Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளம் பச்சக் காட்டு முந்தல் வெள்ளப் பிரச்சினைக்குக் கிடைத்த அதிரடி தீர்வு!

புத்தளம் பச்சக் காட்டு முந்தல் வெள்ளப் பிரச்சினைக்குக் கிடைத்த அதிரடி தீர்வு!

புத்தளம், பச்சக் காட்டு முந்தல் கிராம மக்கள் மழைக்காலம் என்றாலே எதிர்கொள்ளும் பிரதான அச்சம் வெள்ளப்பெருக்கு. புத்தளம் சோல்ட் லிமிடட் மற்றும் ரைகம் சோல்ட் லிமிடட் நிறுவனங்களுக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான கால்வாயின் ஊடாக ஏற்பட்ட இந்தத் தொடர் வெள்ள அனர்த்தம், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்து வந்தது.

தங்கள் அவல நிலையைத் தீர்க்கக் கோரி, அப்பகுதி மக்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முஹம்மட் பைசலிடம் முறைப்பாடு செய்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைக் கேட்டறிந்த அவர், இதனைப் வெறும் கோரிக்கையோடு நிறுத்திவிடாமல், புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் உடனடியாக விவாதப் பொருளாக முன்வைத்தார்.

பேச்சுவார்த்தைகளோடு நின்றுவிடாது, உரிய திணைக்கள அதிகாரிகள் சகிதம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடி களவிஜயமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் பலனாக, வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நிர்மாணப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.

இன்று (27.08.2026) வியாழக்கிழமை, குறித்த பகுதியில் மும்முரமாக நடைபெற்று வரும் நிர்மாணப் பணிகளைப் பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவருமான முஹம்மட் பைசல் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பாலாவி கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்தத் துரித நடவடிக்கையானது, பச்சக் காட்டு முந்தல் கிராம மக்களின் நீண்ட கால அச்சத்தைப் போக்கி பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

புத்தளம் பச்சக் காட்டு முந்தல் வெள்ளப் பிரச்சினைக்குக் கிடைத்த அதிரடி தீர்வு!

புத்தளம், பச்சக் காட்டு முந்தல் கிராம மக்கள் மழைக்காலம் என்றாலே எதிர்கொள்ளும் பிரதான அச்சம் வெள்ளப்பெருக்கு. புத்தளம் சோல்ட் லிமிடட் மற்றும் ரைகம் சோல்ட் லிமிடட் நிறுவனங்களுக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான கால்வாயின் ஊடாக ஏற்பட்ட இந்தத் தொடர் வெள்ள அனர்த்தம், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்து வந்தது.

தங்கள் அவல நிலையைத் தீர்க்கக் கோரி, அப்பகுதி மக்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முஹம்மட் பைசலிடம் முறைப்பாடு செய்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைக் கேட்டறிந்த அவர், இதனைப் வெறும் கோரிக்கையோடு நிறுத்திவிடாமல், புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் உடனடியாக விவாதப் பொருளாக முன்வைத்தார்.

பேச்சுவார்த்தைகளோடு நின்றுவிடாது, உரிய திணைக்கள அதிகாரிகள் சகிதம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடி களவிஜயமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் பலனாக, வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நிர்மாணப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.

இன்று (27.08.2026) வியாழக்கிழமை, குறித்த பகுதியில் மும்முரமாக நடைபெற்று வரும் நிர்மாணப் பணிகளைப் பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவருமான முஹம்மட் பைசல் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பாலாவி கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்தத் துரித நடவடிக்கையானது, பச்சக் காட்டு முந்தல் கிராம மக்களின் நீண்ட கால அச்சத்தைப் போக்கி பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular