Thursday, March 19, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிலாபம் பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வாசிப்புத் தளம் திறப்பு

சிலாபம் பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வாசிப்புத் தளம் திறப்பு

ஜூட் சமந்த

சிலாபம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில், அங்கு தினசரி செய்தித்தாள்களை வாசிப்பதற்கான பிரத்யேக இடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர சபை மற்றும் சுரங்க சொய்சா அறக்கட்டளை (Suranga Soysa Foundation) ஆகியன இணைந்து இந்த வாசிப்புத் தளத்தை நிறுவியுள்ளன.

பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செய்தித்தாள்களைப் பெற்று வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என சிலாபம் நகர சபை உறுப்பினர் சுரங்க சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வாசிப்புத் தளத்தை சிலாபம் நகர முதல்வர் சட்டத்தரணி சுமேத பெரேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்தித்தாள்களை வாசிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

சிலாபம் பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வாசிப்புத் தளம் திறப்பு

ஜூட் சமந்த

சிலாபம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில், அங்கு தினசரி செய்தித்தாள்களை வாசிப்பதற்கான பிரத்யேக இடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர சபை மற்றும் சுரங்க சொய்சா அறக்கட்டளை (Suranga Soysa Foundation) ஆகியன இணைந்து இந்த வாசிப்புத் தளத்தை நிறுவியுள்ளன.

பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செய்தித்தாள்களைப் பெற்று வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என சிலாபம் நகர சபை உறுப்பினர் சுரங்க சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வாசிப்புத் தளத்தை சிலாபம் நகர முதல்வர் சட்டத்தரணி சுமேத பெரேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்தித்தாள்களை வாசிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular