Saturday, June 7, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅரசாங்க மருந்தாளர் சங்கம் பணிப் புறக்கணிப்பில்!

அரசாங்க மருந்தாளர் சங்கம் பணிப் புறக்கணிப்பில்!

அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  1. பதவி உயர்வு முறை தொடர்பான பிரச்சனையை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை, இதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இழப்பு ஏற்பட்டமை.
  2. வகுப்பு I அதிகாரிகளுக்கான முன்மொழியப்பட்ட செயல்திறன் தடை தொடர்பாக சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேலாண்மைப் பயிற்சியை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கத் தவறியமை.
  3. பட்டதாரி பயிற்சிகளுக்கு வேறு பெயர்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தமை.
  4. பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதிப் பட்டியலைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கத் தவறியமை.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருந்தாளர் சங்கம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரச்சனையை உரிய அதிகாரிகள் தீர்க்க வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் மாதாந்த சிகிச்சை தினமாகையால் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்று மருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நோயாளர்கள் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.

    RELATED ARTICLES

    𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

    Official Instagram

    Most Popular