Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 288

இலங்கை கிரிக்கெட்டை காட்டிக்கொடுத்த அதிகாரி

0

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை எடுப்பதற்காக தொலைக் காணொளி ஊடாக இடம்பெற்ற அவசர கூட்டத்தில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நேற்று முதல் இடைநிறுத்தியது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், இது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திடீர் முடிவாக இருந்தாலும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கோரிக்கைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக் இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைகளை குறி வைக்கும் குண்டுகள்! சிதறும் மனித உடல்கள்

0

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல் 36வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது. எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர்.

ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது. எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக் கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக் கொண்டனர்.

சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.

ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. இவ்வாறான நிலையில் ஆரம்பமான மோதலில் இஸ்ரேல் கண்மூடித்தனமான பல தாக்குதலில் இறங்கியது. இப்படி 36வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 4,506. காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷிஃபா மீது இஸ்ரேல் ராணும் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 13 பேரும், பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறுகையில்,

ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கீழ் சுரங்கங்களை அமைத்து தங்களை தற்காத்து வருகின்றனர். அப்பாவி பொதுமக்களை அவர்கள் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று பள்ளி மற்றம் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நீடித்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதேபோல ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”

சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த அதிர்ச்சி முடிவு-இலங்கை நிர்வாகம் திகைப்பில்

0

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானம் குறித்து மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் மேன்முறையீட்டு செயற்பாடுகள் இடம்பெறும்.

அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது.

இந்திய அணி அபார வெற்றி! கதறி அழுத தென்னாபிரிக்கா

0

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி இன்று(5) இடம்பெற்றது.

குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 49ஆவது சதம் இதுவாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை பெற்றிருந்தார்.

இந்தநிலையில், இன்றைய தினம் விராட் கோலி பெற்ற சதத்துடன், சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அத்துடன், இந்திய அணிசார்பில் ஸ்ரேயாஷ் ஐயர் 77 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 327 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி .. ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து … ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக மெர்கோ ஜொன்சன் 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய தென்னாபிரிக்க அணியின் ஏனைய வீரர்கள் 14க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நீரிழிவு நோய் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீரிழிவு நோய்த் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையின் சனத்தொகையில் 10 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை விரட்ட ஹமாஸ் போட்டுள்ள பகீர் பிளான்

0

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளைச் சமாளிக்க ஹமாஸ் போட்டுள்ள திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முதலில் தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதேநேரம் இப்போது ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.

காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மிக விரைவில் முழு வீச்சில் படையெடுப்பையும் ஆரம்பிக்க உள்ளது.

ஹமாஸ் படை: இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேல் முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஹமாஸ் முழு வீச்சில் ரெடியாகி வருகிறது. இதனால் மிகப் பெரிய மற்றும் நீண்ட போருக்கு ஹமாஸ் தயாராகி வருகிறது.

இதன் மூலம் போர் நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று இஸ்ரேல் நம்புகிறது.காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் குழு அங்கே ஆயுதங்கள், ஏவுகணைகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைக் குவித்து வருகிறது.

காசாவுக்கு அடியில் இருக்கும் சுரங்கப்பாதைகளைக் கொண்டு ஹமாஸ் பல மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என்பதில் ஹமாஸ் உறுதியாக இருக்கிறது. மேலும், இஸ்ரேல் படைகள் உள்ளே இறங்கினால் அவர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்களை விரக்தியடையச் செய்யவும் ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.

குறிவைக்கப்படும் அமெரிக்கா?

முதலில் ஹமாஸ், அடுத்து இப்போ ஹிஸ்புல்லா! இஸ்ரேல் போரில் பகீர் திருப்பம் என்ன திட்டம்:

இஸ்ரேலை முடிந்தவரைத் தடுத்து நிறுத்துவதே ஹமாஸ் நோக்கமாக இருக்கிறது. ஹமாஸை சில வாரங்கள் வரை தொடர்ந்து தடுத்து நிறுத்தினால், அதற்குள் சர்வதேச அழுத்தம் காரணமாகப் ​​போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஹமாஸ் நம்புகிறது. இதை இலக்காக வைத்தே ஹமாஸ் திட்டம் போட்டு வருகிறது.

ஹமாஸ் வசம் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிப்பது தொடர்பாக கத்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இஸ்ரேலில் இருக்கும் அனைத்து கைதிகளையும் விடுவித்தால் தங்களிடம் இருக்கும் அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிப்போம் என்று ஹமாஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதனால் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்பது ஹமாஸுக்கு நன்கு தெரியும். அது தெரிந்தாலும் ஹமாஸ் தனது திட்டத்தில் பின்வாங்க ரெடியாக இல்லை.

ஹமாஸ் குறித்து நீண்ட ஆய்வு செய்யும் கத்தார் பல்கலைக்கழக வல்லுநர் அதீப் ஜியாதே இது குறித்துக் கூறுகையில், இஸ்ரேல் மீது கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் பார்த்திருப்பீர்கள். மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட அந்த தாக்குதலை நிபுணத்துவம் பெற்றவர்கள்தான் திட்டமிட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்பதை ஹமாஸ் உணர்ந்தே இருந்தது. இதனால் அவர்கள் ஏற்கனவே நீண்ட காலப் போருக்குத் தயாராகியிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். நீண்ட கால சண்டைக்கு ரெடியாகாமல் ஹமாஸ் அந்தத் தாக்குதலை நடத்தி இருக்காது என்றார்.

அதேநேரம் ஹமாஸின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவும் கருத்து கூறி இருக்கிறது. அதாவது காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் போது அதை ஹமாஸ் எவ்வளவு முடியுமா எவ்வளவு நீட்டிக்கும். அப்போது உயிரிழப்பு நிச்சயம் அதிகரிக்கும். அந்த செய்திகளை வைத்து மக்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதே ஹமாஸின் திட்டமாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஏற்கனவே சுமார் 40,000 பேரைத் திரட்டவிட்டதாகவே கூறப்படுகிறது. இவர்களுக்கு அங்குப் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்ட பல நூறு கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதைகள் எல்லாம் அத்துப்படி.

80 மீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்த சுரங்கப்பாதை வலையமைப்பில் அவர்களால் மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும். 120 கிமீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகளையும் ஹமாஸ் வைத்துள்ளனர்.

இத்துடன் மேலும் பல ஆயுதங்களையும் அவர்கள் குவித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், போர் ஆரம்பித்தால் எப்படியும் அது நீண்ட காலத்திற்குச் செல்லும் என்பதால் உணவுகளையும் கூட ஹமாஸ் சேமித்து வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. அதாவது அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பே ஆயுதங்கள், உணவுகளைக் குவித்துள்ளனர்..

மேலும் வீரர்களையும் திரட்டியுள்ளனர். இப்போது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் இதை வைத்து இஸ்ரேலைத் தடுக்க முடியும் என்று ஹமாஸ் நம்புகிறது.

ஏற்கனவே, அண்டை அரபு நாடுகள் இஸ்ரேலின் செயல்களைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. வரும் நாட்களில் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நிஜ்ஜார் விவகாரம்.. ஐநா வரைக்கும் கொண்டு சென்ற கனடா

0

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை சாடி வரும் கனடா, ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தியாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளது.

தங்கள் மண்ணில் அந்நிய தலையீடு இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது.இந்தியா-கனடா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தான். கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த கொலைகளுக்கு பின்னணியில் இந்திய ஏஜெண்ட்களின் பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது. இந்தியாவுக்கு பங்கு இருக்கலாம் என்று கனடா சொல்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அதேபோல், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதற்கிடையே கனடா விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குவதகாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.50 முறை துப்பாக்கிச்சூடு.. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை குறித்த சிசிடிவி காட்சிகள்? பரபர தகவல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்கள் எதையும் கனடா வழங்கவில்லை என்று இந்தியா கூறியிருந்தது. ஆனால், கனடா பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது என ட்ரூடோ கூறினார். இவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை மோதலும் தடித்து வருகிறது.

இப்படி மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கனடா இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் நடந்து வருகிறது.அதாவது, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில், இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடும் வகையில் கனடா சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான கனடா தூதர் போப் ரே கூறியதாவது:-

அந்நிய நாடுகளின் தலையீட்டால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியல் தேவைகளுக்காக அரசுகளுக்கு இடையேயான விதிகளை வளைக்க முடியாது.அதே நேரத்தில் சமத்துவத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் மதிப்புகளை நாங்கள் உறுதி செய்ய வேண்டியும் உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால் நாங்கள் ஏற்றுக்கொண்ட விதிகளை பின்பற்றாமல் இருந்தால் எங்களின் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான சமூகத்தின் திரை கிழிக்கப்படும் என்றார்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடாவை சாடும் வகையில் பேசினார். ஜெய்சங்கர் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசியல் வசதிக்காக தீர்மானிக்கக் கூடாது என்று சாடியிருந்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஜெய்சங்கரின் இந்த உரை இருந்தது.

சோகத்தில் முடிந்த திருமணம்: தீ விபத்தில் 100 பேர் பலி

0

ஈராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஈராக், நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், திருமண மண்டபத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கட்டடத்தின் கூரைகள் அங்காங்கே இடிந்து விழுந்ததில் தீ வேகமாக பரவியுள்ளது.

இதனால் மண்டபத்தைவிட்டு வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

முதல்கட்ட விசாரணையில் திருமண நிகழ்வின்போது வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உயர்நிலைக் குழு விசாரணைக்கு ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய ரீதியில் நாகவில்லு பாடசாலை மாணவி 2ஆம் இடம்

0

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட மாணவர் சாகித்திய விழாவில், ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தமிழ் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடத்தினை புத்தளத்தை சேர்ந்த முஹம்மத் ஜனீஸ் செய்னப் பெற்றுக்கொண்டுள்ளார்.

“எமது தேசத்தை விழிப்படைய செய்வோம்” எனும் தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கலாச்சார துணை குழுவினரால் 28 வது தடவையாக இந்த போட்டி நடாத்தப்பட்டிருந்து.

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் பல்கலைக்கழக பொறியியல் பீட ஈ.ஓ.ஈ. அரங்கில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் இம்மாணவி, நாகவில்லு  முஹம்மது ஜனீஸ் மற்றும் பாத்திமா சியாஸ்னா தம்பதிகளின் புதல்வியாவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த இம்மாணவியை எமது ஊடகமும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது

உலகக் கோப்பை போட்டியிலிருந்து ஹசரங்கா விலகல்?

0

பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 48 ஒருநாள் போட்டிகளில் 832 ரன்களும் 67 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு முக்கியமான ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். ஆசிய கோப்பை போட்டியிலும் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார் ஹசரங்கா.

இதற்கு முன்பாக லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவரும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவருமாக ஹசரங்கா அசத்தினார்.

தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் செப்.28ஆம் தேதி உலகக் கோப்பை போட்டி அணிக்கான கடைசி மாறுதல்களை அறிவிக்கலாம் என்பதால் இன்னும் 4 நாள்கள் இருக்கிறது.

ஏற்கனவே மதீஷா தீக்‌ஷானா ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைந்தார். இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஹசரங்காவின் இழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்குமென கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.