Wednesday, July 1, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 316

தற்கொலை செய்துகொண்ட பல்கலை மாணவர்

0

கிளிநொச்சி விவேகாநந்த நகர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஓருவர் தமது வீட்டிலேயே உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு, கணிதப்பிரிவில் அவர் பயின்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நீண்ட காலமாக, மன அழுத்தத்தால் பாதிப்படைந்திருந்த நிலையில், அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால், அவர், உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த மாணவன், 2020ம் ஆண்டு உயர் தரப்பரீட்சையின், கணிதப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 85ம் இடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல: ரணிலின் ஆட்சி

0

திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் – சதித்திட்டங்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல. இது ரணிலின் ஆட்சி.

எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மக்களுக்காகவே நாட்டை பொறுப்பேற்றேன். அதிபர் பதவியை ஏற்றேன்.

எந்தத் தடைகள் வந்தாலும் மக்கள் பலத்துடன் அதனைத் தகர்த்தெறிந்து நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பேன்.

நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன். கஷ்டப்படும் மக்கள் மீண்டெழுவார்கள். மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காண்பேன். என தெரிவித்துள்ளார்.

மேலும், மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

7 குழந்தைகளை வேண்டுமென்றே கொன்ற தாதி

0

வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 7 சிசுக்­களை வேண்­டு­மென்றே கொலை செய்­தமை தொடர்­பான வழக்கில் பிரித்­தா­னிய தாதி ஒருவர் குற்­ற­வாளி என இங்­கி­லாந்தின் மென்­செஸ்டர் கிறவுண் நீதி­மன்றம்  நேற்­று­முன்­தினம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

33 வய­தான லூசி லெட்பி எனும் இப்பெண், 2015 ஜூன் மற்றும் ஒக்­டோபர் மாதங்­க­ளுக்கு இடையில் 5 குழந்­தை­க­ளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்­தை­க­ளையும் பல்­வேறு முறை­களில் லூசி லெட்பி கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்­தை­களை கொல்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டார் எனவும் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

ஊசி மூலம் காற்றை செலுத்­தியும், பல­வந்­த­மாக பால் கொடுத்தும், இன்­சுலின் மூலம் நஞ்­சூட்­டியும் வேண்­டு­மென்றே அவர் குழந்­தை­களை கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இங்­கி­லாந்தின் செஸ்டர் நக­ரி­லுள்ள, கவுன்டஸ் செஸ்டர் வைத்­தி­ய­சா­லையில் 2011ஆம் ஆண்டு முதல்  தாதி­யாக லூசி லெட்பி பணி­யாற்­றினார்.

2015, 2016 காலப்­ப­கு­தியில்  வழக்­குத்­துக்கு மாறான எண்­ணிக்­கையில் சிசுக்கள் உயி­ரி­ழப்­பது மற்றும் உடல்­நலக் குறைவால் பாதிக்­கப்­ப­டு­வது போன்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

2017 ஆம் ஆண்டில் பொலி­ஸா­ர் விசா­ர­ணையைத் தொடங்­கினர். மேற்­படி சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நாட்­களில் குறித்த வைத்­தி­ய­சாலை அறையில் தாதி லூசி லெட்பி பணியில் இருந்தமை தெரி­ய­வந்­தது.

 

2018 ஆம் ஆண்டு அவரை பொலிஸார் கைது செய்­தனர்.

கடந்த ஒக்­டோபர் மாதம் நீதி­மன்ற விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

இந்­திய வம்­சா­வளி மருத்­துவர் ரவி ஜெயராம் இது தொடர்­பாக கூறு­கையில், குழந்­தை­களின் உடலில் ஒட்சின் குறையும் போது, லூசி லெட்பி, எதையும் செய்­யா­மல், குழந்­தை­களை இறக்­க­விட்டார் என்­பதை என்னால் உறு­தி­யாகச் சொல்ல முடியும்’ என்றார்.

தன்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை லூசி லெட்பி நிரா­க­ரித்தார். எனினும், 7 சிசுக்­களை கொன்­றமை, 6 சிசுக்­களைக் கொல்ல முயன்­றமை சந்­தே­கத்­துக்கு இட­­மின்றி  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளது.

நவீன பிரிட்டனின் மிக மோசமான சிறுவர் தொடர் கொலையாளி என லூசி லெட்பி வர்ணிக்கப்படுகிறார்.

லூசி லெட்பிக்கான தண்டனை நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதி­மன்றம் தெரிவித்துள்ளது.

இம்ரான் கானை சிறையில் வைத்து கொள்ள சதி

0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்தநிலையில், சிறையில் இம்ரான்கான் உணவில் விஷம் கலந்து கொல்லப்படலாம் என்று அவரது மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளேன். அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் கொடுக்கப்படலாம். எனது கணவரை எந்த நியாயமும் இன்றி அட்டாக் சிறையில் அடைத்துள்ளனர். அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்.
அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் இம்ரான்கான் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. அட்டாக் சிறையில் என் கணவர் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
எனவே வீட்டில் சமைத்த உணவை சிறையில் அவர் சாப்பிட அனுமதிக்க வேண்டும். அவருக்கு 48 மணி நேரத்துக்குள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் 12 நாட்கள் ஆகியும் இன்னும் வசதிகள் வழங்கப்படவில்லை. சிறை விதிகளின்படி அவருக்கு தனியார் வைத்தியரிடம் பரிசோதனை செய்ய உரிமை உண்டு. அவருக்கு வசதிகள் செய்து கொடுக்காதது பற்றி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ரூஹுல் ஹக்கிற்கு கட்டாய விடுமுறை

0

சர்ச்சைக்குரிய பல பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டதற்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூ ஹுல் ஹக்கை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின்னர், உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேத பரிசோதனை மற்றும் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மருத்துவ சபையினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது

அத்தோடு, கடந்த வருடம் டிசம்பர் மாதம், அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து பறிபோகும் தீவு

0
கச்சத்தீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு எந்தவொரு காலத்திலும் இலங்கைக்கு சொந்தமானது என வரைபடங்களில் கூட கூறப்படவில்லை எனவும் இந்திய வரைபடத்துடன் இணைக்கப்பட்டதாகவே அது உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்தமையின் ஊடாக இந்தியாவை விட தமிழகத்திற்கே அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளமையை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கச்சத்தீவு விவகாரத்தில் அதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தூதரக ரீதியாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தமிழர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமையில் இருந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அதிகரித்ததாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை மு.ம.கல்லூரிக்கு ரூபா 50 இலட்சம் பெறுமதியான பஸ் வண்டி

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு ரூபா 50 இலட்சம் பெறுமதியான பஸ் வண்டியை இன்று அன்பளிப்புச் செய்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலியின் வேண்டுகோளுக்கு அமைவாக சக்வல – பிரபஞ்சம் வேலை திட்டத்தின் கீழ் 75 ஆவது பஸ் வண்டி ஒன்றினை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று(14)காலை 10.30 மணியளவில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பஸ் வண்டியை சஜித் பிரேமதாஸ சம்மாந்துறை ஹிஜ்ரா பெரிய பள்ளிவாசல் சந்தியிலிருந்து செலுத்திக் கொண்டு வந்து குறித்த பாடசாலையின் வாசல் முன்றலில் நிறுத்தினார்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜவுக்கு முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் அநோக வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தயின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் உட்பட கல்வி அதிகாரிகள், பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தயின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

சேனல் Eye லைக்காவுக்கு விற்கப்பட்டதா?

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சேனல் ஐ (SLRC) லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரூபவாஹினி ‘சேனல் ஐ’ அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு விற்பதற்கென ஊடகத்துறை அமைச்சர் பந்துலவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையில் இன்று நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை இறுதியில் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

ஏற்கனவே ஜூலை மாத இறுதியில் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு ‘சேனல் ஐ’ நிறுவனத்தை வழங்க இரு தரப்பினரும் இணங்கியதாகவும், ஆனால் ரூபவாஹினி பணிப்பாளர் சபை அல்லது வெகுஜன ஊடக அமைச்சின் முன் அனுமதி இதற்காக பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளதாக அறியமுடிந்தது.

அமைச்சின் ஒப்புதலின்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே ‘சேனல் ஐ’ அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்தது.

ஹவாய் தீவுகளில் காட்டு தீ – பலி எண்ணிக்கை 93

0

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் காட்டு தீ பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தீப்பரவலினால் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர மவுயி (Maui) தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை நகரான லஹய்னாவின் 80 சதவீதமான பகுதிகள் தீயினால் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஆரம்பமான காட்டு தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீயணைப்பு படையினர் முயன்று வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் கடுமையான புயல் வீசுவதனால், காட்டு தீ தொடர்ந்தும் புதிய பிரதேசங்களுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GOLDEN MUG

சொக்லட்டுக்குள் மனித விரல்

0

மஹியங்கனை வைத்தியசாலையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரால், வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலையில் வாங்கப்பட்ட சொக்லட்டுக்குள் (Chocolate) மனித விரலொன்று இருந்துள்ளது.

குறித்த ஊழியர் சொக்லட்டை வாங்கி, உண்ணும் போது மிகவும் கடினமான முறையில் வாயில் கடிபட்டதை தொடர்ந்து, அதை கழுவி பார்த்த போது நகத்துடன் கூடிய பெருவிரல் பகுதி காணப்பட்டள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பில் வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சொக்லட்டில் மீட்கப்பட்ட மனித விரல் - வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - ஐபிசி தமிழ்

https://www.enews1st.lk/product/customized-magic-mug/