இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான சுங்க இறக்குமதி வரிக்கு, 50% மேலதிக கட்டணத்தை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேலதிக கட்டணம் இன்று (16) முதல் 3 மாத காலத்திற்கு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்கள் தொடர்பான இறக்குமதிக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


