Thursday, March 19, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளத்தில் வீடுபுகுந்து வாள் வீச்சு தாக்குதல்!

புத்தளத்தில் வீடுபுகுந்து வாள் வீச்சு தாக்குதல்!

ஜூட் சமந்த

புத்தளம், செம்பந்தலுவ பகுதியில் குடிபோதையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இருவர் மீது வாள் வீச்சு தாக்குதல் நடத்தியும், பெண் ஒருவரைத் தாக்கியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமடைந்த செம்பந்தலுவ பகுதியைச் சேர்ந்த லபிர் முகமது அம்ஜான், சாவுல் ஹமீத் முகமது ரிஸ்வான் மற்றும் சாவுல் ஹமீத் ரியாசா ஆகிய மூவரும் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட லபிர் முகமது அம்ஜான் என்பவரது வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் சில, கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகத் தான் சந்தேகிக்கப்படும் நபர் குறித்து தனது நண்பர்களிடமும் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி இரவு குடிபோதையில் அம்ஜானின் வீட்டிற்கு வந்த இரு நபர்கள், இந்தத் திருட்டுச் சந்தேகம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த இரு ஆடவர்கள் மீது வாள் வீச்சுத் தாக்குதலை நடத்தியதுடன், வீட்டின் உரிமையாளரின் மனைவியையும் கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸ் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்:

வைத்தியசாலை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. மற்றைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைப் பிடிக்க பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபர், அம்ஜானின் வீட்டில் தங்க நகைகளைத் திருடியதாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்ட அதே நபர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

புத்தளத்தில் வீடுபுகுந்து வாள் வீச்சு தாக்குதல்!

ஜூட் சமந்த

புத்தளம், செம்பந்தலுவ பகுதியில் குடிபோதையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இருவர் மீது வாள் வீச்சு தாக்குதல் நடத்தியும், பெண் ஒருவரைத் தாக்கியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமடைந்த செம்பந்தலுவ பகுதியைச் சேர்ந்த லபிர் முகமது அம்ஜான், சாவுல் ஹமீத் முகமது ரிஸ்வான் மற்றும் சாவுல் ஹமீத் ரியாசா ஆகிய மூவரும் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட லபிர் முகமது அம்ஜான் என்பவரது வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் சில, கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகத் தான் சந்தேகிக்கப்படும் நபர் குறித்து தனது நண்பர்களிடமும் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி இரவு குடிபோதையில் அம்ஜானின் வீட்டிற்கு வந்த இரு நபர்கள், இந்தத் திருட்டுச் சந்தேகம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த இரு ஆடவர்கள் மீது வாள் வீச்சுத் தாக்குதலை நடத்தியதுடன், வீட்டின் உரிமையாளரின் மனைவியையும் கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸ் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்:

வைத்தியசாலை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. மற்றைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைப் பிடிக்க பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபர், அம்ஜானின் வீட்டில் தங்க நகைகளைத் திருடியதாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்ட அதே நபர் எனப் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular