Monday, May 4, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவரிப்பணமும் மக்கள் சலுகைகளும் எங்கே? பைஸர் முஸ்தபா கேள்வி!

வரிப்பணமும் மக்கள் சலுகைகளும் எங்கே? பைஸர் முஸ்தபா கேள்வி!

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே; பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா கேள்வி

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே? என, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்,
“ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் வழி காட்டலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மக்கள் உள்ளிட்ட நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும், கட்சியின் அபிமானிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இம்மே தினக் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா மேலும் கருத்து வெளியிடும்போது,
அரசாங்கம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகளை உரிய முறையில் வழங்க முன்வரவில்லை. மக்கள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் மீது வரி சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், நிவாரணங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. இது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் அநியாயமும் அநீதியுமாகும். எனவே, மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும், பொருளாதார ரீதியில் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சின்னாபின்னமாகிப் போகவில்லை. எமது கட்சி, இதுவரை பிரிந்து போகவும் இல்லை. கட்சி, கடந்த காலங்களைப் போல் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. மக்கள் அபிமானம் தொடர்ந்தும் எதுவித மாற்றங்களும் இன்றி அவ்வாறே பலமாக உள்ளது.

இந்த நிலைப்பாட்டை, கட்சி என்ற வகையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக வலுமிக்கதாக தக்க வைப்போம். மக்களுடன் மக்களாக தோழ் தொடுத்து முன்னேறிச் செல்வோம் என்றார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

வரிப்பணமும் மக்கள் சலுகைகளும் எங்கே? பைஸர் முஸ்தபா கேள்வி!

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே; பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா கேள்வி

அரசாங்கம் மக்களிடம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகள் எங்கே? என, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்,
“ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில், பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் வழி காட்டலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மக்கள் உள்ளிட்ட நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும், கட்சியின் அபிமானிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இம்மே தினக் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா மேலும் கருத்து வெளியிடும்போது,
அரசாங்கம் வரி அறவிட்டு வந்தாலும், மக்களுக்கான சலுகைகளை உரிய முறையில் வழங்க முன்வரவில்லை. மக்கள் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார ரீதியிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மக்கள் மீது வரி சுமத்தப்பட்டு வருகிறது. ஆனால், நிவாரணங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. இது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் அநியாயமும் அநீதியுமாகும். எனவே, மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கவும், பொருளாதார ரீதியில் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சின்னாபின்னமாகிப் போகவில்லை. எமது கட்சி, இதுவரை பிரிந்து போகவும் இல்லை. கட்சி, கடந்த காலங்களைப் போல் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. மக்கள் அபிமானம் தொடர்ந்தும் எதுவித மாற்றங்களும் இன்றி அவ்வாறே பலமாக உள்ளது.

இந்த நிலைப்பாட்டை, கட்சி என்ற வகையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக வலுமிக்கதாக தக்க வைப்போம். மக்களுடன் மக்களாக தோழ் தொடுத்து முன்னேறிச் செல்வோம் என்றார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular