ஜூட் சமந்த
பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் முறையான சேவைகளை வழங்கும் நோக்கில், நவீனமயமாக்கப்பட்ட சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரால் இந்த நவீனமயமாக்கப்பட்ட பிரிவு நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
புதிதாக நவீனமயமாக்கப்பட்ட இந்த போக்குவரத்து பிரிவின் மூலம் சிலாபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதி ஒழுங்குமுறைகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


