Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகுவைத்தில் கட்டிட தீவிபத்தில் 41 பேர் பலி

குவைத்தில் கட்டிட தீவிபத்தில் 41 பேர் பலி

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இந்திய பிரஜைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டின் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular