Thursday, July 3, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவென்னப்புவில் சிக்கிய 900 கிலோ கேரள கஞ்சா!

வென்னப்புவில் சிக்கிய 900 கிலோ கேரள கஞ்சா!

வென்னப்புவவில் 202 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் நேற்று (2) விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

இதன்போது, 900 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 4 மகசின்கள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஒன்றுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதி வழியாக பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வாகனத்தை சோதனை செய்த போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் தோட்டாக்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular