலை சரியில்லை. அவர்கள்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் மக்களை சுடுவதற்கு நான் ஆயுதம் கொடுக்கவில்லை. அவர் மட்டக்களப்புக்கு வந்தால் பொறுப்புடன் கதைக்கப் பழகவேண்டும்.

அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும். அவர் மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்

நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய ஒரு கட்சி தான் அவரின் கட்சி. நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்கபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இணைந்து பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளத்துடன், மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன்.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிமன்றத்தில் தடை உத்தரவினை பெற முடியவில்லை. இதுவரையிலும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படவில்லை என்பதோடு இது சம்பந்தமான முறைப்பாட்டை செய்துள்ளேன்.

விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெறவேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

0

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இலந்தையடி பாடசாலைக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

0

நுரைச்சோலை இலந்தையடி சிங்கள மகா வித்யாலயத்திற்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் W.K.L.S. தமேல் தலைமையில் நேற்று இடம்பெற்றது

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் பாடசாலையின் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் தொகுதிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் இல்லாததால் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பாகவும், விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மாவட்டத்திற்கு உள்ளேயே பிரிவினைகள் ஏற்பட்டது தொடர்பாகவும் அரசியல்வாதிகள் தமது சொந்த இலாபங்களுக்காக மக்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.

இழந்த அடி பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து சிறந்த முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தி மூலம் பாடசாலையின் தேவைகள் பூரதி செய்யப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் எருக்கலம்பிட்டியில் கூட்டு குர்பானி விநியோகம்

0

புத்தளம் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பினரால் இம்முறையும் புத்தளம் எருக்கலம்பிட்டியில் கூட்டு குர்பானி விநியோகம் இடம்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப்பெருநாள் கூட்டு குர்பானி விநியோகம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்று வருகின்றது.

2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் வஹ்தா நலன்புரி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் குர்பான் கொடுப்பதற்காக மக்களை ஆர்வப்படுத்தி, நெறிப்படுத்தி சிறந்த வழிகாட்டல்கள் மூலம் குர்பானியை நிறைவேற்றச்செய்து அவைகளை சிறந்த முறையில் மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் ஓர் பாரிய சவாலான வேலைத்திட்டத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்து வரும் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பின் சேவை அளப்பரியது.

அந்த வகையில் இம்முறையும் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பினரால் கூட்டு குர்பானி விநியோகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இம்முறையும் நாட்டின் நாளா பகுதிகளிலும் வாழும் எருக்கலம்பிட்டி மக்களிடமிருந்து கூட்டு குர்பானிக்கான பங்களிப்புகளை பெற்று, சுமார் 27 மாடுகளை கொள்வனவு செய்து, ஒரே தினத்தில் அறுத்து விநியோகம் செய்தமையானது பாரிய ஒரு வெற்றியாகும் என அல் வஹ்தா நலன்புரி அமைப்பின் தலைவர் ஜனாப் செய்னுலாப்தீன் அபுல் ஹைர் தெரிவித்தார்.

அர்ப்பணிப்புள்ள மிக உயர்ந்த சேவையினை தொடர்ச்சியாக செய்து வரும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பினருக்கு eNews1st நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவு!

0
  • 6,000 உயர்தர மாணவர்களுக்கும் தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம் ஆரம்பமானது.
  • அடையாளமாக 5108 மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
  • உடனடியாக நிலுவைத் தவணையுடன் புலமைப்பரிசில் உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.
  • ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்விப் புலமைப்பரிசில் வழங்குவதற்காக இவ்வருடத்தில் 04 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நாட்டின் பிள்ளைகளுக்கு இன்னும் 05-10 வருடங்களில் சிறந்த நாடு உருவாக்கப்படும்.

ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வருமானம் வழங்குவதற்காக ‘அஸ்வெசும’ வேலைத்திட்டமும் காணி உரிமையை வழங்க உறுமய வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகளுக்கு கல்விஅறிவை வழங்குவதற்காக ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து 100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6 000 ரூபா வீதம் 6000 மாணவர்களுக்கு 02 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடசாலைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச புலமைப்பரிசில் 04 என்பதோடு அதிகபட்ச புலமைப்பரிசில் 22 ஆகும். ஏப்ரல் 2024 முதல் 12 மாதங்கள் வரை, ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3000/- வீதம் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இன்று 5108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு அடையாளமாக புலமைப் பரிசில்களை வழங்கினார்.

புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்தார்.

அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு ஆப்பு!

0

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (18) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், உத்தேச வாடகை வருமான வரி குறித்தும் இந்த சபைக்கு கருத்தை தெரிவிக்க வேண்டும். நாம் செல்வ வரியொன்றை அறிமுகப்படுத்துகிறோம். மேலும் அதன் வரையறை மிக அதிகமாக இருக்கும். எனவே, நாட்டின் 90% வீடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் தரவரிசையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் வாடகை வருமான வரி விதிக்கிறோம். அதன் பிறகு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த மதிப்பீடுகள் மாகாண சபைகளுக்கு சொந்தமானது. தரவரிசைப் பட்டியலின்படி இந்த வரி விதிக்கப்பட்டால், பெறப்படும் பணம் மாகாண சபைக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் கூறலாம். எனவே, அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற வேண்டும். எனவே வாடகை வருமான வரி என்ற வித்தியாசமான சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த வருமான வரி மத்திய அரசுக்குச் சொந்தமானது.

நாங்கள் பொதுவாக இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். தற்போதுள்ள சட்டச் சிக்கலைத் தீர்க்கவே இதைச் செய்தோம். ஆனால் வரி வரையறை மிக அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டி ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நாம் செல்வ வரி விதிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கும் வரி விதிக்கப்படுமோ என்று மிகவும் கவலைப்படுவதையும் நான் அறிவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எழுவாங்குளம் – மன்னார் பஸ் போக்குவரத்து ஆரம்பம்

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் காதர் மஸ்தான் ஆகியோரின் பாரிய முயற்சியினால் புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி (கலாஓயா பாலம்) வரையான பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி வரையான பஸ் சேவைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை மரிச்சிக் கட்டி (கலாஓயா பாலம்) தொடக்கம் மன்னார் வரையான பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் மன்னார் முதல் மடிச்சிக்கட்டி வரைக்குமான பஸ் சேவைக்கு போக்குவரத்து சபையின் அனுமதி மிக விரைவில் கிடைக்கப்பெற்று பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் நம்பிக்கை தெரிவித்தார்.

பல வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்ட குறித்த போக்குவரத்து வீதியானது, மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பாரிய முயசியின் பின்னணியில் மீண்டும் குறித்த வீதி திறக்கப்படுவதினால் பல மணி நேர விரயம் இல்லாமல் போவதுடன், குறுகிய நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி திறக்கப்படுவதன் மூலம் புத்தளத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தி அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவலைப்பதன் மூலம் புத்தளத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.