Thursday, July 9, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldஅமெரிக்க தளங்கள் மீது ஈரான் கொடூர தாக்குதல்!

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கொடூர தாக்குதல்!

  • ஈரானுக்குள் புகுந்து 90 இலக்குகளை அமெரிக்கா தாக்கியழித்ததைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடாத்திப் பதிலடி கொடுத்துள்ளது.
  • பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியட் ஏவுகணை முறைமைகள், செயற்கைக்கோள் அன்டனாக்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்களைக் குறிவைத்தே இத்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
  • நள்ளிரவில் பஹ்ரைனில் அபாயச் சங்குகளும் (Sirens), கட்டாரில் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அவசரக்கால எச்சரிக்கை குறுஞ்செய்திகளும் (Emergency Alerts) அனுப்பப்பட்டதால் வளைகுடா நாடுகள் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

வளைகுடா பிராந்தியம் எப்போதுமே ஒரு எரிமலை தான், ஆனால் இன்று நள்ளிரவு அது வெடித்துச் சிதறியிருக்கின்றது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்த பகையனல், இப்போது முழு அளவிலான வான்வழிப் போராக உருவெடுத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகப் பார்க்கப்படும் ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்ற ஒற்றைப் புள்ளியில் தான் இந்த போர் அபாயம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று அதிகாலைப் பொழுதில் ஈரான் இராணுவம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டது. வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் “மூலோபாய பாதுகாப்பு மையங்களை” இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அது உத்தியோகபூர்வமாக அறிவித்தது. குவைத்தில் உள்ள பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு, கட்டாரில் உள்ள அமெரிக்காவின் செய்மதி முன்னெச்சரிக்கை அன்டனா தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைகளின் பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு டாங்கிகள் என அமெரிக்காவின் பாதுகாப்பு அரண்கள் ஈரானின் நவீன ட்ரோன்களால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் நள்ளிரவில் அரங்கேறியபோது வளைகுடா நாடுகள் எப்படி உறைந்து போயின என்பதை கத்தாரில் இருந்து வரும் கள நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதிகாலை 4 மணியளவில் கத்தார் மக்களின் மொபைல் போன்களுக்கு அவசரக்கால அலாரங்கள் அலறியுள்ளன. “வீடுகளுக்குள் இருங்கள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி கட்டிடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்” என அரசு விடுத்த குறுஞ்செய்தியால் மக்கள் பீதியடைந்தனர். அதேநேரம், அண்டை நாடான பஹ்ரைனில் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் நள்ளிரவில் இரண்டு முறை முழங்கியுள்ளன. பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படையினர், தங்கள் மீது தொடுக்கப்பட்ட பல ஈரானிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக அவசரமாக அறிவித்துள்ளனர்.

ஈரான் ஏன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியது என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் கொடூர தாக்குதல்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈரானின் 5 மாகாணங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 78 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கொடூரம் என்னவென்றால், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கொலையுண்ட நிலையில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படவிருந்த மஷாத் நகருக்கான பிரதான ரயில் பாதையையும் அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். அத்துடன் சஹ்பஹார் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றும் அமெரிக்க குண்டுகளின் சிதறல்களால் சேதமடைந்துள்ளது.

உலகையே உலுக்கியுள்ள இந்த மோதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில், “ஈரான் எங்களைத் தாக்கினால் 1க்கு 20 என்ற கணக்கில் திருப்பி அடிப்போம். அவர்கள் எங்களோடு சமாதான உடன்படிக்கைக்கு வர துடிக்கிறார்கள்” என அதிரடி காட்டியுள்ளார். ஆனால், இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும், வாக்குறுதிகளை மீறும் செயல்களுக்கும் இனி இலவசமாக விலக்கு அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் செய்த தப்புக்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். இரு தரப்பும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத நிலையில், வளைகுடா பிராந்தியம் ஒரு பெரும் உலகப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது என்பதே தற்போதைய நிதர்சனமாகும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கொடூர தாக்குதல்!

  • ஈரானுக்குள் புகுந்து 90 இலக்குகளை அமெரிக்கா தாக்கியழித்ததைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடாத்திப் பதிலடி கொடுத்துள்ளது.
  • பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியட் ஏவுகணை முறைமைகள், செயற்கைக்கோள் அன்டனாக்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்களைக் குறிவைத்தே இத்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
  • நள்ளிரவில் பஹ்ரைனில் அபாயச் சங்குகளும் (Sirens), கட்டாரில் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அவசரக்கால எச்சரிக்கை குறுஞ்செய்திகளும் (Emergency Alerts) அனுப்பப்பட்டதால் வளைகுடா நாடுகள் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

வளைகுடா பிராந்தியம் எப்போதுமே ஒரு எரிமலை தான், ஆனால் இன்று நள்ளிரவு அது வெடித்துச் சிதறியிருக்கின்றது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்த பகையனல், இப்போது முழு அளவிலான வான்வழிப் போராக உருவெடுத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகப் பார்க்கப்படும் ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்ற ஒற்றைப் புள்ளியில் தான் இந்த போர் அபாயம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று அதிகாலைப் பொழுதில் ஈரான் இராணுவம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டது. வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் “மூலோபாய பாதுகாப்பு மையங்களை” இலக்கு வைத்து பாரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அது உத்தியோகபூர்வமாக அறிவித்தது. குவைத்தில் உள்ள பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு, கட்டாரில் உள்ள அமெரிக்காவின் செய்மதி முன்னெச்சரிக்கை அன்டனா தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைகளின் பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு டாங்கிகள் என அமெரிக்காவின் பாதுகாப்பு அரண்கள் ஈரானின் நவீன ட்ரோன்களால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் நள்ளிரவில் அரங்கேறியபோது வளைகுடா நாடுகள் எப்படி உறைந்து போயின என்பதை கத்தாரில் இருந்து வரும் கள நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதிகாலை 4 மணியளவில் கத்தார் மக்களின் மொபைல் போன்களுக்கு அவசரக்கால அலாரங்கள் அலறியுள்ளன. “வீடுகளுக்குள் இருங்கள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி கட்டிடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்” என அரசு விடுத்த குறுஞ்செய்தியால் மக்கள் பீதியடைந்தனர். அதேநேரம், அண்டை நாடான பஹ்ரைனில் வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் நள்ளிரவில் இரண்டு முறை முழங்கியுள்ளன. பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படையினர், தங்கள் மீது தொடுக்கப்பட்ட பல ஈரானிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக அவசரமாக அறிவித்துள்ளனர்.

ஈரான் ஏன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியது என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் கொடூர தாக்குதல்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈரானின் 5 மாகாணங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 78 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கொடூரம் என்னவென்றால், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கொலையுண்ட நிலையில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படவிருந்த மஷாத் நகருக்கான பிரதான ரயில் பாதையையும் அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். அத்துடன் சஹ்பஹார் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றும் அமெரிக்க குண்டுகளின் சிதறல்களால் சேதமடைந்துள்ளது.

உலகையே உலுக்கியுள்ள இந்த மோதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில், “ஈரான் எங்களைத் தாக்கினால் 1க்கு 20 என்ற கணக்கில் திருப்பி அடிப்போம். அவர்கள் எங்களோடு சமாதான உடன்படிக்கைக்கு வர துடிக்கிறார்கள்” என அதிரடி காட்டியுள்ளார். ஆனால், இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும், வாக்குறுதிகளை மீறும் செயல்களுக்கும் இனி இலவசமாக விலக்கு அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் செய்த தப்புக்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். இரு தரப்பும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத நிலையில், வளைகுடா பிராந்தியம் ஒரு பெரும் உலகப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றது என்பதே தற்போதைய நிதர்சனமாகும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular