கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில், தந்தை செலுத்திய டிப்பர் வாகன பின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (18-04-2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகன் தந்தை பின்புறம் கவனிக்காத டிப்பர் வாகனத்தை பின்புறம் செலுத்தியபொழுது டிப்பரின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது டிப்பர் வாகன மோதியதன் காரணமாக சிறுவர் உடல் நசுங்கி பலியானார்.
சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.