Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News2500 ஆசிரியர் நியமனங்கள் இவ்வாரம் வழங்கப்படும்!

2500 ஆசிரியர் நியமனங்கள் இவ்வாரம் வழங்கப்படும்!

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ள குரல்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
அதேவேளை, ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான நியமனக் கடிதங்கள் அந்தந்த மாகாண கல்விக் காரியாலயங்களில் வழங்கப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வியமைச்சு தற்போது மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.
RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular