Wednesday, May 6, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதவெக - காங்கிரஸ் கைகோர்ப்பு: தமிழக அரசியலில் புதிய ஆரம்பம்!

தவெக – காங்கிரஸ் கைகோர்ப்பு: தமிழக அரசியலில் புதிய ஆரம்பம்!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றன. இதனால் 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்ததால், திமுகவுடன் 2016ம் ஆண்டு முதல் தொடரும் அந்த கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நல அரசியலின் அடையாளமாகவும், அதன் தோற்றுவிப்பாளராகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், அதனை நிறைவேற்ற உதவுவதும் எங்களது அரசியலமைப்பு ரீதியான கடமையாகும். அதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனது முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP) முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்த கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பாடுபடும்.

பரஸ்பர மரியாதை, தகுந்த பங்கு மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இந்த கூட்டணி, தற்போதைய ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தொடரும்.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் உறுதிபூணுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

தவெக – காங்கிரஸ் கைகோர்ப்பு: தமிழக அரசியலில் புதிய ஆரம்பம்!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றன. இதனால் 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவுக்கு ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தேர்தலில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர்கள் ஐந்து பேருடன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்ததால், திமுகவுடன் 2016ம் ஆண்டு முதல் தொடரும் அந்த கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நல அரசியலின் அடையாளமாகவும், அதன் தோற்றுவிப்பாளராகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், அதனை நிறைவேற்ற உதவுவதும் எங்களது அரசியலமைப்பு ரீதியான கடமையாகும். அதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனது முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP) முடிவு செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு அமையும்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்த கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பாடுபடும்.

பரஸ்பர மரியாதை, தகுந்த பங்கு மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவான இந்த கூட்டணி, தற்போதைய ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் தொடரும்.

விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் உறுதிபூணுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular