Tuesday, April 21, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கையில் வேரூன்றும் சர்வதேச இணையக் கொள்ளையர்கள்!

இலங்கையில் வேரூன்றும் சர்வதேச இணையக் கொள்ளையர்கள்!

ஜூட் சமந்த

இணையதளம் ஊடாகப் பண மோசடி செய்யும் நோக்கில் இலங்கையில் தங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட 152 வெளிநாட்டவர்களில் 74 பேர் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மாலை, சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பின் போது 131 சீனர்கள் (அவர்களில் 6 பெண்கள்), 10 வியட்நாமியர்கள் (அவர்களில் 3 பெண்கள்), ஒரு தாய்வான் பெண் மற்றும் ஒரு மலேசியர் என மொத்தம் 152 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவர்கள் சுமார் மூன்று மாதங்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதோடு, ‘புதிய தொழிலதிபர்களுக்குப் பயிற்சியளிப்பதாக’ விடுதி ஊழியர்களிடம் கூறி ஏமாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சோதனையை முன்னெடுத்தது.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எஸ்.டி. அபேரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் சிலாபம் மாவட்ட நீதிபதி ஜே.எஸ்.டி. வீரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றப் பொறுப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை இவர்கள் வெலிசரையில் உள்ள வெளிநாட்டவர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 15ஆம் திகதி 20 பேரும், 17ஆம் திகதி 54 பேரும் என மொத்தம் 74 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் இன்னமும் தடுப்பு முகாமிலேயே உள்ளனர்.

இந்த விடுதலையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்களுக்காகப் பிணை நின்றவர்கள் இலங்கைப் பிரஜைகள் என்பதாகும். இவர்களுக்குப் பிணை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது பிணையில் சென்றுள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் தொலைபேசிகளும் கணினிகளும் அதிகாரிகளிடம் இருந்தாலும், அவர்கள் மீண்டும் புதிய சாதனங்களை கொள்வனவு செய்து குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூற முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பாதுகாப்புத் தரப்பினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

இலங்கையில் வேரூன்றும் சர்வதேச இணையக் கொள்ளையர்கள்!

ஜூட் சமந்த

இணையதளம் ஊடாகப் பண மோசடி செய்யும் நோக்கில் இலங்கையில் தங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட 152 வெளிநாட்டவர்களில் 74 பேர் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மாலை, சிலாபம் – அம்பகந்தவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பின் போது 131 சீனர்கள் (அவர்களில் 6 பெண்கள்), 10 வியட்நாமியர்கள் (அவர்களில் 3 பெண்கள்), ஒரு தாய்வான் பெண் மற்றும் ஒரு மலேசியர் என மொத்தம் 152 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவர்கள் சுமார் மூன்று மாதங்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளதோடு, ‘புதிய தொழிலதிபர்களுக்குப் பயிற்சியளிப்பதாக’ விடுதி ஊழியர்களிடம் கூறி ஏமாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சோதனையை முன்னெடுத்தது.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் எஸ்.டி. அபேரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் சிலாபம் மாவட்ட நீதிபதி ஜே.எஸ்.டி. வீரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றப் பொறுப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை இவர்கள் வெலிசரையில் உள்ள வெளிநாட்டவர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 15ஆம் திகதி 20 பேரும், 17ஆம் திகதி 54 பேரும் என மொத்தம் 74 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்கள் இன்னமும் தடுப்பு முகாமிலேயே உள்ளனர்.

இந்த விடுதலையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்களுக்காகப் பிணை நின்றவர்கள் இலங்கைப் பிரஜைகள் என்பதாகும். இவர்களுக்குப் பிணை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது பிணையில் சென்றுள்ளவர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் தொலைபேசிகளும் கணினிகளும் அதிகாரிகளிடம் இருந்தாலும், அவர்கள் மீண்டும் புதிய சாதனங்களை கொள்வனவு செய்து குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பில்லை என்று கூற முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது பாதுகாப்புத் தரப்பினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular