Thursday, July 9, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமீரிகமவில் சிறுநீரக நோயாளர்களுக்கான அதிநவீன சிகிச்சை மையம்!

மீரிகமவில் சிறுநீரக நோயாளர்களுக்கான அதிநவீன சிகிச்சை மையம்!

இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் சுகாதாரப் பிரச்சினைகளில் சிறுநீரகக் கல் நோய் (Kidney Stone Disease) பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பப் பற்றாக்குறை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அறைகள் காரணமாக, நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தங்களின் சத்திரசிகிச்சைக்காகக் காத்துக்கிடக்கும் அவல நிலை இதுவரை நீடித்து வந்தது. இந்த நீண்டநாள் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான திட்டம் தற்போது தயார் நிலையில் உள்ளது.

நாடு தழுவிய ரீதியில் சிறுநீரக நோயாளர்களுக்குச் சேவையாற்றும் நோக்கில், அனைத்து அதிநவீன வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடமாக “மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்” கம்பீரமாக எழுந்து நிற்கிறது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) செயலணிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விசேட முன்மொழிவுகளின்படி, இலங்கை சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (SLAUS) முழுமையான அனுசரணையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி காலை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இம்மையம் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளது.

இந்த மெகா திட்டத்தின் பின்னணியில் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பங்களிப்புகள் கைகோர்த்துள்ளன. சீன அரசாங்கத்தின் 564 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அதிநவீன மூன்று மாடிக் கட்டிடமும் அதன் ஆரம்பக் கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ஆரம்பத்தில் இருந்தே இத்திட்டத்திற்குப் பக்கபலமாக இருந்த பிரபல தொழிலதிபரும் பொறியியலாளருமான நஹீல் விஜேசூரிய, சிறுநீரகக் கற்களை மிக இலகுவாகவும் நவீன முறையிலும் அகற்றுவதற்குத் தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களையும் உயர்தொழில்நுட்பங்களையும் முழு மனதுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இலங்கை மருத்துவத் துறையில் இதுவரை இல்லாத ஒரு புதிய அணுகுமுறையும் இம்மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க சுகாதாரச் சேவையில் பணிபுரியும் எந்தவொரு பகுதியைச் சேர்ந்த விசேட சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணரும், தமது நோயாளர்களை இந்த மையத்திற்கு அழைத்து வர முடியும். இங்குள்ள உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தங்களின் நோயாளர்களுக்கு உயர்திறன் வாய்ந்த சத்திரசிகிச்சைகளை அவர்களே முன்னெடுக்கலாம் என்பது இதன் தனித்துவமான அம்சமாகும்.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறப்பு விழாவில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மீரிகம மருத்துவமனையின் பணிப்பாளர் சமிந்த பிரேமரத்ன மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களின் சிறுநீரக நோய் அவஸ்தைகளுக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மீரிகமவில் சிறுநீரக நோயாளர்களுக்கான அதிநவீன சிகிச்சை மையம்!

இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் சுகாதாரப் பிரச்சினைகளில் சிறுநீரகக் கல் நோய் (Kidney Stone Disease) பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பப் பற்றாக்குறை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அறைகள் காரணமாக, நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தங்களின் சத்திரசிகிச்சைக்காகக் காத்துக்கிடக்கும் அவல நிலை இதுவரை நீடித்து வந்தது. இந்த நீண்டநாள் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான திட்டம் தற்போது தயார் நிலையில் உள்ளது.

நாடு தழுவிய ரீதியில் சிறுநீரக நோயாளர்களுக்குச் சேவையாற்றும் நோக்கில், அனைத்து அதிநவீன வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடமாக “மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்” கம்பீரமாக எழுந்து நிற்கிறது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தொற்றா நோய்கள் (NCD) செயலணிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விசேட முன்மொழிவுகளின்படி, இலங்கை சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (SLAUS) முழுமையான அனுசரணையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி காலை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இம்மையம் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளது.

இந்த மெகா திட்டத்தின் பின்னணியில் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பங்களிப்புகள் கைகோர்த்துள்ளன. சீன அரசாங்கத்தின் 564 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அதிநவீன மூன்று மாடிக் கட்டிடமும் அதன் ஆரம்பக் கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ஆரம்பத்தில் இருந்தே இத்திட்டத்திற்குப் பக்கபலமாக இருந்த பிரபல தொழிலதிபரும் பொறியியலாளருமான நஹீல் விஜேசூரிய, சிறுநீரகக் கற்களை மிக இலகுவாகவும் நவீன முறையிலும் அகற்றுவதற்குத் தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களையும் உயர்தொழில்நுட்பங்களையும் முழு மனதுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இலங்கை மருத்துவத் துறையில் இதுவரை இல்லாத ஒரு புதிய அணுகுமுறையும் இம்மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க சுகாதாரச் சேவையில் பணிபுரியும் எந்தவொரு பகுதியைச் சேர்ந்த விசேட சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணரும், தமது நோயாளர்களை இந்த மையத்திற்கு அழைத்து வர முடியும். இங்குள்ள உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தங்களின் நோயாளர்களுக்கு உயர்திறன் வாய்ந்த சத்திரசிகிச்சைகளை அவர்களே முன்னெடுக்கலாம் என்பது இதன் தனித்துவமான அம்சமாகும்.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறப்பு விழாவில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மீரிகம மருத்துவமனையின் பணிப்பாளர் சமிந்த பிரேமரத்ன மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களின் சிறுநீரக நோய் அவஸ்தைகளுக்கு மிக விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular