Tuesday, July 28, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமன்னார் அல் அஸ்ஹர் அதிபர் மாற்றம்: முடிவுக்கு வந்த போராட்டம்!

மன்னார் அல் அஸ்ஹர் அதிபர் மாற்றம்: முடிவுக்கு வந்த போராட்டம்!

கடந்த சில நாட்களாக மன்னார் மண்ணையே பரபரப்பில் வைத்திருந்த அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் பிரச்சினைக்கு, ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்பலைகளைத் தொடர்ந்து, அவரை உடனடியாக மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய தரப்பினரும் நேரடியாகக் களமிறங்கினர். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் ரிசாத் பதியுதீன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பாடசாலை அதிபரின் அதிருப்திகரமான அணுகுமுறைகள், பாடசாலை நிர்வாகத்தின் பின்னடைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் அண்மைய நாட்களாக பீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதையும் முழுமையாகப் புறக்கணித்திருந்தனர்.

சூடுபிடித்த இந்தச் சூழலில்தான், நேற்றைய உயர்மட்டக் கூட்டத்தில் தற்போதைய அதிபரை அந்தப் பதவியிலிருந்து மாற்றி, புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதே ஒரே தீர்வு என்ற தீர்க்கமான முடிவுக்கு அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.

இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்ற நிலை தணிந்துள்ளதுடன், தங்களது பிள்ளைகளை மீண்டும் வழமைபோல பாடசாலைக்கு அனுப்பி வைக்கப் பெற்றோர்கள் ஏகமனதாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஸ்தம்பித்திருந்த மாணவர்களின் கல்விப் பயணம் மீண்டும் சுமுகமாக ஆரம்பமாகவுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மன்னார் அல் அஸ்ஹர் அதிபர் மாற்றம்: முடிவுக்கு வந்த போராட்டம்!

கடந்த சில நாட்களாக மன்னார் மண்ணையே பரபரப்பில் வைத்திருந்த அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் பிரச்சினைக்கு, ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது. அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்த கடும் எதிர்ப்பலைகளைத் தொடர்ந்து, அவரை உடனடியாக மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய தரப்பினரும் நேரடியாகக் களமிறங்கினர். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் ரிசாத் பதியுதீன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பாடசாலை அதிபரின் அதிருப்திகரமான அணுகுமுறைகள், பாடசாலை நிர்வாகத்தின் பின்னடைவு மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் அண்மைய நாட்களாக பீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதையும் முழுமையாகப் புறக்கணித்திருந்தனர்.

சூடுபிடித்த இந்தச் சூழலில்தான், நேற்றைய உயர்மட்டக் கூட்டத்தில் தற்போதைய அதிபரை அந்தப் பதவியிலிருந்து மாற்றி, புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதே ஒரே தீர்வு என்ற தீர்க்கமான முடிவுக்கு அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.

இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்ற நிலை தணிந்துள்ளதுடன், தங்களது பிள்ளைகளை மீண்டும் வழமைபோல பாடசாலைக்கு அனுப்பி வைக்கப் பெற்றோர்கள் ஏகமனதாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஸ்தம்பித்திருந்த மாணவர்களின் கல்விப் பயணம் மீண்டும் சுமுகமாக ஆரம்பமாகவுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular