Monday, June 15, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஈஸ்டர் விசாரணைகள்: நீதிக்கான பயணமா அல்லது அரசியல் பழிவாங்கலா?

ஈஸ்டர் விசாரணைகள்: நீதிக்கான பயணமா அல்லது அரசியல் பழிவாங்கலா?

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் என்பது இலங்கையின் நவீன வரலாற்றில் மிகவும் வேதனையான ஒரு தேசிய வடுவாகும். அன்று அப்பாவி மக்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை; மாறாக அரசின் மீதான மக்கள் நம்பிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிவது எந்தவொரு கட்சியின் அரசியல் திட்டமாகவும் இருக்கக் கூடாது. இது பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள், மத மற்றும் தேசிய நல்லிணக்கம், பாதுகாப்புப் படையின் நிரபராதியான உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் சட்ட முறைமை ஆகியவற்றுக்குச் சொந்தமான நீதிக்கான பிரச்சினையாகும்.

எனினும், இன்று ஈஸ்டர் விசாரணை தொடர்பில் வேறொரு அரசியல் செயற்பாடு காணப்படுகின்றது. முன்னாள் புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரக் கட்டமைப்புகள் அல்லது பழைய அரசியல் முகாமுக்கு நெருக்கமான நபர்கள் மீது சட்டம் செயற்படத் தொடங்கும் போது, அதனை “அரசியல் பழிவாங்கல்” எனப் பெயரிடும் பிரசாரங்கள் முன்னிலைக்கு வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது சட்டப்பூர்வமான நடைமுறையைப் பற்றிப் பேசுவது போல் தோன்றலாம். ஆனால், இதன் ஆழமான அரசியல் நோக்கம், சட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தச் செயன்முறையை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதாகும்.

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மத தீவிரவாத வலையமைப்பு ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது என்பதை ஏற்றுக்கொள்வது, அந்தத் தாக்குதல் நடைபெற எவ்வாறு இடமளிக்கப்பட்டது என்ற கேள்வியை இல்லாதொழிக்காது.

  • தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காண்பது ஒரு விடயம்.
  • அதனைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் ஏன் தவறவிடப்பட்டன?
  • முன்னெச்சரிக்கைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன?
  • விசாரணைகள் முடக்கப்பட்டனவா?
  • புலனாய்வுச் சேவைகளுக்கும் அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளுக்கும் இடையில் அசாதாரண தொடர்புகள் இருந்தனவா?
  • தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சத்தின் மூலம் அரசியல் ரீதியாகப் பயனடைந்தவர்கள் யார்?

என்பவற்றைக் கண்டறிவது மற்றுமொரு முக்கியமான விடயமாகும். “சஹ்ரான் தான் செய்தார்” என்ற பதில், “வேறு எதையும் விசாரிக்க வேண்டாம்” என்ற முடிவுக்கு இட்டுச்செல்ல முடியாது. இது சட்டத்தின் தர்க்கம் அல்ல, மாறாக உண்மையை மூடிமறைக்கும் ஒரு அரசியல் தர்க்கமாகும்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு உயர்ந்தபட்ச சுயாதீனமான வெளியை வழங்கியுள்ளதாகவே தெரிகிறது. சட்டமானது அரசியல் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அதிகாரம் கொண்டவர்களை நெருங்கக்கூடிய சூழல் உருவாகியிருப்பது, சட்டத்தின் ஆட்சியை உயிர்ப்பிப்பதாகும்.

அரசியல் பழிவாங்கலா?

சட்டம் அதிகாரம் மிக்க ஒருவரை நெருங்கியதால் மாத்திரம் அது ஒருபோதும் “அரசியல் பழிவாங்கலாக” மாறிவிடாது. அரசியல் பழிவாங்கல் ஒன்று இருக்குமானால், அது சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்பட வேண்டும். விசாரணை பழைய ஆளுங்கட்சி முகாமுக்கோ, முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது அரசியல் ரீதியாக அதிகாரம் மிக்க நபருக்கோ தொடர்புடையது என்பதற்காக மாத்திரம் அதனைப் பழிவாங்கல் எனப் பார்ப்பது, சட்டத்தின் சுயாதீனமான செயற்பாட்டிற்கு எதிரான ஒரு தற்பாதுகாப்புப் பிரசாரமாகும்.

ஜனநாயக நாடொன்றில், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் இரகசிய அதிகாரத்தின் உரிமையாளர்கள் அல்ல. அவை மக்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாகும். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அந்த நிறுவனங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். இரகசியத்தன்மை நாட்டினைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பாதுகாக்க அல்ல. குறிப்பிட்ட ஒரு புலனாய்வு அதிகாரி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை, ஒட்டுமொத்த இராணுவத்திற்கும் எதிரான தாக்குதலாகச் சித்தரிப்பது முற்றிலும் தவறான ஒப்பீடாகும். இராணுவத்தின் கௌரவம் பொறுப்புக்கூறலினூடாகவே பாதுகாக்கப்படுகிறதே அன்றி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியோடுவதன் மூலம் அல்ல.

உண்மையைத் தேடும் பயணம்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையின் அரசியல் களம் மாறியது. மக்கள் மத்தியில் அச்சம், கோபம், பாதுகாப்பு தொடர்பான அவநம்பிக்கை மற்றும் பலமான நிர்வாகம் ஒன்றிற்கான கோரிக்கை ஆகியவை ஒரே நேரத்தில் அதிகரித்தன. அரசியல்-பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் “பாதுகாப்பு” என்பது வெறுமனே ஒரு அரச சேவையாக அன்றி, அரசியல் பெறுமதி கொண்ட ஒரு மூலதனமாக மாறியது. அந்த மக்கள் அச்சத்தின் மூலம் அரசியல் ரீதியாகப் பயனடைந்த அதிகார முகாம்கள், இன்று ஈஸ்டர் உண்மையைத் தேடுவதை ஒரு சட்ட மற்றும் அரசியல் ஆபத்தாகப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

அதனால்தான், ஈஸ்டர் விசாரணையை “அரசியல் பழிவாங்கல்” எனப் பெயரிடுவது வெறுமனே ஒரு கருத்து வெளியீடு அல்ல. அது பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் ஒரு தந்திரோபாயமாகும். பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட ஒரு குற்றத்தில், நீதி என்பது உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரிகளின் பெயர்களை மீண்டும் கூறுவதல்ல; நீதி என்பது முழுமையான உண்மையாகும்.

உண்மையான தேசிய நல்லிணக்கம்

எனவே, நாட்டுக்குத் தேவையானது விசாரணையை வலுப்படுத்துவதாகும். ஆனால், அது சட்டத்திற்குப் புறம்பாக அல்லாமல், சட்டத்தின் ஊடாகவே நடைபெற வேண்டும். சந்தேக நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்புப் படையினரின் கௌரவம் ஒட்டுமொத்தமாக அபகீர்த்திக்கு உள்ளாக்கப்படக் கூடாது. அதேபோல, பாதுகாப்புப் படையின் பெயரைப் பயன்படுத்தி எவரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கக் கூடாது.

ஒரு நாடு குணமடைவதற்கான முதல் நிபந்தனை முழுமையான உண்மையாகும். இது ஒரு பழிவாங்கல் அல்ல, மாறாக அரசை மீண்டும் நம்ப முடியுமா என்பதற்கான ஒரு பரிசோதனையாகும். எனவே, சட்டத்திற்குச் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்கப்பட வேண்டும், மேலும் அந்தச் சுயாதீனமானது நீதித்துறை பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும். அதுவே உண்மையைச் சென்றடையக்கூடிய ஜனநாயக வழியுமாகும்.

தேசிய பளுதூக்கல் விளையாட்டு விழா சிலாபத்தில் கோலாகலம்!

அறிக்கை: ஜூட் சமந்த | தொடர்பு: 071 3076445 | திகதி: 2026.06.15

இலங்கை பளுதூக்கல் (Powerlifting) சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு விழா, கடந்த 14 ஆம் திகதி நாள் முழுவதும் சிலாபம் – பம்பல பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

உடற்கட்டமைப்பு சம்மேளனத்தின் செயலாளர் ஐ.பி. நந்தசேன மற்றும் அச்சம்மேளனத்தின் உறுப்பினர் வசந்த குமார ஆகியோரின் தலைமையில் இந்த விளையாட்டு விழா இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டுச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான வீர, வீராங்கனைகள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு எடைப் பிரிவுகளின் கீழ், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பல சுவாரஸ்யமான போட்டிகள் இங்கு நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் தலைவர் திரு. ஜே.எம். அர்பத் அவர்கள் பின்வருமாறு கூறினார்:

“இந்த விளையாட்டு நமது நாட்டுக்கு இன்னும் புதியது. எனினும், பல நாடுகளில் இவ்விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டு வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், இந்த விளையாட்டை நமது நாட்டில் பிரபலப்படுத்துவதற்கு யாரிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. நாங்கள் தற்போது இந்த விளையாட்டை நாட்டின் பல மாவட்டங்களில் விரிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பல வீர, வீராங்கனைகளை இதில் இணைத்துக்கொள்ள நாங்கள் உத்தேசித்துள்ளோம்.”

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திக குணசிங்க

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

ஈஸ்டர் விசாரணைகள்: நீதிக்கான பயணமா அல்லது அரசியல் பழிவாங்கலா?

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல் என்பது இலங்கையின் நவீன வரலாற்றில் மிகவும் வேதனையான ஒரு தேசிய வடுவாகும். அன்று அப்பாவி மக்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை; மாறாக அரசின் மீதான மக்கள் நம்பிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிவது எந்தவொரு கட்சியின் அரசியல் திட்டமாகவும் இருக்கக் கூடாது. இது பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள், மத மற்றும் தேசிய நல்லிணக்கம், பாதுகாப்புப் படையின் நிரபராதியான உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் சட்ட முறைமை ஆகியவற்றுக்குச் சொந்தமான நீதிக்கான பிரச்சினையாகும்.

எனினும், இன்று ஈஸ்டர் விசாரணை தொடர்பில் வேறொரு அரசியல் செயற்பாடு காணப்படுகின்றது. முன்னாள் புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரக் கட்டமைப்புகள் அல்லது பழைய அரசியல் முகாமுக்கு நெருக்கமான நபர்கள் மீது சட்டம் செயற்படத் தொடங்கும் போது, அதனை “அரசியல் பழிவாங்கல்” எனப் பெயரிடும் பிரசாரங்கள் முன்னிலைக்கு வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது சட்டப்பூர்வமான நடைமுறையைப் பற்றிப் பேசுவது போல் தோன்றலாம். ஆனால், இதன் ஆழமான அரசியல் நோக்கம், சட்டம் செயற்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தச் செயன்முறையை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதாகும்.

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மத தீவிரவாத வலையமைப்பு ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது என்பதை ஏற்றுக்கொள்வது, அந்தத் தாக்குதல் நடைபெற எவ்வாறு இடமளிக்கப்பட்டது என்ற கேள்வியை இல்லாதொழிக்காது.

  • தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காண்பது ஒரு விடயம்.
  • அதனைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் ஏன் தவறவிடப்பட்டன?
  • முன்னெச்சரிக்கைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன?
  • விசாரணைகள் முடக்கப்பட்டனவா?
  • புலனாய்வுச் சேவைகளுக்கும் அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளுக்கும் இடையில் அசாதாரண தொடர்புகள் இருந்தனவா?
  • தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சத்தின் மூலம் அரசியல் ரீதியாகப் பயனடைந்தவர்கள் யார்?

என்பவற்றைக் கண்டறிவது மற்றுமொரு முக்கியமான விடயமாகும். “சஹ்ரான் தான் செய்தார்” என்ற பதில், “வேறு எதையும் விசாரிக்க வேண்டாம்” என்ற முடிவுக்கு இட்டுச்செல்ல முடியாது. இது சட்டத்தின் தர்க்கம் அல்ல, மாறாக உண்மையை மூடிமறைக்கும் ஒரு அரசியல் தர்க்கமாகும்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு உயர்ந்தபட்ச சுயாதீனமான வெளியை வழங்கியுள்ளதாகவே தெரிகிறது. சட்டமானது அரசியல் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அதிகாரம் கொண்டவர்களை நெருங்கக்கூடிய சூழல் உருவாகியிருப்பது, சட்டத்தின் ஆட்சியை உயிர்ப்பிப்பதாகும்.

அரசியல் பழிவாங்கலா?

சட்டம் அதிகாரம் மிக்க ஒருவரை நெருங்கியதால் மாத்திரம் அது ஒருபோதும் “அரசியல் பழிவாங்கலாக” மாறிவிடாது. அரசியல் பழிவாங்கல் ஒன்று இருக்குமானால், அது சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்பட வேண்டும். விசாரணை பழைய ஆளுங்கட்சி முகாமுக்கோ, முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது அரசியல் ரீதியாக அதிகாரம் மிக்க நபருக்கோ தொடர்புடையது என்பதற்காக மாத்திரம் அதனைப் பழிவாங்கல் எனப் பார்ப்பது, சட்டத்தின் சுயாதீனமான செயற்பாட்டிற்கு எதிரான ஒரு தற்பாதுகாப்புப் பிரசாரமாகும்.

ஜனநாயக நாடொன்றில், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் இரகசிய அதிகாரத்தின் உரிமையாளர்கள் அல்ல. அவை மக்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாகும். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அந்த நிறுவனங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். இரகசியத்தன்மை நாட்டினைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைப் பாதுகாக்க அல்ல. குறிப்பிட்ட ஒரு புலனாய்வு அதிகாரி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை, ஒட்டுமொத்த இராணுவத்திற்கும் எதிரான தாக்குதலாகச் சித்தரிப்பது முற்றிலும் தவறான ஒப்பீடாகும். இராணுவத்தின் கௌரவம் பொறுப்புக்கூறலினூடாகவே பாதுகாக்கப்படுகிறதே அன்றி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியோடுவதன் மூலம் அல்ல.

உண்மையைத் தேடும் பயணம்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கையின் அரசியல் களம் மாறியது. மக்கள் மத்தியில் அச்சம், கோபம், பாதுகாப்பு தொடர்பான அவநம்பிக்கை மற்றும் பலமான நிர்வாகம் ஒன்றிற்கான கோரிக்கை ஆகியவை ஒரே நேரத்தில் அதிகரித்தன. அரசியல்-பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் “பாதுகாப்பு” என்பது வெறுமனே ஒரு அரச சேவையாக அன்றி, அரசியல் பெறுமதி கொண்ட ஒரு மூலதனமாக மாறியது. அந்த மக்கள் அச்சத்தின் மூலம் அரசியல் ரீதியாகப் பயனடைந்த அதிகார முகாம்கள், இன்று ஈஸ்டர் உண்மையைத் தேடுவதை ஒரு சட்ட மற்றும் அரசியல் ஆபத்தாகப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

அதனால்தான், ஈஸ்டர் விசாரணையை “அரசியல் பழிவாங்கல்” எனப் பெயரிடுவது வெறுமனே ஒரு கருத்து வெளியீடு அல்ல. அது பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் ஒரு தந்திரோபாயமாகும். பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட ஒரு குற்றத்தில், நீதி என்பது உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரிகளின் பெயர்களை மீண்டும் கூறுவதல்ல; நீதி என்பது முழுமையான உண்மையாகும்.

உண்மையான தேசிய நல்லிணக்கம்

எனவே, நாட்டுக்குத் தேவையானது விசாரணையை வலுப்படுத்துவதாகும். ஆனால், அது சட்டத்திற்குப் புறம்பாக அல்லாமல், சட்டத்தின் ஊடாகவே நடைபெற வேண்டும். சந்தேக நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்புப் படையினரின் கௌரவம் ஒட்டுமொத்தமாக அபகீர்த்திக்கு உள்ளாக்கப்படக் கூடாது. அதேபோல, பாதுகாப்புப் படையின் பெயரைப் பயன்படுத்தி எவரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கக் கூடாது.

ஒரு நாடு குணமடைவதற்கான முதல் நிபந்தனை முழுமையான உண்மையாகும். இது ஒரு பழிவாங்கல் அல்ல, மாறாக அரசை மீண்டும் நம்ப முடியுமா என்பதற்கான ஒரு பரிசோதனையாகும். எனவே, சட்டத்திற்குச் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்கப்பட வேண்டும், மேலும் அந்தச் சுயாதீனமானது நீதித்துறை பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும். அதுவே உண்மையைச் சென்றடையக்கூடிய ஜனநாயக வழியுமாகும்.

தேசிய பளுதூக்கல் விளையாட்டு விழா சிலாபத்தில் கோலாகலம்!

அறிக்கை: ஜூட் சமந்த | தொடர்பு: 071 3076445 | திகதி: 2026.06.15

இலங்கை பளுதூக்கல் (Powerlifting) சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு விழா, கடந்த 14 ஆம் திகதி நாள் முழுவதும் சிலாபம் – பம்பல பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

உடற்கட்டமைப்பு சம்மேளனத்தின் செயலாளர் ஐ.பி. நந்தசேன மற்றும் அச்சம்மேளனத்தின் உறுப்பினர் வசந்த குமார ஆகியோரின் தலைமையில் இந்த விளையாட்டு விழா இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டுச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான வீர, வீராங்கனைகள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு எடைப் பிரிவுகளின் கீழ், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பல சுவாரஸ்யமான போட்டிகள் இங்கு நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் தலைவர் திரு. ஜே.எம். அர்பத் அவர்கள் பின்வருமாறு கூறினார்:

“இந்த விளையாட்டு நமது நாட்டுக்கு இன்னும் புதியது. எனினும், பல நாடுகளில் இவ்விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டு வீர, வீராங்கனைகள் பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஆனால், இந்த விளையாட்டை நமது நாட்டில் பிரபலப்படுத்துவதற்கு யாரிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. நாங்கள் தற்போது இந்த விளையாட்டை நாட்டின் பல மாவட்டங்களில் விரிவுபடுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் பல வீர, வீராங்கனைகளை இதில் இணைத்துக்கொள்ள நாங்கள் உத்தேசித்துள்ளோம்.”

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திக குணசிங்க

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular